search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும்-கலெக்டர் தகவல்
    X

    குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும்-கலெக்டர் தகவல்

    • ரூ.2800 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறினார்.
    • மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் சென்னையில் நடை பெற்ற மாவட்ட கலெக்டர் கள், போலீஸ் சூப்பிரண்டு கள் மாநாட்டில் கலந்து கொண்டு ராமநாதபுரம் வந்த கலெக்டர் விஷ்ணு சந்திரன், நிருபரிடம் கூறிய தாவது:-

    தமிழக அரசின் அனைத்து திட்டப்பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். திட்டங் களை நிறைவேற்றுவதில் உள்ள குறைகளை தவிர்க்க வும், பணிகளை விரைவு படுத்தவும் உத்தரவிட்டார்.

    குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி பனை மர விதைகளை நட்டு வளர்க்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருவதை பாராட்டி இந்த திட்டத்தை முழுமையாக வெற்றி பெற வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே செயல் பாட்டில் உள்ள அனைத்து குடிநீர் வழங்கும் திட்டங்க ளும் ரூ.500 கோடி செலவில் பழுது பார்த்து சீரமைக்கப் பட்டு வருகிறது. அதன்படி பழுதடைந்த குழாய்கள், குடிநீர் தொட்டிகள் சீர மைக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர காவிரியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 2 திட்ட பணிகளும் நிறைவேற்றப் பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் அடியோடு தீரும். இந்த 2 திட்டங்களையும் அடுத்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.இதனால் குடிநீர் திட்டப் பணிகள் விரைந்து செயல் படுத்தப்படும்.

    அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×