என் மலர்
நீங்கள் தேடியது "7 ஆடுகள் பலி"
- கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன.
- பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம் அல்லது சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருகின்றன. இதனால் ஆடு வளர்ப்போர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (35) என்பவர் தான் வளர்த்து வரும் வெள்ளாடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று பகலில் திடீரென அங்கு வந்த சில தெரு நாய்கள் 7 ஆடுகளை கடித்து கொன்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இதே போல் முத்துக்குமார் நகர் என்ற இடத்தில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து படுகாயம் அடைந்தன. அந்த ஆடுகள் உரிமையாளர்களால் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை வெள்ளகோவில், கல்லாங்காட்டுவலசு, அய்யனூர், திருமங்கலம், கச்சேரி வலசு, நாச்சிபாளையம், காடையூரான் வலசு உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் நாய்கள் கடித்து இறந்துள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் விட வேண்டும், இறந்து போன ஆடுகளுக்கு உண்டான உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அல்லது சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
- மலர்க்கொடி (40) விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி ரெட்டிபட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி (40).
விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
மர்ம விலங்குகள்
நேற்று அவர் அப்பகுதி உள்ள தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது அப்பகுதியில் நுழைந்த மர்ம விலங்குகள் சில திடீரென்று ஆடுகளை கடித்துக் குதறியது.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன.
அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது தோட்டத்தில் கட்டி இருந்த 11 ஆடுகளில் 7 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்திருந்தது. இதனால் அவை ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள கால்நடைத்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆடுகள் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் அடிக்கடி இது போன்று மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிர் இழப்பதால் தங்களுக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
- லாரி மோதி 7 ஆடுகள் பலியாகின
- பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே களரம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் செந்தில் (வயது45). இவரது மனைவி தனலெட்சுமி. இவர் வளர்க்கும் ஆடுகளை அருகிலுள்ள வயலில் மேய்த்து விட்டு பட்டியில் அடைப்பதற்காக ஓட்டி சென்றார்.
அப்போது துறையூர் - பெரம்பலூர் செல்லும் சாலையில் மர இழைப்பு பட்டறைக்கு எதிரே வந்த போது அவ்வழியே அதிவேகமாக வந்த சிமெண்ட் லாரி ஆடுகள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்தில் இறந்தது, மேலும் ஒரு ஆடு காயமடைந்தன.
இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 50க்குமேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவிடத்திற்கு சென்று மறியல் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விபத்தினை ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இறந்த ஆட்டிற்கு நிவாரண தொகை பெற்றுத்தரப்படும் என உறுதி கூறியதன்பேரில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






