என் மலர்
சேலம்
- வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.
- இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
சேலம்:
சேலம் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.
19 வயதுக்கு உட்பட்ட இந்த போட் டியில் ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. முடிவில் பெண்கள் பிரிவில் சேலம் மற்றும் சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நேற்று மாலை விளையாடின. இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட் டத்தை தட்டி சென்றது. சென்னை அணி 2-ம் பரிசும், ஈரோடு அணி 3-ம் பரிசும் கிருஷ்ணகிரி அணி 4-ம் பரி சும் பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் கோவை மற்றும் நெல்லை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று மோதின. முடிவில் கோவை அணிமுதலிடமும், நெல்லை அணி இரண்டாம் இடமும் நாகை அணி மூன்றாம் இடமும், கிருஷ்ணகிரி அணி நான்காம் இடமும் பிடித்தன. இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கைப்பந்து அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலா தேவி, ரான்சன், லாரன்ஸ் பாஸ்கர், டாக்டர். செந்தில் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ராமாபுரம் காட்டு பிள்ளையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது அண்ணன் விஜயன்.
இவர்களுக்கு பூர்வீக சொத்தாக 4 1/2 ஏக்கர் நிலம், 9 தறி பட்டறைகள் உள்ளது.
விஜயன் இறந்த நிலையில் பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொள்வதில் கோபால், விஜயன் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 30-6-2017 அன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலை, விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி, குருசாமி ஆகியோர் இரும்பு ராடால் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த கோபால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குணசேகரன், அவரது உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7000 அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இதில் 6-வது குற்றவாளியான குருசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
- சுதந்திர தினவிழாவை யொட்டி தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
- சேலம் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது-
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை யொட்டி தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
திடீர் ஆய்வு
இதை தொடர்ந்து தேசிய விடுமுறையான சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா? என்று சேலம் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சேலம், மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், சங்ககிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முன் அனுமதியின்றி செயல்பட்ட 54 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 64 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 81 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் வேலையில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
81 நிறுவனங்கள் மீது வழக்கு
இதையடுத்து அந்த 81 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழி லாளர்நலத்து றை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், முரண்பாடு கள் கண்ட றியப்பட்டால் உரிய நடவ டிக்கை எடு க்கப்படும் என்றும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ண வேணி தெரிவி த்துள்ளார்.
- 2 அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- இன்று முதல் 45 நாட்களுக்கு 4-வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 4 யூனிட்டும், அதன் அருகில் 600 மெகா வாட் கொண்ட ஒரு யூனிட்டும் உள்ளது.
இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் 4-வது யூனிட்டில் வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று முதல் 45 நாட்களுக்கு 4-வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் வேலூர் மாநகராட்சிக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் வேலூர் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் வேலூர் மாநகராட்சிக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 வழியிடை ஊரக கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தினசரி 150 எம்.எல்.டி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் குழாய் உடைப்பு
இந்நிலையில் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் வேலூர் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் சாலையில் நடந்து செல்வோரும் வாகன ஓட்டிகளும் தண்ணீரில் நனைந்தபடியே சென்றனர். தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறையான பராமரிப்பு பணி இல்லாததால் ராட்சத குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க புதிய குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
- நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு, நைனாபட்டி ரோட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (37). இவர் எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
பூட்டு உடைப்பு
நேற்று முன்தினம் வழக்கம்போல் கவிதா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விழித்துக் கொண்டதால் கொள்ளையடித்த பொருள்களின் ஒரு பகுதியை கடை அருகிலேயே போட்டு விட்டு சம்பந்தப்பட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் நள்ளிரவு நேரத்தில் கவிதாவின் கடைக்குள் நுழையும் மர்ம நபர் 3 முறை பெரிய அளவிலான பைகளில், அங்கிருந்த பழம் மற்றும் பொருட்களை அள்ளிச் செல்வது பதிவாகி உள்ளது.
இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பழக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து, எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் கொள்ளை
மேலும் அண்மையில் கவிதாவின் பழக்கடை அருகே உள்ள சேகர் (48) என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
சேலம் - எடப்பாடி பிரதான சாலையில் தொடர்ந்து பழக்கடைகளை குறிவைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
- 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
சேலம்:
சேலம் மின்னாம் பள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ஹரிஹரன் (24) பொன்னம்மா பேட்டையில் பழனிச்சாமி என்பவர் வீடு கட்டி வருகிறார்.
கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். நேற்று மதியம் 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கிசிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஹரிஹரன் பரிதாமாக இருந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடி அமாவாசை யையொட்டி இன்று நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- மேட்டூர் காவிரி அற்றில் ஏராளமான பேர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சேலம்:
இன்று ஆடி அமாவாசை யையொட்டி இன்று தினத்தன்று சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடநதது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடினர். அவர்கள் வாழை இலை வைத்து அதில் அரிசி, நெல், தேங்காய், பழம் உள்ளிட்டவை வைத்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கன்னங்குறிச்சி ஏரி, மூக்கனேரி உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கஞ்சமலை
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சித்தேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஏராளமானவர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வர தொடங்கினர். அங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி வழிபாடு நடத்தினர். அங்குள்ள உப்பு குளத்தில் பக்தர்கள் மரு, மற்றும் தோல் வியாதி நீங்க உப்பு, மிளகு, வெல்லம், ஆகியவற்றை தலைசுற்றி போட்டு வேண்டி கொண்டனர். அங்குள்ள நீரோடை பகுதிகளில் தங்கள் முன்னோர்களுக்கு எள், மஞ்சள், நெய், சாத உருண்டை வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.
பூலாம்பட்டி
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் முன்புள்ள காவிரி படித்துறை, படகு துறை, விநாயகர் கோவில், காவிரித்தாய் கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் திரளானவர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பூலாம்பட்டி காவிரிக்கரை கைலாசநாதர் கோவில், நவக்கிரக சன்னதி, பசுபதீஸ்வரி ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். மேலும் பாங்கிகாடு அய்யனாரப்பன் கோவில், குள்ளம்பட்டி அய்யனாரப்பன் கோவில், சென்றாயனூர் தெற்கு தோட்டம், பெரியாண்டிச் சியம்மன் கோவில், பெரமாச்சிபாளையம் கம்பத்தையன் கோவில், கல்வடங்கம் அங்காளம்மன் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மேட்டூர்
மேட்டூர் காவிரி அற்றில் ஏராளமான பேர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் உள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். இதனால் மேட்டூர் காவிரி பாலம், மேட்டூர் அனல்மின் நிலையம், புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
மேச்சேரி
மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்தரகாளி அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், வாழப்பாடி காசி விஸ்வநாதர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், எல்லைபிடாரி அம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் இன்று காலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு பால், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் சின்ன முதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோவில் மற்றும் நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்
ராசிபுரத்தில் நாமக்கல் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் உள்பட 11 பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பரமத்திவேலூர்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் ஆடி அமாவாசையை முன்னிட்டு நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி வேலூர் பேட்டை மகா மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் ,கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன் ,செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் குடிப்பாட்டு மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- மாணவன் கோகுல்காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
- மாணவன் தற்கொலை குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டி அருகே உள்ள கீரபாப்பம் பாடி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் கோகுல்காந்தி (14). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கோகுல் காந்தி தனது தாய் வனிதா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.
மாணவர் கோகுல்காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று கோகுல்காந்தியின் தாய் வனிதாவுக்கு பிறந்த நாள் ஆகும்.
இதையடுத்து கோகுல்காந்தி தனது தாய்க்கு சேலை வாங்கி கொடுத்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் கோகுல் காந்தி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது தனது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதை நினைத்து மாணவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
அப்போது கழுத்தில் இருந்த துண்டு அறுந்து விழுந்தார். அப்போது சத்தம் கேட்டு அவரது தாய் வனிதா சென்று பார்த்தார். அப்போது தூக்கில் இருந்து கோகுல்காந்தி கீழே விழுந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வனிதா தனது மகன் கோகுல்காந்தியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் கோகுல்காந்தி இறந்து விட்டார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு பெரிய ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது.
- ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் கடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி ஊராட்சியில் வைரன்காடு கிராமத்தையொட்டி தேங்கல்கரடு மலை பகுதி உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்துடன் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் ஆடுகளை அங்குள்ள கரட்டில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக எலத்தூர், குண்டுக்கல் உள்ளிட்ட வனப்பகுதி மற்றும் கரட்டு பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு பகுதியாக சுற்றிய சிறுத்தை வைரன்காடு பகுதியில் உள்ள தேங்கல்கரடு மலை பகுதியில் பதுங்கியது.
