என் மலர்
சேலம்
- தெற்கு ரெயில்வேயில் பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது.
- சென்னைக்கு சேலத்தில் இருந்து பகலில் விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சேலம்:
தெற்கு ரெயில்வேயில் பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது தெற்கு ரெயில்வேயில் உள்ள கோட்டங்களில் சிறப்பான செயல்பாட்டில் சேலம் கோட்டம் முன்னிலையில் உள்ளது.
சிறந்த சேவை
குறிப்பாக பயணிகள் சேவை, சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்து ஆகியவற்றில் சிறப்பான நிலையில் சேலம் ரெயில்வே கோட்டம் உள்ளது. ஆனால் கோட்டத்தின் தலைமையிடமாக சேலம் இருந்தும் இங்கிருந்து புதிதாக எந்த ஒரு ரெயிலும் இயக்கப்படாதது மக்களையும், ரெயில்வே ஆர்வலர்களையும் வருத்தமடைய செய்துள்ளது.
மாநிலத் தலைநகராக இருக்கும் சென்னைக்கு சேலத்தில் இருந்து பகலில் விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வராமல் உள்ள நிலையில் இது போல ரெயில்வே சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் உள்ளன.
அந்த கோரிக்கைகளுக்கு சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், தொழில் துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
பகல் நேர ரெயில்
கோரிக்கைகள் குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது,
சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டதும் மாவட்டத்தில் புதிய ரெயில் பாதைகள் அமைப்பு, புதிய ரெயில்கள் இயக்கம் என திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சேலம் வழியே செல்லும் பழைய ரெயில் வழித்தடங்கள் மட்டுமே இன்று வரை உள்ளது.
ஆத்தூரில் இருந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் ஆத்தூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் தற்போது வரை ஆய்வுக்கான அறிவிப்பு கூட இல்லாமல் உள்ளது.
இதுபோல அண்டை மாவட்டமான கள்ளக்குறிச்சியை இணைக்கும் சின்னசேலம், கள்ளக்குறிச்சி புதிய ரெயில் பாதை திட்டம் சுமார் 22 கிலோ மீட்டர் நீளம் மட்டுமே இருந்தாலும் கூட ரெயில் பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பிய நிலையில் அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இரட்டை வழித்தடம்
சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வட்டங்களை சேர்ந்த மக்களில் பல்லாயிரம் பேர் சென்னையில் பணியாற்றியும், கல்லூரிகளில் படித்தும் வருகின்றனர். ஆனால் அவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர் வருவதற்கு இடம் கிடைக்காமல் சுமார் 5 மணி நேரம் பேருந்துகளில் நின்று கொண்டே பயணிக்கும் அவலம் நீடிக்கிறது.
ரெயில்கள் தாமதம்
தீபாவளி, பொங்கல் உள்பட எந்த ஒரு பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் சிறப்பு ரெயில்கள் இதுவரை இயக்கப்பட்டதும் இல்லை. சேலம் மாவட்டத்தின் வழி யாக செல்லும் முக்கிய பாதையில் சேலம்-விருத்தாச்சலம் ரெயில் பாதை உள்ளது. இது போக்குவரத்து அதிகம் கொண்ட சேலம் மற்றும் விருத்தாச்சலம் ரெயில் நிலையங்களை இணைக்கும் பாதையாக உள்ளது.
ஆனால் இந்த பாதை ஒற்றை வழித்தடமாக இருப்பதால் சேலம்-விருத்தாச்சலம் வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கம் அடிக்கடி தாமதமாகிறது. எனவே இதை இரட்டை வழித்த டமாக மாற்ற வேண்டும் என்பது சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சேலம் ரெயில்வே கோட்டம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே திட்டங்களை பெற்று தர சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறை அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவரும் ரெயில்வே துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் ரெயில்கள்
தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் ஹரிஹரன் பாபு கூறுகையில், தமிழகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக சேலம் உள்ளது. எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்கள், வடகிழக்கு மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் ெரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய ரெயில்களை சேலத்தில் இருந்து இயக்குவதற்கு பிட்லைன் எனப்படும் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு மையம், ரெயில் என்ஜினை ரெயில் பெட்டிகளில் மாற்றி இணைக்கும் வசதி ஆகியவை தேவை. இவை ஒரு ரெயில்வே கோட்டத்தில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான தேவைகள்.
