என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில்நாளை கன மழை பெய்யும்
- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை முதலே வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் நாளை (22 -ந் தேதி) சேலம், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






