என் மலர்
சேலம்
- தனபால் மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த டீசலை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- லட்சுமி (75). இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்த இவர் பையில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென தலையில் ஊற்றினார்.
சேலம்
சேலம் மாவட்டம் அக்ரஹாரம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த தனபால், அவரது மனைவி மேனகா, 14 வயது மகன் ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது தனபால் மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த டீசலை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தனபாலை தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.
இதைதொடர்ந்து தனபால் போலீசாரிடம் கூறும்போது பூசாரிபட்டி பகுதியில் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வந்தார். அதிலிருந்து வெளியேறும் மாசு காரணமாக எனது மகனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
கொலை மிரட்டல்
இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரிடம் கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசியும் என்னை அடித்தும் கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் நிறுவனத்தை அமைக்க தடை விதிக்க வேண்டும். மேலும் கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி
இதேபோல் எடப்பாடி வெல்லாண்டிவலசு சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (75). இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்த இவர் பையில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென தலையில் ஊற்றினார். இதை பார்த்த போலீசார் மூதாட்டியை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆக்கிரமிப்பு
அந்த மூதாட்டி வைத்திருந்த மனுவில் வெல்லாண்டிவலசு பகுதியில் எனக்கு சொந்தமாக இடம் உள்ளது. அந்த இடத்தை ஏற்கனவே அளவீடு செய்து முட்டுக்கல் போடப்பட்டது.
தற்போது 2-வது முறையாக இடத்தை அளக்கும் போது எனது இடம் குறைவாக உள்ளது. அருகில் உள்ளார்கள் நிலத்தை ஆக்கிரமித்து விட்டனர். எனவே அந்த இடத்தை மீண்டும் அளவீடு செய்து இடத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
- குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சாரல் மழையாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.மாவட்டத்தில் அதிக பட்சமாக இன்று காலை 8.30 மணி வரை தலைவாசலில் 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 4.5, ஆத்தூர் 3.6, ஏற்காடு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை பேராசிரியராக நாச்சிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இந்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் அவரை சஸ்பெண்டு செய்து உத்தர விட்டுள்ளார்.
பேராசிரியர் நாச்சிமுத்து மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.
- மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர்.
ஏற்காடு:
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.
இந்த பேரணி ஏற்காடு காந்தி பூங்காவில் தொடங்கி டவுன் மார்க்கெட், பஸ் நிலையம் வழியாகச் சென்று ஒண்டிக்கடை ரவுண்டானா அருகில் உள்ள புறக்காவல் நிலையம் அருகில் நிறை வடைந்தது. அதனைத் தொடர்ந்து ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் பேரணி குறித்தும் பேரணி எதற்காக நடைபெற்றது என்று குறித்தும் விளக்கி பேசினர்.
மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர். இந்த பேரணியில் ஏற்காட்டில் உள்ள பள்ளி குழந்தைகள், கிறிஸ்தவ சபையை சேர்ந்த தலை வர்கள், இஸ்லாமிய தலை வர்கள், இந்து மத முக்கி யஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களும் கொண்டனர்.
- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை முதலே வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் நாளை (22 -ந் தேதி) சேலம், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- எரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொட்டி 72, இவர் ஊர் ஊராக நடந்து சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.
- அப்பேது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது.
சேலம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த எரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொட்டி 72, இவர் ஊர் ஊராக நடந்து சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தீவட்டிப்பட்டி சமத்துவ புரம் அருகே சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்பேது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி பாப்பாத்தி (62) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண்.
- அதே பகுதியை சேர்ந்த அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண். ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு வந்த இவரை அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோர் பாரப்பட்டி காலனி பகுதியில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இது குறித்து அருண் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோரை கைது செய்தனர்.
- காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம்.
- இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.
மேட்டூர் அணை பூங்கா
அவர்கள் இங்குள்ள காவிரி ஆற்றில் நீராடிவிட்டு அணை பூங்காவில் பொழுதை கழித்து செல்வது வழக்கம். இந்த பூங்காவில் பொதுபணித் துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யபடுகிறது.
இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 7,699 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.38.495 வசூல் செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர்.
மேலும் பூங்காவில் இருந்த ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்டவற்றை சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
- வடிவேல் (45). தறி தொழிலாளி, இவரது மனைவி சாந்திதேவி (41), இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
- கடந்த சில மாதங்களாக வடிவேல் தறி ஓட்டாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டை யாம்பட்டி மெயின்ரோடு நவாப்மேடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (45). தறி தொழிலாளி, இவரது மனைவி சாந்திதேவி (41), இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வடிவேல் தறி ஓட்டாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 52 ஆயிரம் ரூபாய்
அந்த பகுதியை சேர்ந்த வரிடம் கடன் வாங்கி விட்டு கட்டவில்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று சாந்திதேவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மகன்கள் மற்றும் மகள் கதறி துடித்தனர்.
இது குறித்து ஆட்டை யாம்பட்டி போலீசில் வடி வேல் கொடுத்த புகாரின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி னர்.தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கா க சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி ராணி அண்ணா நகர் சந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்சுரேஷ் (21), இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இந்த நிலையில் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்த்சுரேஷ் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் சமீப காலமாக ஆனந்த்சுரேசிடம் பேசாமால் ஒதுங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்ற ஆனந்த்சுரேஷ் இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.
இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 17ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதேநேரம் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. மேலும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கடந்த 17-ந் தேதி முதல் வரத்தொடங்கியது. தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று வினாடிக்கு 13ஆயிரத்து 159 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நேற்று காலை 54.70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 55.14 அடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 105.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 983 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 12ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 76.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3868 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 17ஆயிரத்து 631 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது 13ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் மீதமுள்ள தண்ணீரும் படிப்படியாக மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் தற்போது 21.20 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது .
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மரவனேரி பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் மதன்கிருஷ்ணன். இவரது மகன் சாரதி (16). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் 10-ம் வகுப்பு படிப்பதால் பள்ளியில் அதிக அளவில் வீட்டுப்பாடம் கொடுத்துள்ளனர். இதனை அவர் சரியாக எழுதாததால் ஆசியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சாரதி பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையே அவரது பெற்றோரும் 10-ம் வகுப்பு படித்து முடியும் வரை சற்று கஷ்டமாகதான் இருக்கும், இதனால் பள்ளிக்கு செல்லுமாறு கூறி உள்ளனர். இதனால் மனம் உடைந்த தனது சகோதரனிடம் நாளை பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று சாரதி கூறி உள்ளார்.
பின்னர் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றார். சற்று நேரத்தில் வீட்டின் கதவை பெற்றோர் தட்டிய நிலையில் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் உள்ள மின் விசிறிக்காக அமைக்கப்பட்ட கொக்கியில் தூக்கு போட்ட நிலையில் தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். தொடர்ந்து அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.






