என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • நீர் நிலைகளில் வண்டல் மண் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
    • மனுதாரர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்தப்பத்திரம் நிறை வேற்றிக்கொள்ள வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள வண்டல் மண், கிராவல் மண்ணை விவசாயம், பொது மண்பாண்ட தொழில் பணிக ளுக்காக பொதுமக்கள் எடுத்துச் செல்ல இலவசமாக அனுமதி வழங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

    இதன்படி பயனாளிகள் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.

    விவசாய பணிக்காக வண் டல் களிமண் கிராவல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவ சாய நிலம் வைத்துள்ளார் அல்லது கிராம அடங்கல் பதிவேட்டின்படி குத்தகை பெற்று விவசாயம் செய்து வருகிறார் என்பதற்கும், அவருடைய நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை) குறித்தும் விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலு வலரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    மண்பாண்டம் தொழில் செய்பவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் சட்டம் 1983-ன் கீழ் தமிழ்நாடு மண்பாண்டம் தொழிலாளர் கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினராக இருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 75 க.மீட்டரும், எக்டேர் ஒன்றுக்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும் புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டரும் எக்டேர் ஒன்றுக்கு 22 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண், கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க கப்படும்.

    வண்டல் மண், கிராவல் மண் நீர்வளத்துறை பொறியா ர் ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் மூலம் வாகனத்தில் ஏற்றி விடப்படும். தூர்வாருதல் மற்றும் வாகனத்தில் வண்டல் மண், கிராவல் மண்ணை ஏற்றுவதற்கான கட்டணமாக முதன்மை தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளவாறு அல்லது மாற்றம் ஏதும் செய்யப்பட்ட தொகையை செயற்பொறியாளரின் பெயரில் காசோ லையாக மனுதாரரால் அர சுக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும் .

    வண்டல் மண், கிராவல் மண் எடுத்துச்செல்ல கலெக்டரின் உத்தரவு ஆணை பெற்றவுடன் அதன் படி மனுதாரர் சம்பந்தப் பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்தப்பத்திரம் நிறை வேற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே கண்மாயிலிருந்து வண்டல்மண் கிராவல் 2 மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூர் அருகே சொர்ணகாளீஸ்வரர் கோவில் பாலாலய பூஜை நடந்தது.
    • வேதாச்சார்யார்கள் யாக பூஜைகள் நடத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள தென்மாபட்டு பகுதியை சேர்ந்த வெள்ளாஞ்செட்டியாருக்கு சொந்தமான கண்டரமாணிக்கம் ஊராட்சியில் சாத்தனூர் பகுதியில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவள்ளியம்மாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு பாலாலய தச்சு என்னும் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் வேதாச்சார்யார்கள் யாக பூஜைகள் நடத்தினர். அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அரியக்குடி கணேசன் சபதி, கோவில்திருப்பணி குழு தலைவர் காரைக்குடி ராமச்சந்திரன், திருப்பத்தூரை சேர்ந்த வெள்ளாஞ் செட்டியார் வகையறா உறவின்முறை தலைவர் அனந்தராமன் மற்றும் கோவில் திருப்பணி குழு செயலாளர்களான சண்முகநாதன், முருகேசன், சம்பத் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.மேலும் பாலாலய நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி காரைக்குடியில் 9-ந் தேதி நடக்கிறது.
    • பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    சிவகங்கை

    மதுரை மண்டல கலைபண்பாட்டுதுறை உதவிஇயக்குனர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப் பாட்டில் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் சவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக ஓவியப்பயிற்சி பட்டறை நடத்தவும் அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்தப்பட உள்ளது.

    இந்த ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், பேப்பர், பனை மரம், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது. இந்த ஓவியப்பயிற்சி முகாம் வருகிற 9-ந்்தேதி அன்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    மாணவ-மாணவிகள் வரைந்த ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். இதில் கலந்து கொள்ளும் பயிற்சியாளருக்கு வரைபட அட்டை வழங்கப் படும். வரைபட பொருட்களை பயிற்சியாளர்கள் எடுத்து வர வேண்டும்.

    பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலை ஆர்வ மிக்க மாணவ-மாண விகள்பயன்படுத்தி க்கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய மதுரை மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சிங்கம்புணரியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கோட்டைவேங்கைபட்டி அமைந்துள்ள சமத்துவபுரம் வீடுகளை வருகிற 8-ந்தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா சமத்துவபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்,

    அதனைத்தொடர்ந்து தமிழக வனத்துறை சார்பில் சமத்துவபுரம் முன்பகுதியில் மரக்கன்றுகளை அமுதா நட்டார். இந்தஆய்வின்போது அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் பெரியகருப்பன் அணிவித்தார். மேலும் அங்கு உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் உணவு பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து பேரூராட்சி முன்பு கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 199 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி தூய்மை பாரதம் திட்டத்தை வலியுறுத்தி நடந்த சைக்கிள் பேரணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    இதில் சிங்கம்புணரி நகர்மன்ற சேர்மன் அம்பலமுத்து, துணைச் சேர்மன் செந்தில்குமார், செயல் அலுவலர் ஜான்முகமது ஞானிசெந்தில் மற்றும் ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணி நடைபெற்றது.
    • நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் நகரங்களின் உரிமைக்கான மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையாளர் சாந்தி, நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

    பேரணி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. குப்பைகளை மழைநீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் போடக்கூடாது.

    புதன்கிழமைதோறும் உடற் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் தற்போது நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இல்லங்களில் தினசரி குப்பை கழிவுகள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனியாக பிரித்து தங்கள் வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

    ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பிளாஸ்டிக், பாலித்தீன், பைகள், கண்ணாடி தெர்மாகோல், பேப்பர் அட்டை, பழைய இரும்பு, பழைய துணி, மரச்சாமான்கள், ரப்பர் மற்றும் தோல் பொருள்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் என மக்காத குப்பைகளை வழங்க வேண்டும்.

    புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் மக்கும் குப்பைகளான உணவுக் கழிவுகள், பழ கழிவுகள், காய்கறி கழிவுகள், மலர் கழிவுகள், இறைச்சி கழிவுகள், முட்டை ஓடு, தோட்டக் கழிவுகள் போன்றவற்றை வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைத்து வீடுகளிலும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
    • பொதுதேர்வு விடைதாள் திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் புறக்கணித்து உள்ளனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் அ.ம.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து தலைமை கழகபேச்சாளரும், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளருமான வக்கீல் குரு முருகானந்தத்தின் புதிய வழக்கறிஞர் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி தொ டங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக அம்மாவால் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தி.மு.க. அரசால் கைவிடப்பட்டு உள்ளது. அம்மா உணவகம் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது.

    விடியல் அரசு என கூறி வரும் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எவ்விதமான பயன்படக்கூடிய திட்டங்கள் எதுவும் இல்லை. தினமும் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    மின்வெட்டு மக்களை பெரிதும் பாதிப்படைய செய்து உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 அறிவித்து ஓராண்டு முடிந்தும் இன்னும் வழங்க முடிய வில்லை. மக்களுக்கு எவ்வித வகையிலும் பயன் அளிக்காத திட்டங்கள்பல இடங்களில் செயல்படுத்த ப்படுகிறது.

    குறிப்பாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டங்களை தேர்வு செய்கின்றனர். மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாத வகையில் கடலூர் மற்றும் இளையான்குடி பகுதி யில் பொதுமக்களின் எதிர்ப்பை யும் கண்டு கொள்ளாமல் புதிய பஸ்நிலையம் அமைக்க ப்படுகிறது. தற்போது அரசு பொதுதேர்வு விடைதாள் திருத்தும் பணியையும் ஆசிரியர்கள் புறக்கணித்து உள்ளனர். இதனால் தி.மு.க. அரசிற்கும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் தேர்போகி பாண்டி, மாநில அம்மா பேரவை செய லாளர் டேவிட் அண்ணா துரை, தமிழ்நாடு-பாண்டிச் சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் கார்த்திகேயன், மாநில சிறுபான்மைப்பிரிவு செயலாளர் துருக்கி ரபீக்ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் மற்றும் மாவட்ட, மானாமதுரை ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காரையூரில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
    • கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி சென்னையில் இருந்து புறப்பட்டு 7-ந் தேதி மதுரை செல்லும் அவர், இரவில் மதுரையில் தங்குகிறார்.

    மறுநாள் காலை மதுரையில் இருந்து புறப்பட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்துக்கு முதலமைச்சர் செல்கிறார். அங்கு 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரையூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும், முதலமைச்சர், திட்டங்களை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு, மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.

    ×