என் மலர்tooltip icon

    சேலம்

    • வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மெகராஜ் (22), விவசாயியான இவர் மாங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
    • இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் சென்ற வர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    சேலம் கருப்பூரை அடுத்த வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மெகராஜ் (22), விவசாயியான இவர் மாங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    திடீர் மாயம்

    இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியில் சென்ற வர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மெகராஜ் வெளியில் சென்றதும் அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்தியதும் தெரிய வந்தது. அப்பாது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது மெகராஜ் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

    கிணற்றில் பிணம்

    பின்னர் சம்பவம் குறித்து கருப்பூர் போலீசாருக்கும் தீய ணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அவர்கள் மெகராஜ் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.

    தொடர்ந்து போலீசார் அவரை அழைத்து சென்ற வர்களிடம் விசாரணை நடத்திய போது, ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகவும், தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றிற்கு சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் கூறினர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக லாரி தொழில் முக்கிய இடம் வகிக்கிறது .
    • தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் அதிக அளவில் லாரிகள் இயக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக லாரி தொழில் முக்கிய இடம் வகிக்கிறது . தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் அதிக அளவில் லாரிகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருந்து நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன.

    லாரிகள்

    குறிப்பாக சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், கல் மாவு, துணி வகைகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன. வட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு, துணி வகைகள், மசாலா பொருட்கள், மளிகை ,சாமான்கள் அதிக அளவில் சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகின்றன.

    இதனை நம்பி டிரைவர்கள், கிளீனர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள், புக்கிங் ஏஜென்ட்கள். உதிரிபாகக் கடைகள், பெட்ரோல் பங்குகள், லாரி பட்டறைகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். சரக்கு போக்குவரத்தில் லாரிகள் முக்கிய இடம் வகித்து வருகிறது.

    இடவசதி இல்லை

    ஆனால் லாரிகள் நிறுத்துவதற்கு சேலத்தில் போதுமான இட வசதிகள் இல்லாததால் லாரி டிரைவர்கள் தினமும் புலம்பி வருகிறார்கள். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் சேலம் செவ்வாப்பேட்டை லாரி மார்க்கெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த லாரிகள் நிறுத்துமிடத்தில் கழிப்பிட வசதிகள் குடிநீர் வசதிகள் சரியாக இல்லை. இருக்கும் கழிப்பறைகளும் பூட்டியே கிடக்கின்றன. இதனால் டிரைவர், கிளீனர்கள் அவசரத்துக்கு கூட அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் அருகில் ரெயில்வே குட்செட் உள்ளதால் அங்கிருந்து பாம்பு உள்ளிட்ட பூச்சிகளும் வருவதால் டிரைவர் மற்றும் கிளீனர்கள் லாரிகளில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.சாலையோரம் நிறுத்தினாலும் லாரிகளில் பொருட்கள் திருட்டு போகிறது.

    இதனால் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதிகளிலேயே லாரிகளை நிறுத்தும் சூழல் உள்ளது. ஆனால் அங்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் டிரைவர்கள் தினம் தினம் இரவு நேரங்களிலும் தூங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    கடந்த 2007-ஆம் ஆண்டு லாரி நிறுத்துவதற்கு வசதியாக ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் 15 ஏக்கர் நிலம் பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னரும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் லாரி மார்க்கெட் புதிதாக அமைக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த திட்டம் நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காணல் நீராக காட்சியளிக்கிறது.

    இதனால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் லாரிகள் நிறுத்த நவீன வசதிகளுடன் புதிய இடம் வழங்க வேண்டும் என்ற குரல் 20 ஆண்டுகளாக ஒலித்து வருகிறது .

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது சேலத்தில் லாரி மார்க்கெட் அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கையாகும்.வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாகிர் அம்மாபாளையத்தில் சேகோ சர்வ் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் நிறைவேற்றப்படாமல்.

    திட்டம் கைவிடப்பட்டது நாங்களும் பலமுறை லாரி மார்க்கெட் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் அதனை யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் லாரிகளை நிறுத்துவதற்கு சேலத்தில் சரியான இடம் இல்லாமல் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் தவித்து வருகிறார்கள் . எனவே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சேலத்தில் லாரி நிறுத்த நவீன லாரிமார்க்கெட் அமைத்து இதற்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது ஒட்டுமொத்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

    ஓமலூர்:

    ஓமலூர் வட்டாரத்தில் கல்குவாரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. அதிலும், காடையாம்பட்டி தாலுக்காவில் மிக அதிகமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 74 கிரஷர்கள், 50 கல்குவாரிகள் உள்ளன.

