என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி கிணற்றில் பிணமாக மீட்பு
    X

    கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி கிணற்றில் பிணமாக மீட்பு

    • கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி, அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
    • இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி, அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, கோரணம்பட்டி ஊராட்சி, கல்மேடு மணியக்காரன் வளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னண்ணன் (71), இவர் தனது விவசாய நிலத்தில் ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று சின்னண்ணன் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற நிலையில், இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாய நிலங்களில் தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சின்னண்ணன் அணிந்திருந்த காலணிகள் கிடப்பதைக் கண்ட அவரது உறவினர்கள், இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு துறை மற்றும் கொங்கணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கிணற்றிலிருந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி பார்த்தபோது, அங்கு விவசாயி சின்னண்ணன் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் அவரது சடலத்தை மீட்ட போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×