search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் தொகை தின விழிப்புணர்வு முகாம்
    X

    மக்கள் தொகை தின விழிப்புணர்வு முகாம்

    • மக்கள் தொகை தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி மன்ற செயலர் சோணையா நன்றி கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை கிராமத்தில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், துணை தலைவர் சக்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட தொழில் மைய ஆய்வாளர் ராஜேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் சோணையா நன்றி கூறினார்.

    Next Story
    ×