search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கியபோலீஸ்காரரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்
    X

    மேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கியபோலீஸ்காரரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்

    • துரைமுருகன் (30). இவர் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக மேட்டூருக்கு வந்ததுள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார்.
    • ஆற்றில் தண்ணீர் வேகமாக இருந்தால் துரைமுருகன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீசாக பணிபுரிந்து வந்தவர் துரைமுருகன் (30). இவர் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக மேட்டூருக்கு வந்ததுள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றில் தண்ணீர் வேகமாக இருந்தால் துரைமுருகன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.இதையடுத்து மேட்டூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று தேடினர் இரவு நேரம் தேடும் பணீயை நிறுத்தினர். இந்தநிலையில் ்தொடர்ந்து 2-வது நாளாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட துரைமுருகனை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×