    போராட்டம்

    இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் தற்போது எம்.சாண்ட், ஜல்லி ஆகியவை ஒரு யூனிட் ரூ.200 வீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.3 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500-ஆகவும், பி.சாண்ட் ரூ. 4 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போல் ஒரு யூனிட் 40 எம்.எம், 30 எம்.எம் ஜல்லி கற்கள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு யூனிட் சிப்ஸ் ஆயிரத்து 800 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினர். ஆனால், தற்போது ஒரு யுனிட் சிப்ஸ் 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 2 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற கல் பவுடர், தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    இது குறித்து சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் ராஜா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தவில்லை. தற்போது கிரஷர் உதிரிபாகங்கள் விலை, டீசல் விலை, மின் கட்டண உயர்வு ஆகியவை பல மடங்கு உயர்ந்து விட்டது. அதே போல தொழிலாளர்கள் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட விலையை ஒப்பிட்டால், சேலத்தில் விலை குறைவுதான். அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாகவே விற்பனை செய்யபடுவதால், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திவ்யா உள்பட 2 பேரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல அதிர்ச்ச தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக விபசாரம் அதிக அளவில் கொடி கட்டி பறப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரபரப்பு புகார்கள் சென்றது .

    இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் போலீசார் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதையடுத்து அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் விபசாரம் நடப்பதாக கூறப்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பெண்கள் 20 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதில் முக்கிய நபர்களான சேலம் மாவட்டம் பூலாவரி ஏர்வாடி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (31) மற்றும் சேலம் ஜாகீர் அம்மாபாளைம் பொன்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா (36 ) ஆகியோர் ஜாகீர் அம்மாபாளையம் மற்றும் காசக்காரனூர் பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடந்த 20-ந் தேதி திருவாக்கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்த சிலரிடம் நெடுஞ்சாலை நகரில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று தியாகராஜன் அழைத்து உள்ளார்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் தியாகராஜன் மற்றும் திவ்யா உள்பட சிலர் சேர்ந்து அந்த பகுதியில் 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யபபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் விபசார தொழிலில் மூலகாரணமாக செயல்பட்ட தியாகராஜன் மற்றும் திவ்யா ஆகியோர் அப்பாவி பெண்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறி சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள 2 பேரிடமும் அதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

    இதற்கிடையே போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு-

    ஓமலூர் பகுதியை சேர்ந்த திவ்யா சுகாதாரத்துறையின் கீழ் அரசு ஆஸ்பத்திரிகளில் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் தற்காலிக ஆலோசாகராக பணி புரிந்து உள்ளார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அவர் பின்னர் ஓமலூருக்கு இடமாறுதலாகி சென்றார்.

    அப்போது விபசாரத்தில் ஈடுபட்டு ஆஸ்பத்திரிக்கு கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

    மேலும் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அதற்கு தேவையான மருந்து மாத்திரைகளை ரத்தத்தை பரிசோதனை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும் எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம் என்பதால் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இந்த மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

    அதன்படி கவுன்சிலிங்குக்கு வந்த ஏராளமான பெண்களின்அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அப்போது அவர்களிடம் இனிக்க இனிக்க பேசும் திவ்யா நான் சொல்வதை கேட்டால் நீங்கள் ஏழ்மையில் இருந்து மீண்டு பல லட்சம் சம்பாதிக்கலாம், வசதியாக கார், பங்களா என்று வாழலாம் என்று கூறி மயக்கி உள்ளார்.

    இதனை நம்பிய பெண்களை தனது வலையில் வீழ்த்தி புரோக்கர்கள் மூலம் முக்கிய நபர்களுக்கு அனுப்பி உள்ளார். அதன்படி சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி என பாலியல் தொழில் தொடர்பான கவுன்சிலிங்கிற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களை 6 மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது.

