என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதியுடன் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து இந்த மாதம் திறந்து விட வேண்டிய தண்ணீரையும் திறந்து விடவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 3297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 3320 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அதே போல் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக் கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ேசலம்:

    சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாைள மறுநாள் (வியாழக் கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட் மரவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்ப நாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜா ராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் கிழக்கு மின்வாரிய செயற் பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார். 

    • நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரிக்கு ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டு மாநில சேர்மன் பதவி வழங்கியதாகவும் தெரிவித்தார்.
    • தன்னிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால் ஒரு மாத காலத்திற்குள் உங்களுக்கு மாநில சேர்மன் பதவி பெற்று தருவதாகவும் முத்துராமன் கூறினார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 45). இவர் இரும்பாலை சாலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாண் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது தொழிலினை விரிவுப்படுத்திட முத்துராமன் என்பவரை அணுகினார். அப்போது முத்துராமன் அவரிடம் தான் எம்.எஸ்.எம்.இ. கவுன்சில் தேசிய சேர்மன் பதவி வகிப்பதாகவும், மேலும் நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரிக்கு ரூ. 4 கோடி பெற்றுக் கொண்டு மாநில சேர்மன் பதவி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

    தன்னிடம் ரூ.50 லட்சம் கொடுத்தால் ஒரு மாத காலத்திற்குள் உங்களுக்கு மாநில சேர்மன் பதவி பெற்று தருவதாகவும் முத்துராமன் கூறினார்.

    இதை நம்பி கோபால்சாமி கடந்த ஜூலை மாதம் 10-ந்ேததி முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளியான துஷ்வந்த் யாதவ் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் கொடுத்தார். ஆனால் கூறியபடி அவர்கள் இருவரும் கோபால்சாமிக்கு மாநில சேர்மன் பதவி வாங்கி கொடுக்க வில்லை. பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இது குறித்து கோபால்சாமி அளித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன் மற்றும் துஷ்வந்த் யாதவ் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கின் புலன் விசாரணை தற்போது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவிற்கு (சி.சி.பி) மாற்றப்பட்டது.

    இதையடுத்து மோசடி புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை நமிதாவின் கணவர் சவுத்ரி, பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு துணை தலைவர் மஞ்சுநாத் உள்பட 2 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.
    • றிப்பாக நேற்று வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.

    பரவலாக மழை

    குறிப்பாக நேற்று வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகரில் இன்று காலை 5.30 மணி முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்ற வர்கள் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    33.9 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 9 மி.மீ. மழை பெய்துள்ளது. தலைவாசல் 8, ஆத்தூர் 3, ஆனைமடுவு 3, கரியகோவில் 3, ஏற்காடு 2.4, கெங்கவல்லி 2, தம்மம்பட்டி 2, பெத்தநாயக்கன்பாளையம் 1, கரியகோவில் 0.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 33.9 மி.மீ. மழை பெய்துள்ளது.  

    • ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது:-

    ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு பண்டகசாலை, என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை, சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை, இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை, காடை யாம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் மூலம் சிவகாசியில் உள்ள அங்கீக ரிக்கப்பட்ட பட்டாசுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களி டமிருந்து பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.70 லட்சம், சேலம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ.9 லட்சம், ஆத்தூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ. 7.50 லட்சம், என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.4 லட்சம், சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.6 லட்சம், இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.2 லட்சம், காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.1.50 லட்சம் ஆக மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது.

    கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். இந்த பட்டாசு விற்பனையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன் பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற் பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • ஓமலூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    சேலம்:

    மேட்டூர் மின் பகிர்மான வட்டம் ஓமலூர் கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது புதன் கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
    • மாவட்டம் முழுவதும் 6,200 ஏக்கரில் மாமரங்கள் உள்ளன. குறிப்பாக அல்போன்சா, குண்டு, மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த் ரக பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, தலைவாசல், வரகம்பாடி, ஜலகண்டா புரம், நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், அயோத்தியா பட்டணம், குப்பனூர் உள்பட மாவட்டம் முழுவதும் 6,200 ஏக்கரில் மாமரங்கள் உள்ளன. குறிப்பாக அல்போன்சா, குண்டு, மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த் ரக பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இதன் விளைச்சலை பொருத்தவரை டிசம்பரில் பூ பூக்கும். அதன் பிறகு நன்கு வளர்ந்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் விளைச்சல் தரும். சீசன் காலத்தில் மாவட்டத்தில் 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

    சேலம் மாம்பழம் ருசி மிகுந்தது என்பதால் சீசன் காலத்தில் எப்போதும் அதற்கு மவுசு இருக்கும். இந்த பழங்கள் பெரும்பாலும் உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கப்படுகின்றன.

    மாவட்டத்தில் இருந்து 30 சதவீதம் மாம்பழங்கள் டெல்லி மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்க ளுக்கும், மலேசியா, துபாய், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சேலம் அல்போன்சா பழங்கள் ஜூஸ் நிறுவனங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன .

    இது பற்றி சேலம் மாவட்ட விவசாயிகள் கூறுகையில், உழவு செய்து தண்ணீர் ஊற்றி உரங்கள் வைத்து மா மரங்கள் பராமரிக்கப்படுகின்றன. 2 முதல் 3 முறை மருந்து அடிக்க வேண்டும். பராமரிப்புக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவாகிறது.

    ஏப்ரல் மாத தொடக்கத்தில் மா விளைச்சலுக்கு வந்து விடுகிறது. அதன் பிறகு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் விளையும் மாங்காய் மூலம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தரத்தை பொறுத்து மாங்காய்கள் விற்பனை ஆகிறது. மொத்தமாக வியாபாரி களும் கொள்முதல் செய்து வெளிமாவட்டம், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் வியாபா ரிகளுக்கு ஓராண்டு வருமானம் ஒரே மாதத்தில் கிடைப்பதாக விவசாயிகள் பெருமிதம் தெரிவித் துள்ளனர்.

    • மல்லூர், வேம்படிதாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர், வேம்படிதாளம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே மல்லூர் நகர், பனமரத்துப் பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3. கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி, இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
    • போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை வேலம்பட்டி நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜூ(வயது 33) விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வேலம்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில், ராஜூ அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை சேகரித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதுடன் ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் காயமடைந்த ராஜூ மயங்கி விழுந்தார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவர், தனது உறவினர் மகன் ராமன் என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனடியாக ராமன் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவை மீட்டு, காரில் ஏற்றிச்சென்று வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக காரிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் கரியகோவில் போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ராஜூவை துப்பாக்கியில் சுட்ட நபரை வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது.
    • சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது.

    சேலம்:

    தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது. நடப்பாண்டு தீபாவளியையொட்டி கூடுதல் மதுபானங்களை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதியும், தீபாவளி நாளான 12ம் தேதியும் மனுபானங்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2 நாளில் ரூ.467 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. சேலம் மண்டலத்தை பொறுத்தமட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் சுமார் 900 டாஸ்மாக் மது பான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளியையொட்டிய 2 நாட்களிலும் பிராந்தி வகைகள், பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவு வாங்கிச் சென்றனர். இதனால், சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது. 2நாளிலும் சேர்த்து, ரூ.86.40 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகம் என டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அணையில் இருந்து காவிரியில் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
    • இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிந்துள்ளது. நேற்று 5 ஆயிரத்து 415 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 297 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று 59.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 60.70 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    ×