search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61 அடியை எட்டியது
    X

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61 அடியை எட்டியது

    • மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது.
    • குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்தது. இதே போல் கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும், மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்தது.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று 61 அடியாக உயர்ந்து உள்ளது. சுமார் 31 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதே போல் அணைக்கு வினாடிக்கு 3332 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×