    மேலும் வறுமையில் வாடிய கர்ப்பிணி பெண்களின் போட்டோக்களை தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட வசதி படைத்தவர்களுக்கு ஆன்லைனில் அனுப்பி தங்களது வலையில் வீழ்த்தி தொழிலை விரிவு படுத்தி உள்ளார். இதன் மூலம் திவ்யா மற்றும் அவரது கூட்டாளிகள் பல லட்சங்களை அள்ளியதும் இதன் மூலம் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது. இதற்கு அவரது கணவரான மாநகராட்சி ஊழியரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ஒரே நாளில் பலருக்கு ஒரு பெண்ணை அனுப்பி அதிக அளவில் பணத்தை சம்பாதித்து விட்டு ஒரு சிறிய தொகையை மட்டும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வழங்கி வந்ததும் தெரிய வந்தது. தொடர் விசாரணை மூலம் இந்த சம்பவங்கள் அறிந்த போலீசாரே திகைத்து உள்ளனர். இதையடுத்து தான் அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் திவ்யா உள்பட 2 பேரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மேச்சேரியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் மீது மேச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    • மறியலில் ஈடுபட்ட சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேட்டூர்:

    நெய்வேலியில் என்.எல்.சி நிர்வாகம் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு சென்ற பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து சேலம் மாவட்டம் மேச்சேரியில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ தலைமையில் தொப்பூர் - பவானி சாலை மேச்சேரி பஸ் நிறுத்தம் அருகே பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வன்னியர் சங்க சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் ஒகேனக்கல், சேலம், மேட்டூர், தர்மபுரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து தலைமையில் போலீசார் அரசு பஸ் ஒன்றை அங்கு கொண்டு வந்தனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பஸ் மீது கல் வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ் டிரைவர் காயமின்றி தப்பினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட பா.ம.க நிர்வாகிகள் 110 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    இந்த நிலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மேச்சேரியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் மீது மேச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் மறியலில் ஈடுபட்ட சதாசிவம் எம்.எல்.ஏ உள்பட 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த 50 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக 103.35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் மளமளவென சரிந்தது.

    இதனால் 3 லட்சம் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.

    இதன் காரணமாக தமிழகத்துக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி வீதம் முதலில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் தண்ணீர் திறப்பு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரத்தொடங்கியது. பின்னர் அங்கிருந்து புதன்கிழமை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 அடியாக இருந்தது. அது இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 18 ஆயிரத்து 58 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த 50 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.53 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 9 ஆயிரத்து 200 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    • அறுவை சிகிச்சைக்கு AB+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது.
    • ரத்த தானம் செய்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    சேலம்:

    டெல்லியை சேர்ந்த ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவதற்காக மாற்று கல்லீரல் பெறுவதற்கு விண்ணப்பித்து காத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த 20 வயது இளம்பெண் விபத்தில் மூளைச்சாவடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து கல்லீரலுக்காக பதிவு செய்து காத்திருந்த டெல்லியை சேர்ந்தவருக்கு, இளம்பெண்ணின் கல்லீரலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்காக முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் கல்லீரல் கோவை மருத்துவமனையில் இருந்து 2 மணி நேரத்தில் சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு AB+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் அவசரம் கருதி சீருடையிலேயே உடனடியாக காவிரி மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர் அங்கு ரத்த தானமும் செய்தார்.

    அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கி நேற்று காலை 6 மணி அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. தற்போது கல்லீரல் பொருத்தப்பட்டவர் நலமாக உள்ளார்.

    இதையடுத்து கால நேரம் பாராமல் உடனடியாக வந்து ரத்த தானம் செய்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    இந்த தகவல் அறிந்த பல்வேறு தரப்பினரும், போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காடு அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் -பாக்கி யலட்சுமி தம்பதியின் மகள் செல்வி இன்பத்தமிழ்.
    • மாற்றுத்திறனாளியான இவர் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் -பாக்கி யலட்சுமி தம்பதியின் மகள் செல்வி இன்பத்தமிழ். (வயது 17).

    இம்மாணவி நாகலூர் அரசு மாதிரி பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியான இவர் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.

