என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.
    • பி.வி.எம். அறக்கட்டளை மீடியா பெடரேசன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் என்பவரால் தொடங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.

    ராமநாதபுரம் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு பி.வி.எம். அறக்கட்டளை தேசிய விருதாளரும், பிரஸ் மற்றும் மீடியா பெடரேசன் தேசிய தலைவருமான டாக்டர் அப்துல் ரசாக் என்பவரால் தொடங்கப்பட்டு மனவளர்ச்சி குன்றியோருக்கான மையம் பாரதி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. இங்கு ஏராள மான முதியோர், மன வளர்ச்சி குன்றிய இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டு மருத்துவம், உணவு, கல்வி போன்றவை வழங்கப்பட்டது.

    தற்போது நன்கொடையா ளர்கள் உதவியுடன் ராமநாதபுரம்-திருப்புல்லாணி ஈ.சி ஆர். சாலையில் பள்ள பச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் மனவளர்ச்சி குன்றி யோருக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கு பி.வி.எம்.அறக்கட்டளை நிறுவனர் அப்துல் ரசாக் தலைமை தாங்குகிறார். சித்தார் கோட்டை முஸ்லிம் முன்னாள் ஜமாத் தலைவர் அல்தாப் உசேன் வரவேற்கிறார்.

    தொடர்ந்து மலேசியா பிரபல ஆடிட்டர் அன்சாரி இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் விழாவில் மலேசியா தொழிலதிபர்க ளும், நன்கொடையாளர்க ளுமான சித்தார்கோட்டை முகமதியா பள்ளிகளின் துணைத்தலைவர் முகம்மது ஷாஜகான், மலேசியா கோபத்தா குரூப் நிறுவ னங்களின் தலைவர் பனைக் குளத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். மலேசியா தொழிலதிபர் புதுவலசை யைச்சேர்ந்த அலிக்கான், இருமேனி கிராமத்தை சேர்ந்த மலேசிய தொழில் அதிபர் எஸ்.எம்.எஸ்.ரபிக்தீன் சகோதரர்கள், மலேசிய தூதரக ஜெனரல் கவுரவ தூதர் சென்னை சரவணக்குமார், புதுமடம் வடக்குத்தெரு பொருளாளர் சாகுல்ஹமீது, சிங்கப்பூர் தொழிலதிபர் டாக்டர் பைஜு ஜிப்ரி உள்ளிட் டோர் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கின்றனர்.

    முன்னதாக சித்தார் கோட்டை முகமதியா பள்ளி களின் முன்னாள் தலைவ ரும், அன்னை பாத்து முத்து ஜொகரா அறக்கட்டளை நிறுவனரும், மறைந்த தஸ்தக் கீரை நினைவு கூறும் வகையில், அறக்கட்டளை நிறுவ னர் அப்துல் ரசாக் தலைமையில் சிறப்புதுவா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விருதுகள், கேட யம், பதக்கம் வழங்கப்படு கிறது. இதில் ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மாவட்ட அதிகாரி பாலசுந்தரம், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் அகமது உசேன் ஆசிப், கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், திருப்புல் லாணி யூனியன் தலைவர் புல்லாணி, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன். திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா. பி.வி.எம். மனநல காப்பக கட்டிடத்தை கட்டிய கீழக்கரை கே.எம்.எம்.சுல்தான் சம்சூல்கபிர், என்ஜினீயர் பிரபாகரன் மற் றும் அரசியல் கட்சி பிரமுகர் கள். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், இந்து சமூக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை காப்பக நிறுவனர் அப்துல் ரசாக், பி.வி.எம். அறக்கட்டளை தலைவர் பக்கீர் முகமது அறக்கட்டளை மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் யாசர் அரபாத், சானாஸ்கான், முகமது யாசிர், குமார், யூனுஸ்கான், மன்சூர் உள்ளிட்டவர்கள் செய்துள்ளனர்.

