என் மலர்
சிவகங்கை
- முத்துமாரியம்மன் கோவில் தீமிதித்து வழிபாடு நடந்தது.
- நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. விஸ்வகர்மா மகாசபை சங்கம் நடத்தும் 155-ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2-வது வெள்ளிக்கிழமை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அழகு குத்தி வந்து கோவில் முன்புறம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவழும் பிள்ளை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து வானவேடிக்கையோடு சாமியாடி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.
- மின்மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும்.
- காரைக்குடி நகராட்சி எச்சரித்துள்ளது.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சி 26-வது வார்டு பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் முத்துத் துரை, ஆணையாளர் வீரமுத்துக் குமார் ஆகியோர் உத்தரவின்படி தனிப்படை யினர் ஆய்வு செய்தனர்.
இதில் பல்வேறு இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து
10-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறியதாவது:-
காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 10 இடங்களில் மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 112 லிட்டர் வீதம் 12.08 எம்எல்டி அதாவது கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் விதியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவது கண்டறியப் பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
மேலும் காரைக்குடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக 2 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக் குமார், உதவி பொறியாளர் கள் பாலசுப்பிரமணியன், சீமா ஆகியோர் உடனி ருந்தனர்.
- நகராட்சி பூங்காவில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது.
- பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை பகுதியில் உள்ள சுந்தரபுரம் தெருவில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இதனை சுற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நூலகம், வணிக வளாகத்துடன் கூடிய குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது.
குறுகிய இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா வில் குடிநீர் குழாய்கள் திறக்க வால்வு பள்ளங்கள் 3 இடத்தில் மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அருகில் மிகவும் தாழ்வான நிலையில் அறுந்து தொங்கும் மின் சப்ளை செல்லும் மின்சார வயர்கள் செல்கிறது.
தினமும் மாலை நேரங்க ளில் மற்றும் விடுமுறை நாட்களில் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களை பூங்கா வழியே பயன்படுத்தாமல் மாற்று வழியே பயன்படுத்தி திறந்த வெளி பள்ளங்களை மூடி பூங்காவிற்க்கு கூடுதல் இடம் ஒதுக்கி விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மக்கள் தொகை தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- முடிவில் ஊராட்சி மன்ற செயலர் சோணையா நன்றி கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை கிராமத்தில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், துணை தலைவர் சக்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட தொழில் மைய ஆய்வாளர் ராஜேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் சோணையா நன்றி கூறினார்.
- தேசிய கபடி போட்டியில் மானாமதுரை பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
- லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.
மானாமதுரை
கோவாவில் பள்ளி மாணவர்களுக்கிடையிலான தேசிய கபடி போட்டி நடந்தது. யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் நடந்த இப்போட்டியில் தமிழக அணியின் சார்பில் ராமநாத புரத்தை சேர்ந்த பயிற்சியாளர் புவனேஸ்வரன் தலைமையில் மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியின் இறுதி சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இந்த அணியில் பங்கேற்ற மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் இருவருக்கும் தங்கப்பதக்கங்களும் தலா ரூ.35 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலர் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வர் அருள் ஜோசப்பின் பெட்ஷி, மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் பிருந்தா மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
- வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடந்தது.
- பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள ஊரணியில் கரைத்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மாரநாடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா நடந்தது. இதையொட்டி ஏராளமானோர் காப்புக்கட்டி ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கிராமத்தில் உள்ள அனைவரது வீடுகளிலும் முளைப்பாரி வளர்க்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் முளைப்பாரிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பெண்கள் கும்மிப்பாடல்களை பாடினர்.
முளைப்பாரி கரைப்பு நாளன்று வீடுகளில் இருந்து முளைப்பாரிகள் முளைக்கொட்டு திண்ணைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக வீரமாகாளிக்கும் பூஜைகள் நடந்தது. அதன்பின் பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள ஊரணியில் கரைத்தனர்.
- சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் சதவீதம்லம் கடன் வழங்கும் திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்க ளுக்கு 8சதவீதம், பெண்க ளுக்கு 6சதவீதம், வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படு கிறது. கைவினை கலை ஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் அதிக பட்ச கடனாக ரூ.10லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலைஃமுதுகலைதொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில் பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம்-1ன் கீழ் ரூ.20லட்சம் வரையில் 3 சதவீதம், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம் மாணவிகளுக்கு 5சதவீதம் வட்டி விகிதத்தி லும் ரூ.30 லட்சம் வரை கல்விகடனு தவிவழங்கப்படு கிறது.
