என் மலர்
சேலம்
- பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.
- கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் சொசைட்டி தெருவைச் சேர்ந்த குமார். இவரது மனைவி பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது. அங்கு மயங்கிய நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பூஞ்சோலையின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மேற்கூரை கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (54), இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.
- வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோவில் எதிரில் தகர மேற்கூரை கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (54), இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.
கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தார். நேற்று பழனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை பார்த்த அந்த பகுதியினர் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உ டனே அங்கு விரைந்து சென்ற நிலைய அதிகாரி உதயகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை அக்கம் பக்கம் பரவவிடாமல் தடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இது குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்திய போது, பழனியம்மாள் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி விட்டு அணைக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்ற நிலையில் நீண்ட நேரம் எரிந்த அடுப்பு வெப்பம் தாங்காமல் ரப்பர் குழாய் வழியாக தீ பரவி சிலிண்டருக்கு சென்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் எரிந்து சாம்பலானது.
பாதிக்கப்பட்ட பழனியம்மாளுக்கு வருவாய்துறை சார்பில் புடவை, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டது.
- பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தொடர்ந்து நேற்று காந்தி ெஜயந்தியையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
- எங்கு இறங்கினாலும் பெங்களூரு - எர்ணாகுளத்திற்கு வசூலிக்கப்படும் முழு கட்டணத்தை ஆம்னி பஸ் நிறுவனங்கள் வசூலித்ததாக பயணிகளிடம் குற்றம் சாட்டி உள்ளனர்.
சேலம்:
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தொடர்ந்து நேற்று காந்தி ெஜயந்தியையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், பணியின் காரணமாக வெளியூரில் தங்கியிருந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
தொடர் விடுமுறை
குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல்வேறு ஊர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர். அங்கு பொழுதை உற்சாகமாக கழித்த அ வர்கள் நேற்றுடன் விடுமுறை முடிந்ததையடுத்து அவரவர் பணியிடங்களுக்கு மீண்டும் செல்ல தொடங்கினர். இதையொட்டி நேற்று மதியம் முதலே சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் திரண்டனர்.
குறிப்பாக பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, கடலூர், புதுச்சேரி, மதுரை, தஞ்சை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் நேற்று மதியம் முதலே பயணிகள் கூட்டம் அலை மோதியது. மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு வந்ததால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இைதயொட்டி சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் கோவை, சென்னை, பெங்களூரு, திருப்பூர், வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லு ம் பஸ்கள் பயணிகள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. இந்த கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் வரும் பஸ்களில் எல்லாம் பயணிகள் முண்டியடித்த படி ஏறி சென்றனர்.
கூடுதல் கட்டணம் வசூல்
இேத போல சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை, திருச்சி மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கும், பெங்களூருவில் இருந்து ெதன் மாவட்டங்களுக்கும் அதிக அளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சேலம், மதுரை, நாகர்கோவில் வழியாக இயக்கப்பட்ட பஸ்களில் நெல்லைக்கு அதிக பட்சமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமான கட்டணம் 700 ரூபாய் ஆகும்.
இதில் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் வழியில் எங்கு இறங்கினாலும் பெங்களூரு- எர்ணாகுளத்திற்கு வசூலிக்கப்படும் முழு கட்டணத்தை ஆம்னி பஸ் நிறுவனங்கள் வசூலித்ததாக பயணிகளிடம் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகினர். மேலும் இந்த கட்டண கொள்ளை இனி வரும் பண்டிகை காலங்களிலும் தொடரும் என்பதால் இதனை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
- ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது.
- மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கும் வகையில் குடில், பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பூங்காவில் ஜல்லிக்கட்டு காளை மான், யானை உள்ளிட்ட சிலைகள் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர் சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு குவிந்தனர். தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் நீர்வீழ்ச்சியில் குளிக்க காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து வருகின்றனர். மேலும் முட்டல் ஏரியில் தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக படகு சவாரியும் செய்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றனர்.
- கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
- அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
நேற்று காலை அணைக்கு 3ஆயிரத்து 122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 1560 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையின் நீர்மட்டமும் 35.38 அடியாக குறைந்து விட்டது. தற்போது அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
இதற்கிடையே கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அங்கு உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 11ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1592 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 17ஆயிரத்து 281 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2ஆயிரத்து 592 கனஅடி தண்ணீரே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை.
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக வெளியான அறிவிப்பு குறித்து, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்; அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் பேசிய அவர், "ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர். மாநிலத்தின் உரிமையை காக்க பாராளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கும். தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் தி.மு.க. முன்னெடுக்கும்."
"மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறிவிட்டு சில பஸ்களுக்கு மட்டும் பிங்க் நிற பெயின்ட் அடித்துள்ளனர். கொரோனாவில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது தாங்க முடியாத சுமையை தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில், கொடுக்கப்படாத வாக்குறுதிகளையும் சேர்த்து நிறைவேற்றி இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
- தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும் சேலம் தங்கம் பட்டு மாளிகை ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
- அமைச்சர் நேரு முன்னிலை வகித்து நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
சேலம்:
தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும் சேலம் தங்கம் பட்டு மாளிகை ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் நேரு முன்னிலை வகித்து நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார், கைத்தறி துறை கமிஷனர் விவேகா னந்தன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் தொகுதி எம்.பி. பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கோ ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை ரூ.2.35 கோடி மதிப்பில் புதுப்பொழிவுடன் நவீனப் படுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் இந்தியா முழுவதும் 154 ஷோரூம்கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 105 ஷோரூம்கள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு 7.61 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து முதல்- அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் 2022-ம் ஆண்டு ரூ.9.45 கோடி லாபம் ஈட்டினோம். ரூ.10 கோடி செலவில் ஷோரூம்கள் சீரமைக்கப்பட்டன. தற்போது லாபம் ரூ. 22 கோடியாக உயர்ந்துள்ளது.