அப்போது விவசாயி கோவிந்தராஜ் என்பவரது 5 ஆடுகளை மேய்ச்சலுக்கு கரட்டு பகுதியில் விட்டிருந்தார். இதில் ஒரு பெரிய ஆட்டை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது.
இதைக் கண்ட மற்ற 4 ஆடுகள் அங்குள்ள செங்குத்தான பாறை மீது ஏறி தப்பித்துள்ளன. அந்த பாறையின் அடியில் அடித்த ஆட்டை சாப்பிட்டுக் கொண்டு சிறுத்தை பதுங்கி இருந்தது. இதனால் பாறை மீது ஏறிய ஆடுகள் கீழே இறங்க முடியாமல் அங்கேயே தஞ்சமடைந்துள்ளன.
இதனிடைேய தனது ஆடுகளை மீட்க சென்ற கோவிந்தராஜை கண்ட சிறுத்தை விரட்டியுள்ளது. இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பி ஓடி வந்தபோது கீழே விழுந்ததில் காயமடைந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மலையில் பதுங்கிய சிறுத்தையை தேடி வருகின்றனர். ஏற்கனவே கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ள நிலையில் டிரோன் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுத்தை மலை பகுதியில் பதுங்கி உள்ளதால் பொது மக்கள் யாரும் கரட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம். மேலும் அங்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது பற்றி அப்பகுதி பெண்கள் கூறுகையில், சிறுத்தை கரட்டில் உலாவுவதை நாங்கள் பார்த்தோம். கோவிந்தராஜை விரட்டியதை பார்த்து அச்சத்தில் உள்ளோம். சிறுத்தைக்கு தேவையான உணவு இந்த பகுதியில் கிடைப்பதால் இங்கேயே உலாவுகிறது. இதனால் சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கல்வராயன் மலைக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களான இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு புரோக்கர்கள் அழைத்து சென்றனர்.
- புரோக்கர்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது காட்டிற்குள் இருந்து செம்மரம் வெட்டி கடத்தி வந்த 48 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1588 கிலோ எடையுள்ள 51 முதல் ரக செம்மரக்கட்டைகள், 2 கார் ஒரு ஆட்டோ, 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 2 கோடியாகும். சிக்கிய 48 பேரில் 17 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
அதில் சேலம், கருமந்துறை, கரியகோவில், ஏத்தாப்பூர், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த விஜயகுமார் (32), செந்தில் (36), ராஜேந்திரன் (30), மணி (26), கனகராஜ் (28), காமராஜ் (30), முருகேசன் (39), பழனிசாமி (34), அண்ணாமலை (40), குள்ளன் ஆண்டி (45), ஆறுமுகம் (42), சின்னபையன் (45), மாணிக்கம் (30), முருகேசன் (37), வெங்கடேஷ் (36), பழனி (43), லட்சுமணன் ( 45) ஆகியோர் என தெரிய வந்தது.
கல்வராயன் மலைக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களான இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு புரோக்கர்கள் அழைத்து சென்றனர். அங்கு செம்மரங்களை வெட்டி ஏற்றி சென்றபோது அவர்கள் சிக்கினர். இந்த தகவலையடுத்து 17 பேர் குறித்து ஆத்தூர், கருமந்துறை, கரியகோவில், ஏத்தாப்பூர், போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திராவில் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் சில மலைக்கிராமங்களில் இருந்து தொழிலாளர்களின் உறவினர்கள் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். அதனால் அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செம்மரம் வெட்ட சேலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகளை அழைத்து சென்ற புரோக்கர்கள் யார் என்பது குறித்தும் சேலம் மாவட்ட போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்துகிறார்கள். தொடர்ந்து மலைக்கிராமங்களுக்கு வந்து செல்லும் புரோக்கர்களை கண்காணித்து கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2 மாதத்துக்கும் மேலாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது.
இதே போல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
வழக்கமாக டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். மேலும் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து குறிப்பிட்ட நாளிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதே போல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.38 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 552 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதாலும், தொடர்ந்து பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் தினமும் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.
இதற்கிடையே கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் இன்று மேட்டூர் அணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






