search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்-மகன் கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு
    X

    கொலை செய்யப்பட்ட அடக்கி-சின்ன கருப்பன்.

    தாய்-மகன் கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு

    • தாய்-மகன் கொலை வழக்கில் மர்மம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தை அடுத்துள்ள பூமலை கண்மாய் பகுதியில் வசித்து வந்த சாத்தையா மனைவி அடக்கி (வயது 46), இவரது மகன் சின்ன கருப்பன் (26) ஆகியோர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். தாய் -மகனின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோ தனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த கொலை தொடர் பாக நெற்குப்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட் டது.

    தனிப்படை போலீசார் தாய்- மகன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். ஆனாலும் தற்போது வரை கொலைக்கான காரணங்கள் முழுமையாக தெரிய வில்லை.

    கொலையாளிகள் யார் என்பது மர்மமாகவே உள்ளது. இதற்கிடையில் கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படை யில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×