search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for Police"

    • போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா (தெற்கு), கவுதம் கோயல் (வடக்கு), கூடுதல் கமிஷனர் ரவிசந்திரன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மனநல டாக்டர்கள், விவேகானந்தன், தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று மன அழுத்தத்தை போக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

    • கோபிசெட்டிபாளையத்தில் போலீசார்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் கண்கள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையத்தில் போலீசார்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தொடங்கி வைத்தார்.

    இந்த முகாமில் போலீசாருக்கு கிட்ட ப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்கள் சம்பந்த மான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    முகாமில் கோபி உட்கோட்டத்துக்கு உட்பட்ட கோபி, சிறுவலூர், கவுந்தப்பாடி,நம்பியூர்,கடத்தூர், வரப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்ட ர்கள். ஏட்டுகள், இரண்டாம் நிலை, முதல் நிலை போலீ சார், போக்குவரத்து போலீ சார் என ஏராளமனோர் கண்சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் ஈரோடு டாக்டர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.

    ×