வரவேற்பு
தங்கம் பட்டு மாளிகை 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.6 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தற்போது அது ரூ.12 கோடியாக இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக 500 ரக சேலைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில்க் சேலைகள், காட்டன் சேலைகள் கோட்டோ சேலைகள், ஷாப் சேலைகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கோ ஆப்டெக்ஸ்-ல் கெமிக்கல் இல்லாத ஆர்கானிக் பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நீங்கள் டிசைன் போட்டு ஒரு ஆர்டர் கொடுத்தால் அதற்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. 86 விற்பனை நிலையங்களில் ஆன்லைன் மூலம் ரூ.1½ கோடி மதிப்பில் விற்பனை நடைபெற்றுள்ளது.
நடவடிக்கை
சில்வர் தங்கம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நீங்கள் எங்கு ஜவுளி வாங்கினாலும் அதை அந்த மெஷினில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். அதில் தரம் குறைவாக இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. போலி பட்டு சேலை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் சொசைட்டி இல்லாமல் இருந்தது. தற்போது சொசைட்டி தொடங்கப்பட்டு மலைவாழ் மக்களுக்கு பயிற்சி கொடுத்து துணிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24).
- நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24) சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஏ.வி.ஆர் ரவுண்டானா பைபாஸ் சாலையில் கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார். அந்த வழியில் சென்றவர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பெரியசாமி மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
- நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி கிராமம் புதூர் காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெரியசாமி குடும்பத்தினர் அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
- பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.
சேலம்:
சேலம் கருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
பணம் கேட்டு மிரட்டல்
இவரது பட்டறை அருகில் சந்தோஷ் என்பவர் புல்லட் மோட்டார் சைக்கிள் சரிசெய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது உறவினர் கார்த்திக் (25). சந்தோஷ் மூலம் கார்த்திக், சுரேசிடம் அறிமுகம் ஆனார். இதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக், சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்பதும், அவரும் பணத்தை கொடுத்து சில நாட்களுக்கு பிறகு திரும்ப வாங்குவார், வழக்கம் போல சம்பவத்தன்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான அருண் (30), அனேக் (28) ஆகியோர் சுரேஷ் பட்டறைக்கு வந்தனர். பின்னர் சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்டனர்.
அப்போது அவர் பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
சிறையில் அடைப்பு
அப்போது கார்த்திக் தப்பியோடி விட்ட நிலையில் அங்கிருந்த அருண், அனேக் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து போலி துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர். அவரும் நேற்று போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவார்கள். கவர்ச்சிகரமாக பேசுவார்கள்.
- பேசி பேசி மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்தது தான் தி.மு.க. இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதன் அஸ்திவாரம் வலுவாக இருக்க வேண்டும். அதுபோல ஒரு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் இந்த பூத் அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். அப்படி வலிமையாக இருந்தால்தான் நாம் நிறுத்தும் வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும்.
பூத் கமிட்டி அமைப்பு என்பது தேர்தல் நேரத்தில் நமது வாக்காளர்களை அழைத்து வருவது, தேர்தல் நடக்கின்ற இடத்தில் பூத் ஏஜெண்டாக அமர்ந்து கள்ள ஓட்டு போடுவதை தடுப்பது, அதோடு புதிய வாக்காளரை சேர்ப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மகளிர் அணியை சேர்ந்தவர்கள் அந்த பூத்துக்கு உள்பட்ட பகுதியில் வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், அதனால் மக்கள் பெற்ற பலன்கள், நன்மைகளை எடுத்து சொல்ல வேண்டும். அது நமது வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்.
மேலும் 2½ ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். எனவே காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்.
இப்போது முதலமைச்சர் பேசும்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95 சதவீதம் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒரு பச்சை பொய்யை கூறுகிறார்.
இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற தி.மு.க. ஆட்சியில் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற புள்ளி விவரத்தோடு நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இது பூத் கமிட்டியின் பொறுப்பு.
தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவார்கள். கவர்ச்சிகரமாக பேசுவார்கள். பேசி பேசி மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்தது தான் தி.மு.க. இதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றினோம். கொடுக்கப்படாத மக்கள் சார்ந்த நன்மைகள் கொண்ட திட்டத்தையும் அறிவித்தோம். இதுதான் அ.தி.மு.க.வின் சாதனைகள்.
அ.தி.மு.க. ஆட்சியில் மிக்சி, கிரைண்டர் என மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் அதிகமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
- கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
- தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கோழிக்கட்டானூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு அதனை தனது செல்போனில் படம் பிடித்து பொது மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி பரிசு விழுந்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்து கொண்டிருந்தவரை தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.






