என் மலர்
சிவகங்கை
- மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து கணவன்-மனைவி காயமடைந்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை நேரு பஜார் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி செண்பகதேவி. இருவரும் மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் மாடு குறுக்கே வந்தது. அப்போது இருசக்கர வாகனம் மாடு மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இளையான்குடி தகியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சுகாசினி. இருவரும் காரில் கால் குளம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரோட்டோ ரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
இதில் சுகாசினி படுகாய மடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- வருகிற 23-ந்தேதி திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என்று கலெக்டர் கூறினார்.
- உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 நபர்கள், 4- நகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 117 நபர்கள், 11- பேரூராட்சிகளின் 167 வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 300 பேர் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் ஆவர்.
இந்த வாக்காளர்களில் 16 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிலிருந்து 9 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்களிக்கும் 284 பேர்களிலிருந்து 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதுகுறித்து தொடர்பு டைய உள்ளாட்சி அமைப்பு அலுவல கங்களான மாவட்ட ஊராட்சி அலுலவகம், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பேரூராட்சி அலுவல கங்களின் அறிவிப்பு பலகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிவாளரால் வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 10-ந் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு படிவங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் பரிசீலனைக்காக வருகிற 12-ந் தேதி எடுத்துக் கொள்ளப்படும்.
வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள 14-ந் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் போட்டி இருக்கு மானால் வாக்குப்பதிவு 23-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க ஒரு வாக்குச்சாவடியும், மேலும், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் ஒரு வாக்குச்சாவடி என 2 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 23-ந் தேதி அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
புதிதாக தேர்ந்தெ டுக்கப்படும் சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள், 28-ந் தேதி முதல் உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்தடை பற்றி தகவல் தெரிவிக்க மின்பொறியாளர்கள் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மின்பகிர்மான வட்டத்தில் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி அரளிக் கோட்டை, ஜமீன்தார்பட்டி, வலையபட்டி, ஏரியூர், மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி, பெருங்குடி, நாமனூர், ஒக்கூர், பர்மா காலனி, காளையார்மங்கலம் பகுதியினர் உதவிமின் பொறியாளர் மதகுபட்டி பகிர்மானம் 9445853073 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தமறாக்கி, குமாரபட்டி, கண்டாங்கி பட்டி, புதுப் பட்டி, இடையமேலூர், மங்காம்பட்டி, கோமாளி பட்டி, தேவன்கோட்டை, சிவந்திபட்டி பகுதியினர் உதவி மின்பொறியாளர் மலம்பட்டி பகிர்மானம் 9445853075 என்ற எண்ணிலும், சிவகங்கை நகர், ரோஸ்நகர், முத்துநகர், ராகினிபட்டி, சமத்துவபுரம், அரசனேரி, கிழமேடு பகுதியினர் சிவகங்கை நகர் மின்பகிர்மானம் உதவி மின்பொறியாளர் 9445853076 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
முளக்குளம், சருக னேந்தல், வேம்பத்தூர், பச்சேரி, கருங்குளம், படமாத்தூர், வாணியங்குடி, வீரவலசை, பனையூர், மானாகுடி, அரசனி பகுதியினர் ஊரகம் மின் பொறியாளர் 9445853077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட பகுதியினர் மேலும் சந்தேகங்களுக்கு சிவகங்கை மின்பகிர்மானம் உதவி செயற்பொறியாளர் 9445853074 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மாந்தாளி, சீகூரணி, உசிலங்குளம், சருகனி, காட்டாத்தி, கல்லுவழி, குரந்தனி, கோபாலபுரம் பகுதியினர் காளையார் கோவில் உதவி மின்பொறி யாளர் 94458 53079 என்ற எண்ணையும், சோழபுரம், நாலுகோட்டை, விட்டனேரி, ஒருபோக்கி, செங்குளம், ஆலங்குளம், சூரக்குளம் பகுதியினர் நாட்ட ரசன்கோட்டை உதவி மின்பொறியாளர் 94458 53081 என்ற எண்ணையும், அஞ்சாம் பட்டி, மாராத்தூர், நந்தனூர், புலிக்கண்மாய், ஆண்டுரணி, சிறுவேலங்குடி பகுதியினர் மறவமங்கலம் உதவி மின்பொறியாளர் 94458 53082 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மேற்கண்ட பகுதியினர் தங்கள் சந்தேகங்களுக்கு உதவி செயற்பொறியாளர் காளையார்கோவில் பகிர்மானம் 9445853078 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட அனைத்து மின்பகிர்மான எல்லைக் குட்பட்ட பகுதி யினர் சிவகங்கை மின்பகிர் மானம் செயற்பொறியாளர் 94458 53080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இந்த தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
- கூடுதல் வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
- துலாவூர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தானிப்பட்டி வள்ளல் கருப்பையா-சிவகாமி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டித்தரப்பட்டது. இதனை பசும்பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர்
கரு.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் ராமேஸ்வரன், கரு.சிதம்பரம், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துலாவூர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிய நகர்மன்ற நல வாழ்வு மையத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை உழவர் சந்தை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர் மன்ற நல வாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நல வாழ்வு மையத்தில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், எம்.எல்.ஏ. செந்தில்நாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மையத்தினை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்ட சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், டாக்டர்கள் கலாதேவி, அபிராமி, கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, மற்றும் கவுன்சிலர்கள் ராஜா, அயூப்கான், துபாய்காந்தி, ஜெயகாந்தன், ராமதாஸ், ராபர்ட், விஜயகுமார், வீனஸ்ராமநாதன் மற்றும் சுகாராத ஆய்வாளர்கள். அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டனர்.
