search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ex-serviceman dies"

    • லாரி மீது பைக் மோதல்; முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.
    • சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது45), இவர் ராணுவத்தில் பணியாற்றி விட்டு தற்போது சிவகங்கை யில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஜெயசங்கர் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றார். அவர் மானா மதுரை அருகே கொன்னக் குளம் விலக்கு பகுதியில் சென்றபோது சாலை யோரத்தில் நின்று கொண்டி ருந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசங்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந் தார்.

    இந்த விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    ×