என் மலர்tooltip icon

    சேலம்

    • மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்எல்-க்கள் சந்தித்தது தொகுதி பிரச்சனைக்காகவே.
    • முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பது ஏற்கனவே அறிவித்ததுதான்.

    * தொண்டர்களின் உணர்வுக்கு இணங்கவே பாஜகவுடன் கூட்டணி முறிவு என முடிவு எடுக்கப்பட்டது.

    * பாஜகவுடன் கூட்டணி இல்லையென எடுக்கப்பட்ட முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது.

    * பல தொகுதிகளில் அதிமுகவினர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தனர்.

    * 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

    * மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏ-க்கள் தொகுதி பிரச்சனைக்காகவே சந்தித்தனர் .

    * முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    * காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    * காவிரியில் உரிய நீரை பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை.

    * உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துநகை (33), இவர் சேலம் வீரபாண்டியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.

    இவரும் குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து சேலம் சின்னதிருப்பதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். சந்தோஷமாக மண வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் வாழ்க்கையில் 2 மாதங்களில் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முத்து நகையின் பெற்றோர் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    பின்னர் தூக்கில் தொங்கிய அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு முத்து நகை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி பிணவறையில் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    முத்துநகையின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் மொய்த் (47).

    தொழிலாளி

    இவர் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் மொரம்புக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டு விட்டு சேலத்திற்கு வந்தவர் தொடர்ந்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இறந்து கிடந்தார்

    நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் ஜெகதீஷ் மொய்த் சாப்பிட வராததால் இவரது அக்கா மகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் அசைவின்றி கிடந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஜெகதீஷ் மொய்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகதீஷ் மொய்த் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால் ஜெகதீஷ் மொய்த் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
    • ஒரு வாலிபர் திடீரென சுகவனேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சுகவனேஷ் (வயது 18).

    இவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென சுகவனேஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகவனேஷ் கூச்சலிட்டார்.

    இதை பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளப்பட்டி போலீஸ் ஏட்டு திருப்பதி செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அவர் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்த பாபு என்கிற பக்ருதீன் (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டு வாலிபரை துரத்தி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விலை மேலும் சரியும் என அசைவ பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக கறிக்கோழி விலை உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 106 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதைத் தொடர்ந்து இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி கிலோவுக்கு மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மேலும் 2 ரூபாய் அதிகரித்து 108 ரூபாயாக உயர்ந்தது. கறிக்கோழி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த போராட்டத்தில் விவசாய கருவிகளை வாங்க வற்புறுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சேலம்:

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் விவசாய கருவிகளை வாங்க வற்புறுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    பல்நோக்கு சேவை மையம் உட்கட்டமைப்பு நிதி சட்டத்தின் கீழ் சங்கங்கள் தங்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், பறக்கும் மருந்து தெளிப்பான், லாரிகள், சிறு சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏதோ ஒரு உபகரணத்தை அல்லது 2, 3 கட்டாயமாக வாங்க வேண்டுமென கூட்டுறவு துறை அதிகாரிகள் வற்புறுத்தி வாங்க வைக்கின்றனர்.

    அதேபோன்று சங்க வளாகத்தில் தேவை இருக்கிறதோ இல்லையோ கிட்டங்கிகளை கட்டியாக வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் லாபத்தில் உள்ள சங்கங்கள் மட்டும் இவ்வாறான பணிகளை செய்தால் போதும் என்று தெரிவித்தனர். தற்போது நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களும் ஏதாவது ஒரு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது.

    இதனால் சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.1½ கோடி வரை முதலீடு செய்ய வேண்டி உள்ளது. இதுவரை வாங்கப்பட்ட எந்திரங்களினால் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நட்டம் ஏற்படுவது அறிந்தும் அதிகாரிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து இதற்கு முடிவு கிடைக்காவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் நெல்லை கதிரவன் மற்றும் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    சேலம்:

    நாகர்கோவில் கிருஷ்ணன் வீதியில் 5 பட்டா கேட்டு போராட்டம் நடத்திய திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் நெல்லை கதிரவன் மற்றும் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர். மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் செல்வ முருகேசன் உள்ளிட்ட சிலர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கூறும்போது, அருந்ததியர் மக்களுக்கு பட்டா கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுச்செயலாளர் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். தாக்குதல் நடத்திய நாகர்கோவில் டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

      சேலம்:

      சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சூரமங்கலம் பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் 3 ரோட்டில் உள்ள வரலட்சுமி மகாலில் நடைபெற்றது.

      இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, பகுதி செயலாளர்கள் பாலு, மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

      அப்போது அவர் பேசியதாவது:-

      உரிமை

      தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதில் ஏதோ பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல. 2 கோடி கட்சி தொண்டர்களின் உணர்வை பிரதிபலிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு.

      இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் அனைவரின் சம்மதம் இருந்தால் தான் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அதன் அடிப்படையில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி உள்ளது.

      யார் பிரதமர்? என்று கூறி தேர்தலை சந்திப்பீர்கள்? என சிலர் கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்தா தேர்தலை சந்திக்கிறார்கள்?. அந்தந்த மாநில உரிமைகளை பாதுகாக்க தேர்தலை சந்திக்கின்றனர்.

