என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டையாம்பட்டியில் கடன் பிரச்சினையால் இளம்பெண் தற்கொலை
- வடிவேல் (45). தறி தொழிலாளி, இவரது மனைவி சாந்திதேவி (41), இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
- கடந்த சில மாதங்களாக வடிவேல் தறி ஓட்டாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டை யாம்பட்டி மெயின்ரோடு நவாப்மேடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (45). தறி தொழிலாளி, இவரது மனைவி சாந்திதேவி (41), இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வடிவேல் தறி ஓட்டாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 52 ஆயிரம் ரூபாய்
அந்த பகுதியை சேர்ந்த வரிடம் கடன் வாங்கி விட்டு கட்டவில்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று சாந்திதேவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மகன்கள் மற்றும் மகள் கதறி துடித்தனர்.
இது குறித்து ஆட்டை யாம்பட்டி போலீசில் வடி வேல் கொடுத்த புகாரின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி னர்.தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கா க சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.