    இந்திய அளவில் 2-ம் இடம்

    சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற குட்டை மனிதர்களுக்கான விளை யாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தன் திற மையால் இன்பத்தமிழ் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்தார். அதே போட்டியில் சேலம் வலசை யூரை சேர்ந்த மாணவி வெண்ணிலா 3-ம் இடம் பிடித்தார்.

    இதன் மூலம் மாணவி இன்பத்தமிழ் , நாளை முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை ஜெர்மனி நாட்டில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உலக அளவில் 8-ம் முறையாக நடைபெறும் குண்டு எறிதல் போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் பங்கேற்பதற்காக மாணவி இன்பத்தமிழ் இன்று காலை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஜெர்மனிக்கு சென்றார்.

    அவருடன் அதே போட்டியில் 3-ம் இடம் பிடித்த மாணவி வெண்ணிலா, அவர்களது பயிற்சியாளர் உலகநாதன், உடற்கல்வி ஆசிரியர் ராேஜந்திரன் சென்றனர்.

    நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்

    இது பற்றி மாணவி இன்பத்தமிழ் கூறியதாவது:-

    என்னுடைய திறமைக்கு அடித்தளமாக இருந்த தாய்- தந்தை, ஆசிரியர்கள், நண்பர்கள், எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஜெர்மன் நாட்டில் நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.

    ஊக்கத் தொகை குவிகிறது

    போட்டியில் சாதனை படைத்த மாணவி இன்பத்தமிழை ஏற்காடு பகுதி கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.

    சிவலிங்கம், மாணவிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாணவிக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுப்ப தாக உறுதி அளித்தார்.

    மேலும் ஏற்காடு ஒன்றிய தி.மு.க சார்பாக மாணவி இன்பத்தமிழுக்கு ஏற்காடு ஒன்றிய செயலாளர் கே.வி ராஜா வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார். அதுபோல் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை அமைப்பாளர் எம்.வி.எஸ் பாபு வாழ்த்து கூறி ஊக்கத் தொகை வழங்கி உதவிகள் தேவைப்படும் போது விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் செய்து தரப்படும் என்ற உறுதி அளித்தார். மஞ்சகுட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா ராமசந்திரன் வாழ்த்து தெரிவித்து ஊக்கதொகை வழங்கினார்.

    • கோவிந்தபாடி, கருங்கல்லூர், பண்ணவாடி, செட்டிபட்டி, கத்திரி பட்டி, கோட்டையூர் ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.
    • தனியார் வேளாண் நர்சரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மிளகாய் பயிர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் கொளத்தூர் கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலையில் 100- கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் மிளகாய் செடிகளு டன் மறியலில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    கொளத்தூர் ஒன்றியத்தில் மிளகாய் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

    மிளகாய் சாகுபடி

    கோவிந்தபாடி, கருங்கல்லூர், பண்ணவாடி, செட்டிபட்டி, கத்திரி பட்டி, கோட்டையூர் ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர். பயிர் செய்து 3 மாதத்தில் மிளகாய் அறுவடை செய்யலாம், முதல் இரண்டு மாதத்தில் பச்சை மிளகாயாகவும், அடுத்து பழுத்த மிளகாய் அறுவடை செய்யப்படும்.

    இந்நிலையில் மூன்று மாதத்திற்கு மேலாகியும் செடிகளில் மிளகாய் காய்க்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதனை அடுத்து மிளகாய் நாற்று விற்பனை செய்த தனியார் வேளாண் நர்ச ரியை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    மறியல்

    தனியார் வேளாண் நர்சரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மிளகாய் பயிர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டும் கொளத்தூர்

    கர்நாடகா மாநிலம் மைசூர் செல்லும் சாலையில் 100- கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் மிளகாய் செடிகளு டன் மறியலில் ஈடுபட்டனர்.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    பேச்சு வார்த்தை

    இதுபற்றி தெரிவித்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் எம்.எல்.ஏ., விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.மேலும் அரசு அதிகாரிகளிடம் உடனே பொது மக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

    • சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
    • சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் பல காய்கறி மார்க்கெட்கள் உள்ளன. இங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங் களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    தக்காளி

    ரூ.120 ஆக நீடிப்பு

    சமீப காலமாக சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் அதன் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து அதே விலை நீடித்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் 70 முதல் 90 ரூபாய் வரையும் விற்பனையாகிறது .

