என் மலர்
ராமநாதபுரம்
- இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத் தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. சுமார் 6 ஆயிரம் மீனவர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.
இலங்கைக்கு தானமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு அருகே அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், சர்வதேச எல்லையை சரியாக அடையாளம் காண முடியாததாலும், கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை பாரம்பரிய மீன்பிடி இடம் என நினைத்தும் மீன்பிடிக்க அந்த பகுதிக்குள் செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அச்சுறுத்தி விரட்டுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். மேலும் பல சமயங்களில் மீனவர்களை சிறைபிடித்து செல்கின்றனர். சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். மேலும் 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு, கிழக்கு பகுதி மீனவர்கள் தலைமன்னார், யாழ்ப்பாணம் பகுதியில் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் எல்லை தாண்டி மீன் பிடிப்பது சற்று குறைந்தாலும் முழுமையாக முழுவதுமாக தடுக்க முடியவில்லை.
இதனை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலும், அவர்களை சிறைபிடித்து செல்வதை தவிர்க்கும் வகையிலும் கச்சத்தீவு பகுதியில் 6 கடற்படை கப்பல்களை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8, 9 ஆகிய நாட்களில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
- வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை.
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.
ராமநாதபுரம்
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தா டைகள் மற்றும் அன்னதா னம் வழங்கும் விழா ராமையா சுவாமி தலைமை தாங்கினார். கண்ணபிரான் வரவேற்று பேசினார்.
அறக்கட்டளையின் சேவைகள் பற்றி உறுப்பி னர்கள் எடுத்துரைத்தனர்.அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி குருநாதர் ஆர்.ஈஸ்.மோகன் விளக்க உரையாற்றினார்.ராமநாதபுரம் ராமலிங்கா அன்பு இல்ல நிர்வாகி ஏற்புரையாற்றினார்.
விழாவில் 10,12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராஜசேகரன் நினைவு கல்விப் பரிசும், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார்.
பின்னர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தா டைகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு அன்ன தானம் வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி கலந்து கொண்டு சிறப்பித் தார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொ ண்டனர். இதற்கான ஏற்பாடு களை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.
- ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
- தெருவிளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ராமநாதபுரம் அரசு மருத் துவ கல்லூரி மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் படிக் கின்றனர்.
இவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் கல்லூரிக்கு வரும் சாலை யில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை. கல்லூரியை ஒட்டி உள்ள பகுதிகள் புதர்கள் நிறைந்த பகுதியாக காட்சி அளிக்கி றது.
இதனால் அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி சாலை யில் 2 பாம்புகள் சென்ற தால் மாணவர்கள் அச்ச மடைந்தனர். சில நாட்க ளுக்கு முன் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சென்றுள்ளது. மருத்துவ கல்லூரி பகுதியில் பாம்பு கள் படையெடுக்கும் நிலை ள்ளது.
மேலும் விஷ பாம்பு மற்றும் ஜந்துகளால் மாண வர்களுக்கு ஆபத்து உள் ளது. அதிகாலையில் இப் பகுதியில் நடை பயிற்சி செய்வோரும் அச்சமடைந் துள்ளனர். அப்பகுதியில் மாணவர்கள் அச்சமின்றி சென்று வர தெரு விளக்கு கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மருத்துவ கல்லூ ரிக்கு செல்லும் சாலை முழுவதும் விளக்குகள் அமைத்து உயிர் காக்கும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாண வர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெண்ணிடம் நகை பறித்த மதுரை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே குயவன்குடி கீர்த்தி நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது48).
இவர் ராமநாதபுரம் வாரசந்தை யில் காய்கறிகள் வாங்கி விட்டு பஸ்சில் குயவன்குடி யில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது 2 மர்ம நபர்கள் வழிமறித்து சரஸ்வதி கழுத்தில் அணிந்தி ருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதில் காயமடைந்த சரஸ்வதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நகை பறித்தவர்கள் மதுரை கூடல் புதூர் பகுதியை சேர்ந்த சாந்தக்குமார் (30), செக்கானூரணியை சேர்ந்த சிவக்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது திண்டுக்கல், புதுக் கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் நிலுவை யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மறவர் பொதுநல சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
- முன்னாள் துணைவேந்தர் கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபி ராமம் கிராமத்தில் அனைத்து மறவர் பொது நல சங்கத்தின் 11-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழு வதும் உள்ள மாணவர்க ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மறவர் அறக் கட்டளை தலைவர் ஜெய ராம் தலைமை வகித்தார், செயலாளர் டாக்டர் அன்பழகன் வரவேற்றார்.அனைத்து மறவர் பொது நல சங்கத்தின் நிறுவன தலைவர் செல்லச்சாமி தேவர், அபிராமம் சேவல் முருகன், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கவுரி நூற்றுக்கணக்கான மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசி னார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக முத்துச்சாமித்தேவர், கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், மதுரை போஸ், மருத்துவர் கபிலன், பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், முகவை ஜெயராமன், பழனி முருகன், அபிராமம் பேரூ ராட்சி முன்னாள் தலைவர் குமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏற்பாடுகளை சத்திய மூர்த்தி, சண்முகவேல், ராஜசேகரபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். சங்கத்தின் பொருளாளர் காந்தி நன்றி கூறினார்.
- கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படும் அபாயத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாடனை
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினதில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் அதிக அளவில் செல்வது வழக்கம்.
தேவிப்பட்டினத்தில் இருந்து எஸ்.பி. பட்டினம் வரை உள்ள இருபுறமும் சாலையில் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் போக்கு வரத்துக்கு இடையூராக உள்ளது.