    • ரூ.2800 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறினார்.
    • மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் சென்னையில் நடை பெற்ற மாவட்ட கலெக்டர் கள், போலீஸ் சூப்பிரண்டு கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராமநாதபுரம் வந்த கலெக்டர் விஷ்ணு சந்திரன், நிருபரிடம் கூறிய தாவது:-

    தமிழக அரசின் அனைத்து திட்டப்பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். திட்டங் களை நிறைவேற்றுவதில் உள்ள குறைகளை தவிர்க்க வும், பணிகளை விரைவு படுத்தவும் உத்தரவிட்டார்.

    குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி பனை மர விதைகளை நட்டு வளர்க்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருவதை பாராட்டி இந்த திட்டத்தை முழுமையாக வெற்றி பெற வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே செயல் பாட்டில் உள்ள அனைத்து குடிநீர் வழங்கும் திட்டங்க ளும் ரூ.500 கோடி செலவில் பழுது பார்த்து சீரமைக்கப் பட்டு வருகிறது. அதன்படி பழுதடைந்த குழாய்கள், குடிநீர் தொட்டிகள் சீர மைக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர காவிரியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 2 திட்ட பணிகளும் நிறைவேற்றப் பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் அடியோடு தீரும். இந்த 2 திட்டங்களையும் அடுத்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.இதனால் குடிநீர் திட்டப் பணிகள் விரைந்து செயல் படுத்தப்படும்.

    அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராமநாதபுரம் அருகே அண்ணா மாரத்தான் போட்டி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான்-2023 போட்டி நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் பரிசுகளை வழங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின் படி மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா, துணை அமைப்பாளர்கள் அம்பிகா நாகராஜ், உள்ளிட்ட தி.மு.க நிர்வாகி கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு சிறப்பி த்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    • விவசாயம் கடும் பாதிப்பால் மழை வேண்டி விவசாயிகள் பிரார்த்தனை செய்தனர்.
    • மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலமான மார்ச் முதல் ஜூன் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. வழக்கம் போல பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். அவ்வப்போது பெயரளவில் சாரல் மழை பெய்வதாலும் வெப்ப சலனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. வடகிழக்கு பருவ மழையும் எந்த அளவு இருக்குமோ? என்ற கலக்கத் தில் விவசாயிகள் விவசாய பணிகளில் இன்னும் முழு மூச்சாக இறங்கவில்லை. ஒரு சிலர் மட்டும் வயல்களில் விதைகளை பாவி, அவை நாற்றுக்களாக வளர்ந்து உள்ளது. அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சவும் முடி யாமல் அப்படியே விடவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை இல்லா மல் குளம், ஊரணி மற்றும் வீடுகளில் உள்ள கிணறு களிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கண்ணாமூச்சி காட்டும் மழையால் கலக்கத் தில் விவசாயிகள் உள்ளனர்.

    இதை தொடர்ந்து மழை வேண்டி கோவில், பள்ளி வாசல், தர்கா, தேவால யங்களில் சிறப்பு பிரார்த் தனை, தொழுகை நடந்து வருகிறது. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வரு கின்றனர்.

    இன்னும் சில நாட்களில் மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

    • 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார்.
    • மீனவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் சூறை காற்று வீசியதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் ஒரு வாரமாக அந்தந்த துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார். இந்நிலையில் வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ஒரு வாரம் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து நிலையில் இன்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதிகளவில் இறால் மீன்கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    • மீனவர்களுக்கு கூடுதல் டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் அருகே உள்ள குந்துகாலில் தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீனவர்களுக்கு டீசல் விற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித் தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இந்தியன் ஆயில் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டீசல் விற்பனை மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மீன் வளர்ச்சிக்கழகம் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து மீனவர்களுக்கு தேவையான டீசல் விற்பனை நிலையம் அமைக்கும் திட்டம் விரிவு படுத்தப்படவுள்ளன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது செயல்பட்டு வரும் டீசல் விற்பனை நிலையங்களுடன் கூடுதலாக தொண்டி மற்றும் பெரியப்பட்டினம் பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்பொழுது டீசல் விற்பனை மையத்தில் டீசல் மட்டும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மீன வர்களின் கோரிக்கை கேற்ப பெட்ரோல் விற்பனையும் செயல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வரக்கூடிய வருமானம் மீன் வளர்ச்சி கழகத்திற்கு பயனுள்ளதாக அமையும். அதேபோல் ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ. கோரிக்கைகேற்ப தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீன் விற்பனை அங்காடி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்களை மீனவ மக்கள் பெற்று பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தலைமை மேலாளர் மாரீசுவரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபா வதி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர்கள் செல்வ லெட்சுமி, தமிழ்மாறன் , இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவன உதவி மேலாளர் பரத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் சாலையில் இரு பக்கமும் சேதமடைந்துள்ளது.
    • சாலை சீரமைப்பு பணிகளை விரிவாக்க பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்