சிறுபான்மையினர் பெண்களுக்கு விலை யில்லா மின்மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் திட்டம் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் பெண்களுக்கான விலையில்லா மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
கபர்ஸ்தான் மற்றும் அடக்க இடங்கள் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ தேலாயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனர மைத்தல் நிதி உதவி அளிக்கும் திட்டம் கிறிஸ்தவ தேலாயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்தவர்கள் புனிதப்பயணமாக எருசலேம் செல்வதற்கு நபர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
கிராமப்புறங்களில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவி களுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாராப்பூர் ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பலூர் கிராமத்தில் புதிய சமுதாய கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இப்பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பாகமாக ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனும், ஊராட்சி மன்ற தலைவரும் தங்கள் சொந்த நிதியில் இருந்து வழங்கி உள்ளனர். வாராப்பூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இவர் இப்பகுதி வளர்ச்சிக் காக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக நியாயவிலைக்கடை, ஆவின் பாலகம், குறுங்காடுகள் திட்டம், இயற்கை முறையில் உரம் தயாரித்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டுதல், குடிநீர் வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டினை இப்பகுதி கிராம மக்களுக்காக அரசு வழங்கும் உதவியோடு தன் சொந்த நிதியில் இருந்தும் வழங்கி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் எடுத்த பெரும் முயற்சியாக இக்கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி மதிப்பீட்டில் தனியார் கல்வி நிறுவனத்துக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நடுநிலை பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டது. இப்படி பதவியேற்ற 3 ஆண்டுகளில் அரசு வழங்கும் முத்தான பல திட்டங்களை தனது கிராம முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தி வரும் ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வலர்களும் ஊர் முக்கி யஸ்தர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி, வி.என். ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்
காளையார்கோயில்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசபரோஸ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாயதைனேஸ், சிங்கராயர், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் ஜோசப், பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், துணை செயலார்கள் ஜான் அந்தோனி, அமலசேவியர், ஜீவா ஆனந்தி, உள்ளிட்ட மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக அரசு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் வழிகாட்டி செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனைக்கு மெண்டர் செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு தேவையான செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்வதற்கு பதிலாக அங்கு புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து அதில் பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
- குடிநீர் திட்டத்துக்காக ரூ.1752 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தது.
- கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்றுவரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடும் பொருட்டு அதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 பேரூ ராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சி களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1752.73 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் முடிவுறும் தருவாயில் தற்கால மக்கள் தொகையின்படி 11.39 லட்சம் பொதுமக்களுக்கு 49.83 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். சிங்கம்பு ணரி பேரூராட்சி பகுதிக்குட் பட்ட தேனம்மாள்பட்டியில் 146 லட்சம் லிட்டர் கொள்ள வுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியையும், 1118 மிமீ இரும்பு குழாய் பதிக்கும் பணியையும் மற்றும் காரைக்குடி நகராட்சிக்குட் பட்ட தி.சூரக்குடியில் பிர தான மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவைகளின் கட்டுமான நிலைகள் மற்றும் தரம் ஆகியவைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
குடிநீர் திட்டப்பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாக பொறியாளர் நிர்மலா, திட்டக்கோட்ட உதவி நிர்வாக பொறியாளர் ஜான்சிராணி, மானாமதுரை திட்டக்கோட்ட உதவி நிர்வா பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி அருகே காமாட்சி பரமேஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- மழுவேந்தி கருப்புசாமி கோவிலில் ஆடி களரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே வேட்டையன் பட்டியில் உள்ள காமாட்சி- பரமேஸ்வரி கோவிலில் ஆடி திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் சிம்மக்கொடி ஏற்றி விழா தொடங்கியது. அதை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
விழாவில் வருகிற 29-ந் தேதி அன்னைக்கு ஊஞ்சல் தரிசனமும் நடக்கிறது. பக்தர்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு நிகழ்வும், 2-ந் தேதி திருவிளக்கு பூஜை, முளைப்பாரி விழாவும் நடை பெறும் அதைத் தொடர்ந்து 3-ந் தேதி அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
விழா ஏற்பாடுகளை வேட்டையன் பட்டி விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மழுவேந்தி கருப்புசாமி கோவிலில் ஆடி களரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் நேற்று 6 பேர் அரிவாளை சுமக்க அதன் மேல் நின்று பக்தர் ஒருவர் அருள்வாக்கு கூறினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இரவு பால்குடம், கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவிலில் அன்னதானம் நடந்தது.