சேலத்தில் பிட்லைன் அமைத்தால் இங்கேயே ரெயில் பெட்டிகளை பராமரிக்க வசதி கிடைக்கும். இதன் மூலம் சேலத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் ரெயில்களை இயக்க முடியும். சேலத்தில் பிட் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பகல் முழுவதும் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரெயில் பராமரிப்பு செய்து சேலம்-கோவை அல்லது சேலம்-திருச்சி என குறுகிய வழித்தடங்களில் இயக்க வாய்ப்பு ஏற்படும்.
2-வது ரெயில் முனையம்
இதேபோல அயோத்தியாப் பட்டணத்தை சேலத்தின் 2-வது ரெயில் முனையமாக ஏற்படுத்தினால் சேலம்-மயிலாடுதுறை விரைவு ரெயில், சேலம்-கோவை பயணிகள் ரெயில், சேலம்-காட்பாடி பயணிகள் ரெயில் ஆகியவற்றை அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து இயக்கும்போது சேலம் டவுன், சேலம் செவ்வாய்பேட்டை ரெயில் நிலையத்துக்கு உட்பட்டவர்களுக்கு நேரடி ரெயில் வசதி கிடைக்கும். இதற்காக சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள பொன்னம்மாப் பேட்டையில் செயல்பட்டு வந்த சேலம் கிழக்கு ரெயில் நிலையத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.
- துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாலிதீன் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,300 அபராதம் விதித்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானிய விலையிலான வெங்காய விதைகளுடன் வெங்காய இருப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்பட்டது.
- பழ மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள், குறைந்த விலையிலான வெங்காய விதைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதி விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானிய விலையிலான வெங்காய விதைகளுடன் வெங்காய இருப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்பட்டது. வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அட்மா திட்டக்குழு தலைவர் பரமசிவம் அப்பகுதி விவசாயிகளுக்கு பலன் தரும் பழ மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள், குறைந்த விலையிலான வெங்காய விதைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரஸ்வதி நல உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர் தாமரைச்செல்வி, உதவி அலுவலர்கள் குப்புசாமி, ராஜா, செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும் இன்னும் மழை காலம் முழுவதும் நிறைவு பெறவில்லை.
- சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் உள்ளன.
சேலம்:
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிக அளவிலும், அதே போல கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டம் 2 பருவமழைகளும் அதிக அளவில் பெய்யும் சிறப்பு வாய்ந்த மாவட்டமாக உள்ளது.
அதன்படி தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை பெய்யும், நடப்பாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவாக 406.4 மி.மீ. பெய்யும், ஆனால் இந்த ஆண்டு 380.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 26 மி.மீ. மழை குறைவாக பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவை விட 6 சதவீதம் குறைவாகும்.
தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும் இன்னும் மழை காலம் முழுவதும் நிறைவு பெறவில்லை. இதனால் இன்னும் சில நாட்கள் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் உள்ளன. இதில் பெரிய ஏரிகளில் டேனீஸ்பேட்டை ஏரி, எடப்பாடி பெரிய ஏரி உள்பட சில ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன. மேலும் பல ஏரிகள் பாதியளவும், ஒரு சில ஏரிகள் தண்ணீர் இல்லாமலும் காட்சி அளிக்கின்றன. இதனால் சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- அணைக்கு வினாடிக்கு 3122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 10.2 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது 103 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. மேலும் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்ததாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்தது.
தற்போது கர்நாடகாவில் தண்ணீர் குறைத்து விட்டதாலும், தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து விட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36.31 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 10.2 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.
- 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.
- அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
சேலம்:
சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
போலீசில் புகார்
உடனே அந்த பெண் சத்தம் போட்டு வெளியே ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த வாலிபர் வெளியே வந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அந்த பெண் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை சில்மிஷம் செய்தவர் பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதையடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பெரியண்ணன்பிள்ளை காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அன்ன தானப்பட்டி போலீசில் புகார் ஒன்று அளித்தார்.
- எனக்கு தெரியாமலேயே எனது சகோதரர் டெபாசிட் செய்யப்பட்ட பணம், நகை, வெள்ளிப் பொருட்களை எடுத்துக்கொண்டு தற்போது அவற்றை தர மறுக்கிறார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பெரியண்ணன்பிள்ளை காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அன்ன தானப்பட்டி போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது தந்தையின் குடும்ப சொத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரொக்கப் பணம் ரூ. 12 லட்சம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை தாதகாப்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய முடிவு செய்தேன். அதன் படி கடந்த மே மாதம் வங்கியில் டெபாசிட் செய்தேன். ஆனால் எனக்கு தெரியாமலேயே எனது சகோதரர் டெபாசிட் செய்யப்பட்ட பணம், நகை, வெள்ளிப் பொருட்களை எடுத்துக்கொண்டு தற்போது அவற்றை தர மறுக்கிறார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக உள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது குறித்து அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
- அங்கு வைத்து அவரிடம் நண்பர்கள் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவை சேர்ந்த வர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 24).
தாக்குதல்
இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போன் மூலம் தொடர்பு கொண்டு அவரது நண்பர்கள் அம்மாப் பேட்டை சிங்கமெத்தை பகுதிக்கு மணிகண்டனை வருமாறு அழைத்தனர்.
அங்கு வைத்து அவரிடம் நண்பர்கள் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் ஆயுதத்தால் கையிலும் தோள்பட்டை யிலும் குத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
புகார்
இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை அடித்து உதைத்த சின்னதிருப்பதி அருகே உள்ள ஐஸ்வர்யம் கார்டன் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் சரவ ணன் (30), கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின் ரோடு சிதம்பரம்பிள்ளை காடு பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் மைனா கார்த்தி (27), வீரபாண்டி கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விஜயகுமார் (வயது 24). இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
- அப்போது பைபாஸ் சாலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி சந்திரன் படுகாயம் அடைந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளி குட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (வயது 24). இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தடுப்பு சுவரில் மோதி பலி
அப்போது பைபாஸ் சாலையில் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி சந்திரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே முதியவர் முரு கேசன் (60) கழுத்த றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேட்டூர்:
மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே முதியவர் முரு கேசன் (60) கழுத்த றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் (38) முதியவரை கொலை செய்தது தெரிய வந்தது.
போலீசார் தேடுவதை அறிந்த கார்த்திக் நேற்று இரவு பி.என்.பட்டி, கிராம நிர்வாக அலுவலர் கலையரசனிடம் சரணடைந்தார். கலை யரசன் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கார்த்திக்கை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தனர்.
அப்போது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் தான் வைத்திருந்த கொடுவாளால் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதனை அடுத்து கார்த்திகை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- துரைமுருகன் (30). இவர் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக மேட்டூருக்கு வந்ததுள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார்.
- ஆற்றில் தண்ணீர் வேகமாக இருந்தால் துரைமுருகன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீசாக பணிபுரிந்து வந்தவர் துரைமுருகன் (30). இவர் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக மேட்டூருக்கு வந்ததுள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றில் தண்ணீர் வேகமாக இருந்தால் துரைமுருகன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.இதையடுத்து மேட்டூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று தேடினர் இரவு நேரம் தேடும் பணீயை நிறுத்தினர். இந்தநிலையில் ்தொடர்ந்து 2-வது நாளாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட துரைமுருகனை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
- வல்லரசு (வயது 22). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சேலம் கருப்பூர் தேக்கம்பட்டி தொகுதி சேர்ந்தவன் சண்முகம் இவரது மகன் வல்லரசு (வயது 22). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வேலைக்கு செல்லாமல் மது குடிக்கிறாயே என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மன வேதனை அடைந்த வல்லரசு பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