    வேதாளை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.செய்யது அல்லாபிச்சை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள வேதாளை ஊராட்சி யில் சாலையில் இரு புறங்களும் சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதிகளவில் வாகனங்கள் தினமும் வந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலை துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயிர் பலிகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையை உடனடியாக சீரமைத்து விரிவாக்கம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது குறித்து வேதாளை ஊராட்சி மன்றத்தலைவர் ஜெ.செய்யது அல்லாபிச்சை மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட வலையர் வாடியில் இருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள தார் சாலையின் இரு பக்கமும் அரிப்பு ஏற்பட்டு சுமார் ஒரு அடி வரை பள்ளமாக உள்ளது.

    ஒரே நேரத்தில் எதிரெதிரே பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகளவில் பள்ளி வாகனங்கள் இந்த சாலையில் வந்து செல்கின் றன. காலை, மாலை வேளைகளில் இந்த சாலையில் சிரமத்துடன் செல்ல வேண்டி இருக்கிறது.

    விரைவில் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக இந்த சாலையை செப்பனிட நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை சீரமைப்பு பணிகளை விரிவாக்க பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்ரகாளி அம்மன் கோவில் கொடைவிழா-முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
    • இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    சாயல்குடி

    சாயல்குடி வி.வி.ஆர்.நகரில் உள்ள சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு தனித்து பிரதான பாத்தியப் பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் அம்மன் கொடை விழா, முளைப்பாரி ஊர்வ லம் நடைபெற்றது.

    கிராம தலைவர் விஷ்ணுகாந்த், செயலாளர் சிவஞான குருநாதன், பொருளாளர் ஆறுமுகப் பெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கிருஷ்ணன், காசிராஜா, முருகன், குரு முருகன், ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் முன்னிலை வகித்தனர்.

    வருடாபிஷேகத்தை முன்னிட்டு முதல், 2-ம் கால யாகபூஜை நடந்தது. 5 ஏக்கர் தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சள் பானை நீர் தொட்டு ஆடுதல் நிகழ்ச்சி, பொதுப் படைக்கஞ்சி காய்த்து அம்மனுக்கு தீபாரதனை நடைபெற்றது.

    மேலும் அக்னி சட்டி, அம்மன் தேர் பவனி, பொங்கல் வைத்தல், கும்மியடித்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முதுகுளத்தூர்

    மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின் பேரில் மக்களியல் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் காந்தி கிராமம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பேரூ ராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகரசேதுபதி, கிராமப்புற செவிலியர்கள் இந்திரா, சந்தியா மற்றும் களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    இதில் குடிநீர் வடிகால், வீட்டின் தன்மை, மக்களின் வாழ்வியல், தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, தடுப்பூசி, ஊட்டச்சத்து, கருவறுதல், குடும்ப கட்டுப் பாடு சேவைகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, சுகா தாரம் மற்றும் சமூக நல திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த பணிகள் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ராமேசுவரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
    • தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை யிலான பக்தா்கள், சுற்று லாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இந்தியாவின் தேசிய புனிதத் தலமாகவும் சுற்றுலாப் பகுதியாகவும், இருந்து வரு கிறது. தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை யிலான பக்தா்கள், சுற்று லாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். மேலும், விடுமுறை நாள்கள், அமாவாசை நாள்க ளில் ஆயிரக்கணக்கா னோா் வந்து செல்கின்றனா். பாம்பன் ெரயில் பாலம் சேதமடைந்த நிலையில் ராமேசுவரத்துக்கு ெரயில் போக்குவரத்து நிறுத் தப்பட்டது.

