என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மழை வேண்டி கூழ் ஊற்றி கிராம மக்கள் வழிபாடு
Byமாலை மலர்2 Aug 2023 8:04 AM GMT
- பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மயிலைமலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
- நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுதானியங்களில் கூழ் சமைத்து அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மயிலைமலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் இந்த அம்மன் கோவிலில் திருவிழா, நேற்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுதானியங்களில் கூழ் சமைத்து அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி கூழ் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். சக்தி வாய்ந்த தெய்வமான முத்து மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்துள்ளதால் நல்ல மழை பெய்து வறட்சி நீங்கி வளம் கொழிக்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X