என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மது குடிக்க பணம் தர மறுத்தவாலிபரை தாக்கிய 3 பேர் கைது
- ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
- அங்கு வைத்து அவரிடம் நண்பர்கள் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவை சேர்ந்த வர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 24).
தாக்குதல்
இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போன் மூலம் தொடர்பு கொண்டு அவரது நண்பர்கள் அம்மாப் பேட்டை சிங்கமெத்தை பகுதிக்கு மணிகண்டனை வருமாறு அழைத்தனர்.
அங்கு வைத்து அவரிடம் நண்பர்கள் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் ஆயுதத்தால் கையிலும் தோள்பட்டை யிலும் குத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
புகார்
இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை அடித்து உதைத்த சின்னதிருப்பதி அருகே உள்ள ஐஸ்வர்யம் கார்டன் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் சரவ ணன் (30), கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின் ரோடு சிதம்பரம்பிள்ளை காடு பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் மைனா கார்த்தி (27), வீரபாண்டி கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்