      அதேபோல் தமிழக மக்களின் உரிமையை பாதுகாக்க அ.தி.மு.க. போராடுகிறது. நமது உரிமையை பாதுகாக்க பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பா ளர்களுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வோம்.

      40 இடங்களில் வெற்றி

      அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் நலன் தான் முக்கியம். அவர்கள் தான் எஜமானர்கள். அவர்களின் எண்ணங்களை தான் அ.தி.மு.க. பிரதிபலிக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங் களிலும் அமோக வெற்றிபெறும். இதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராமல் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

      இவ்வாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

      கூட்டத்தில் அவைத் தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பேரவை செயலாளர் சரவணமணி, பகுதி செயலாளர்கள் பாண்டியன், சரவணன், முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டு ராமச்சந்திரன், ஜான் கென்னடி, உமாராஜ், வக்கீல் கனகராஜ், கவுன்சிலர்கள் கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், சசிகலா, சந்திரா கிருபாகரன் மற்றும் வார்டு செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.
      • கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது.

      ஆத்தூர்:

      சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் சொசைட்டி தெருவைச் சேர்ந்த குமார். இவரது மனைவி பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.

      இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது. அங்கு மயங்கிய நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பூஞ்சோலையின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • மேற்கூரை கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (54), இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.
      • வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.

      சேலம்:

      சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோவில் எதிரில் தகர மேற்கூரை கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருபவர் பழனியம்மாள் (54), இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இவருக்கு பிள்ளைகளும் இல்லை.

      கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தார். நேற்று பழனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில் வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியது.

      இதனை பார்த்த அந்த பகுதியினர் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உ டனே அங்கு விரைந்து சென்ற நிலைய அதிகாரி உதயகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை அக்கம் பக்கம் பரவவிடாமல் தடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

      இது குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்திய போது, பழனியம்மாள் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி விட்டு அணைக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்ற நிலையில் நீண்ட நேரம் எரிந்த அடுப்பு வெப்பம் தாங்காமல் ரப்பர் குழாய் வழியாக தீ பரவி சிலிண்டருக்கு சென்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் எரிந்து சாம்பலானது.

      பாதிக்கப்பட்ட பழனியம்மாளுக்கு வருவாய்துறை சார்பில் புடவை, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டது. 

      • பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தொடர்ந்து நேற்று காந்தி ெஜயந்தியையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
      • எங்கு இறங்கினாலும் பெங்களூரு - எர்ணாகுளத்திற்கு வசூலிக்கப்படும் முழு கட்டணத்தை ஆம்னி பஸ் நிறுவனங்கள் வசூலித்ததாக பயணிகளிடம் குற்றம் சாட்டி உள்ளனர்.

      சேலம்:

      பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தொடர்ந்து நேற்று காந்தி ெஜயந்தியையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், பணியின் காரணமாக வெளியூரில் தங்கியிருந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

      தொடர் விடுமுறை

      குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல்வேறு ஊர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர். அங்கு பொழுதை உற்சாகமாக கழித்த அ வர்கள் நேற்றுடன் விடுமுறை முடிந்ததையடுத்து அவரவர் பணியிடங்களுக்கு மீண்டும் செல்ல தொடங்கினர். இதையொட்டி நேற்று மதியம் முதலே சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் திரண்டனர்.

      குறிப்பாக பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, கடலூர், புதுச்சேரி, மதுரை, தஞ்சை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் நேற்று மதியம் முதலே பயணிகள் கூட்டம் அலை மோதியது. மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ் நிலையத்திற்கு வந்ததால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

      இைதயொட்டி சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் கோவை, சென்னை, பெங்களூரு, திருப்பூர், வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லு ம் பஸ்கள் பயணிகள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. இந்த கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் வரும் பஸ்களில் எல்லாம் பயணிகள் முண்டியடித்த படி ஏறி சென்றனர்.

      கூடுதல் கட்டணம் வசூல்

      இேத போல சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை, திருச்சி மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கும், பெங்களூருவில் இருந்து ெதன் மாவட்டங்களுக்கும் அதிக அளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சேலம், மதுரை, நாகர்கோவில் வழியாக இயக்கப்பட்ட பஸ்களில் நெல்லைக்கு அதிக பட்சமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமான கட்டணம் 700 ரூபாய் ஆகும்.

      இதில் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் வழியில் எங்கு இறங்கினாலும் பெங்களூரு- எர்ணாகுளத்திற்கு வசூலிக்கப்படும் முழு கட்டணத்தை ஆம்னி பஸ் நிறுவனங்கள் வசூலித்ததாக பயணிகளிடம் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகினர். மேலும் இந்த கட்டண கொள்ளை இனி வரும் பண்டிகை காலங்களிலும் தொடரும் என்பதால் இதனை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

      • ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது.
      • மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றனர்.

      ஆத்தூர்:

      ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கும் வகையில் குடில், பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பூங்காவில் ஜல்லிக்கட்டு காளை மான், யானை உள்ளிட்ட சிலைகள் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர் சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு குவிந்தனர். தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் நீர்வீழ்ச்சியில் குளிக்க காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து வருகின்றனர். மேலும் முட்டல் ஏரியில் தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக படகு சவாரியும் செய்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றனர்.

      ×