என் மலர்
நீங்கள் தேடியது "salemdistrict: வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி Farmers are happy as water has stagnated in the fields"
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
- குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சாரல் மழையாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.மாவட்டத்தில் அதிக பட்சமாக இன்று காலை 8.30 மணி வரை தலைவாசலில் 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 4.5, ஆத்தூர் 3.6, ஏற்காடு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.






