search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளையான்குடி பேரூராட்சி தலைவருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு
    X

    முதல்-அமைச்சர் பாராட்டு.

    இளையான்குடி பேரூராட்சி தலைவருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு

    • இளையான்குடி பேரூராட்சி தலைவருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
    • செய்யது ஜமீமா பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி பேரூராட்சி தலைவராக பதவி ஏற்ற செய்யது ஜமீமா பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி நன்றி தெரிவித்து பேரூராட்சிகளின் பொது நிதி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். தலைவர், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்களுக்கான மாதாந்திர படி தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமாவை பாராட்டினார். அவர் கூறிய கோரிக்கையின்படி 2-ம் நிலை மற்றும் முதல் நிலை பேரூராட்சிகளுக்கு பொதுநிதி உச்சவரம்பு ரூ. 4 லட்சத்திலிருந்து, ரூ.10 லட்சமாகவும், தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு உதவி இயக்குனர் அலுவலக பொது நிதி உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாகவும், கலெக்டர் நிதி ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதிகளின் உச்சவரம்பை உயர்த்தியதற்காக சிவகங்கை மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் சார்பில் இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×