    பீன்ஸ் ரூ. 105

    உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு, உருளை கிழங்கு 34, பெரிய வெங்காயம் 25-30, பச்சை மிளகாய் 70-75, கத்திரி 30-36, வெண்டைக்காய் 30-32, முருங்கைக்காய் 30-40, பீர்க்கங்காய் 40-44, சுரக்காய் 20-25, புடலங்காய் 24-26, பாகற்காய் 50-55, தேங்காய் 20-28, முள்ளங்கி 18-20, பீன்ஸ் 95-105, அவரை 50-55, கேரட் 56-62, மாங்காய் 25-30, வாழைப்பழம் 30-55, கீரைகள் 20-24, பப்பாளி 20-24, கொய்யா 30-45, மாம்பழம் 40-60, ஆப்பிள் 180, சாத்துக்குடி 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.   

    • சேலம்- –சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு வாமனக்கல் கேட்பாரற்று கிடந்தது.
    • இது மட்டுமின்றி பெருமாள் கோவிலின் நிலத்தை அப கரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதை யும் இந்த வாமனக்கல் உணர்த்துகிறது.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் பெருமாள் கோவிலுக்கு தானம் செய்யப்படும் நிலத்தின் எல்லைக்கல்லில் வாமனன் உருவம் பொறிக்கப்படுவது முன்னோர்களிடையே மரபாக இருந்துள்ளது.

    கோவிலுக்கு தானம் கொடுத்த நிலத்தை அப கரிப்பவர்கள், வாமனனால் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கையில் வாமனன் உருவத்தை பொறித்ததாக கருதப்படுகிறது.

    சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் சேலம்- –சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு வாமனக்கல் கேட்பாரற்று கிடந்தது. இந்த கல்லில் வா மனன் உருவம் மட்டுமின்றி மேற்பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்களும், வா மனன் கீழ் நோக்கிய வலது கையில் கமண்டலமும், மேல் நோக்கிய இடது கை யில் குடையும் பொறிக்கப் பட்டுள்ளது. சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை யாரும் அழிக்கக் கூடாது என்பது இந்த குறியீட்டின் பொருளாகும்.

    இக்கல்லை கண்டறிந்த சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர், வரலாற்று சிறப்பு மிக்க இந்த வாம னக்கல்லை பாதுகாக்குமாறு இப்பகுதியை சேர்ந்த தன்னார்வ லர்களிடம் கேட்டு க்கொண்டனர். இதனையடு த்து, இக்கல்லை மீட்ட இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பேரூராட்சி அலுவல கத்தின் கிழக்குப்புற சுற்று சுவருக்கு அருகில் நட்டு வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த இளை ஞர்களுக்கு சேலம் வர லாற்று ஆய்வு மையத்தினர் பாராட்டு தெரி வித்துள்ள னர்.

    வாமனக்கல் அமைப்பது ஏன்?

    பெரு மாளின் அவதாரங் களில் 5- வது அவதாரமாக வாமனன் அவதாரம் குறிப்பிடப்படுகிறது. பிரகலாதனின் பேரன் மாவலியின் செருக்கை அடக்க திருமால், வாமனன் வடிவம் கொண்டு மாவலி யிடம் 3 அடி நிலம் கேட்ட தாகவும், ஒரு அடியில் வானத்தையும், 2-வது அடியில் பூமியையும் அளந்து விட்டு 3-வது அடியை வைக்க இடமின்றி, மாவலி யின் தலையில் வாமனன் வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையிலே பெருமாள் கோவிலுக்கு முன்னோர்கள் நிலம் தானம் செய்தால் அந்த எல்லைக்கல்லில் வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட தாக கருதப்படுகிறது. இது மட்டுமின்றி பெருமாள் கோவிலின் நிலத்தை அப கரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதை யும் இந்த வாமனக்கல் உணர்த்துகிறது.

    • சேலத்தில் இருந்து திருப்பூர் வரை 6 ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்தனர்.
    • ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.2.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    சேலம்:

    ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சேலத்தில் இருந்து திருப்பூர் வரை 6 ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்தனர்.

    அப்போது டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள் , அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 419 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.2.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரெயிலில் பயண சீட்டு இன்று பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம், அவர்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதுடன் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×