    இதனால் ெரயில்களில் வந்து கொண்டிருந்த 8 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பயணி கள் தற்போது ராமநாதபுரத்தி லிருந்து ராமேசுவரத்துக்கு வருவதற்கு அரசு பஸ், சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களை பயன்படுத்தும் நிலை உள் ளது. தனியாா் பஸ் வசதி இல்லாத நிலையில், முழு மையாக அரசு பஸ்களை நம்பி பய ணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

    இதே போல, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் இருந்து 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களின் சொந்த பணி, வியாபாரம், மருத்து வம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிமித்தமாக ராம நாதபுரத்துக்கு வந்து செல் கின்றனா்.

    ராமேசுவரத்தி லிருந்து ராமநாதபுரத்துக்கும்,

    ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரத்துக்கும் இயக்க படும் பஸ்கள் வழக்கமான எண்ணிக்கையில் இயக்கப் படுவதால், ஒவ்வொரு பஸ் சிலும் 80 முதல் 90 போ் வரை கடும் நெடுக்கடிக்கு இடையே பயணம் செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

    இதனால், ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர் கள் கோரிக்கை விடுத்தனா்.

    • ஓட்டல்களில் உணவு தரம் குறித்து தொடர் சோதனைகள் நடத்தப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள திருப்புல்லாணியில் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவிற்கான மேளா நடைபெற்றது.

    சென்னை உணவு பாதுகாப்பு நிர்வாகத்துறை கமிஷனர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் படி திருப்புல்லாணியில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவிற்கான மேலா நடந்தது.

    உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கீழக்கரை மற்றும் திருப்புல் லாணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.

    அதன் பின்னர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வின் போது கெட்டுப் போன தோசை மாவு, மூன்று கிலோ பிளாஸ்டிக், 2 கிலோ கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.சுத்தம் இல்லாத ஓட்டல் களை கண்டறிந்து நோட் டீஸ் வழங்கப்பட்டு ரூ.4000 அபதாரம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.விஜயகுமார் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தி தவறுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதித்து வருகிறோம்.

    இவ்வாறு தொடர்ந்து சோதனைகள் செய்வதால் மட்டும் தவறுகள் முற்றிலும் தடுக்கப்படாது.பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முறையான அனுமதியின்றி,கா லாவதியான உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் குறித்து உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    அரசுத் துறையுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தவறுகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு ஏதுவான வழிமுறைகளை கண்டறிய இயலும் என்றார்.

    • தேவர் நினைவிடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைச்சர் சாமிநாதன் வருகை தந்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிரூபர்க ளிடம் கூறியதாவது:-

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். நினைவிடம் முன்பாக பொதுப்பணித்துறை மூலம் தற்காலிக கொட்டகை அமைத்து பயன்ப டுத்தப்பட்டு வந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் முத்துராம லிங்கம், முருகேசன் ஆகியோர் வேண்டு கோளுக்கிணங்க பொது மக்கள் பயன்பாட்டிற்காக நினைவிடம் முன்பு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நிரந்தரமாக மேற்கூரை அமைக்கவும், மேலும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் முதல்-அமைச்சரின் அனுமதியோடு பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன், கூடுதல் இயக்குநர் (செய்தி), இணை இயக்குனர் (நினைவகங்கள்) தமிழ் செல்வராஜன், தி.மு.க. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரு மான காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், திவாகரன், வட்டாட்சியர் சேதுராமன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ரா தேவிஅய்யனார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சரை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, குமார், தங்கவேல் உட்பட பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

    ×