- வீரய்யா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் நாடு வடக்கு தெரு சேகரம் வெளியாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நயினார் பட்டி கிராமத்தில் உள்ளது வீரய்யா சுவாமி பட்டவர் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது. தீர்த்தம் எடுத்து வந்து கோவிலை சுற்றி வலம் வந்து தீபாராதனை, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகள் பிறகு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள வெளியாத்தூர், வாணியம்பட்டி ,பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், யகருங்குளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆயா அப்புச்சி வகையறா பங்காளிகள், நயினார் பட்டி கிராமத்தார்கள் ஆகியோர் செய்திருந்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆஷா அஜித் கூறினார்.
- பால சுப்பிரமணியன் (பள்ளத்தூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் சீரமைப்பு பணிகள், புதிய சாலைப்பணிகள், வளமீட்பு பூங்காக்களில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை உள்ளிட்டவைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதியில் வசிக்கும் பொது மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென மாவட்டத்தி லுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றி யங்கள் ஆகியவைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துரிதமான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணி களுக்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.
தொடர்ந்து கானாடு காத்தான், பள்ளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வை யிட்ட கலெக்டர் அதனை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர்கள் ராதிகா ராமச்சந்திரன் (கானாடு காத்தான்), சாந்தி சிவசங்கர் (பள்ளத்தூர்), உதவி செயற்பொறியாளர் ரெங்க ராஜ், உதவிப்பொறியாளர் அன்புச்செழியன், பேரூராட்சி செயல் அலுவ லர்கள் ரமேஷ்பாபு (கானாடு காத்தான்), பால சுப்பிரமணியன் (பள்ளத்தூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனைத்து திட்டங்களின் பயனை மக்கள் உரிய முறையில் பெற வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
- திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதரக்குடி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையல் அறை கட்டிடத்தினை திறந்து வைத்தார். கலெக்டர் ஆஷா அஜீத் உடனிருந்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
முத்தமிழறிஞர் டாக்டர்.கருணாநிதி வழியில், தமிழ கத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர், அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்ட கிராமங்களில் அடிப்படை தேவைகள் அதிகரித்து வருகிறது. அதன் தேவை களை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரால் செயல் படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே அந்த திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படை யானதாகும். எனவே, தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர் மருதுபாண்டியன், ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டிமீனாள் (பாதரக்குடி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் இப்பள்ளி 10-ம், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பள்ளிக்கு எழுவன் கோட்டை, தெண்ணீர்வயல், உடப்பன்பட்டி, நாச்சியா புரம் கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பெரியகாரையில் இருந்து தேவகோட்டை நகர் பஸ் நிலையம் வரை பஸ் வழித்தடத்தில் செல்லும் நகர பஸ்சை முன்னாள் மாணவர் பூமிநாதன் முன்னிலையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கொடி யசைத்து தொடங்கி வைத்தார் மேலும் பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கவுரவித்து பள்ளி மாணவ- மாணவிகளுடன் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் சிங்காரவேலன், டிவிஷனல் மேனேஜர் தங்கபாண்டியன், தேவகோட்டை கிளை மேலாளர் சொக்கலிங்கம், பச்சைமால், பொறியாளர் மோகன், பேருந்து நிலைய பொறுப்பாளர் சந்தியாகு, ஊராட்சி மன்ற தலைவர் திருமணவயல் ராமையா, கண்ணங்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிலவிழிநாதன், அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், சாமிநாதன், இளங்குடி முத்துக்குமார் மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முதடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து நன்றி கூறினார்.
- துண்டு பிரசுரம் வழங்கி மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
சிவகங்கை
சிவகங்கை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்வாரிய அதிகாரிகள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மின்சார வாகனங்களை பயன்ப டுத்துவதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்க ளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் அதிக ளுக்கான எரிபொருள் செலவு பன்மடங்கு குறைவாக இருக்கும், சுற்றுச்சூழ லுக்கு உகந்ததாக இருக்கும்.
விபத்து க்களின் போது மின்சாரம் தானாக துண்டி க்கப்படும் என்பதால், தீப்பற்றும் வாய்ப்பு இருக்காது. மேலும், பெட்ரோல் கார்களுக்கு இணையான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் மின்சார வாகனங்க ளில் உள்ள பாதகங்கள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளிப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லஞ்செட்டி ஊரணி, கழனிவாசல் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷாஅஜித், மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது:-
பொதுமக்களின் உடல் நலனை பேணி காத்திடும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தாய்மார்க ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 5 பேருக்கு மருந்து பெட்ட கங்களையும் அமைச்சர் வழங்கினார்.
இதில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) விஜய்சந்திரன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் வீரமுத்து, காரைக்குடி நகராட்சி நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதிகாரிகளின் பேச்சை நம்பி வீட்டை இழந்து இலங்கை அகதிகள் தவிக்கிறார்கள்.
- கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கிலூரணியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 32 ஆண்டுகளுக்கு மேலாக 186 குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் அங்கு வந்த அதிகாரிகளிடம் முதல்-அமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போதுள்ள வீட்டை இடித்து விட்டு சிறிது காலம் வெளியே தங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
புதிய வீடு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறிய உறுதிமொழியால் முகாமில் இருந்த 52 குடும்பங்களை ேசர்ந்தவர்கள்புதிய வீடு கட்டுவதற்கு தங்கள் வீட்டை இடித்தனர். இதன் காரணமாக அவர்கள் வாடகை வீட்டில் குடியேறினர்.
இந்த நிலையில் அதிகாரிகள் கூறியபடி தற்போது வரை வீடுகள் கட்டி தரப்படவில்லை. இது தொடர்பாக கேட்டால் உரிய பதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இலங்கை அகதிகள் தங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
மேலும் அதிகாரிகள் கூறியபடி முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் உடனே வீடு கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