இதனால் வாகன ஓட்டி கள் மிகுந்த அச்சத்தில் சாலையில் பயணிக் வேண்டி உள்ளது. மேலும் சாலையின் வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
இதேபோல் இரண்டு சக்கர வாகனத்தில் செல் வோர் சாலையில் செல்லும் போது எதிரில் கனரக வாகனம் வந்தால் ஒதுங்கக் குட முடியாத சூழ்நிலை ஏற் படுகிறது. இதனால் வாகன யோட்டிகளுக்கு காயம் மற்றும் விபத்தும் ஏற்படுகிறது.
இதனை நெடுஞ்சாலை துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் அலட்சிய மாக உள்ளனர்.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரத்தில் மீனவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வருகிற 8-ந்தேதி ராமேசுவரம் மீன் வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கடல் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) ராமநாதபுரம் மாவட்ட குழு செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:-
இலங்கை கடற்படையால் ராமேசுவரம் பகுதி மீன வர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். இதனால் மீனவர்கள் பிழைப்பு தேடி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி நாடு களுக்கும் செல்கின்றனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை யில் இருக்கும் மீனவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதியாக நாள் ஒன்றுக்கு ரூ.250 வழங்கப்பட்டது.பின்னர் ரூ.350-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. ரூ.500 வழங்க வேண்டும். அதை மீனவர்கள் சிறையில் இருக்கும் காலத்தில் வழங்க வேண்டும்.
மீனவர்கள் சிறைப்படுத் தப்பட்ட 2 நாட்களில் உடனடியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த தொகை மீனவர்கள் விடுதலையாகி இரு மாதங்கள் கழித்து தான் பல ஆண்டுகளாக வழங்கப் பட்டு வருகிறது. தற்போது ராமேசுவரம் பகுதியில் இருந்து மட்டும் 64 மீன வர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வருவதால் செல வுக்கு பணம் இன்றி மீனவ குடும்பத்தினர் தவிக்கின்ற னர். குடும்ப பாதுகாப்பு நிதியை முறையாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக வழங்காவிட்டால் பாதிக் கப்பட்ட குடும்பங்களுடன் வருகிற 8-ந்தேதி ராமேசு வரம் மீன் வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- பள்ளி மாணவர்கள் 41 பேர் கலந்து கொண்டனர்
ராமநாதபுரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசாள் மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச் சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 41 பேர் கலந்து கொண்டனர் இப்போட்டி ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள் ஆகிய 3 பிரிவுகளில் மாணவர்கள் விளையாடினர். 56 தங்கப்பதக்கம், 34-வெள்ளி பதக்கம், 5- வெண்கலப் பதக்கம் வென்று ஓவரால் சாம்பியன் கோப்பையினை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், பயிற்சியாளர்கள் திருமுருகன், ஜெயஸ்ரீ, செல்லபாண்டி, பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
- சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்று மீண்டும் ரெயிலில் கொழும்பு வந்தடைவார்கள்.
- குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தனுஷ்கோடி வளர்ச்சி பெற்றது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இந்த தீவு பகுதி சுமார் 61.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ராமேசுவரம் தீவில் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகியவை அடங்கும். இதில் தென்னகத்து காசி என்று போற்றப்படும் கோவில் நகரமான ராமேசுவரத்தை விட தனுஷ்கோடி மிகவும் புகழ் பெற்றதாக திகழ்ந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே வணிக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. எனவே தான் தலைமன்னாரில் இருந்து பாம்பனுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து ராமேசுவரம் தீவை மண்டபம் நிலப்பகுதியுடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு பாம்பன் ரெயில் பாலம் திறக்கப்பட்டது. அதன் பிறகு ராமேசுவரம் தீவின் ஆன்மீக தலமாகி போக்குவரத்து வசதிகளைப் பெற்றது.
பாம்பனில் இருந்து 18 மைல் தொலைவிலும், ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் வளைந்த வடிவில் ராமேசுவரம் தீவின் தெற்கு முனையில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. இயற்கை துறைமுகமான தனுஷ்கோடியில் கப்பல் துறைமுகம் திறக்கப்பட்டு சென்னை-கொழும்பு இடையே போட்மெயில் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது.
சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்று மீண்டும் ரெயிலில் கொழும்பு வந்தடைவார்கள். புகழ்பெற்ற தனுஷ்கோடி திறந்த பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது. கப்பல் போக்குவரத்து தொடங்கி, தனுஷ் கோடி துறைமுகம் சிறப்பாக செயல்பட்டதால், அதுவரை மின்சாரம் இல்லாத ராமேசுவரம் தீவுக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது. இதையடுத்து ராமேசுவரம் கோவிலுக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் ராட்சத ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, 1922-ல், ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்புத் தூண்கள், மண்டபம் மற்றும் பாம்பன் இடையே கடலில் உள்ள ரெயில்வே பாலத்தின் அருகே நிறுவப்பட்டு, ராமேசுவரத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும், தனுஷ்கோடி கடலுக்கு அருகில் உள்ளதாலும், அப்பகுதியில் வீசும் காற்றின் வேகத்தைக் கருத்தில் கொண்டும் மின்சாரம் வழங்கப்படவில்லை.
இந்தியா-இலங்கை இடையே கப்பல் மற்றும் ரெயில் போக்குவரத்தால் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தனுஷ்கோடி வளர்ச்சி பெற்றது. 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி வீசிய கடும் புயலால் தனுஷ்கோடி ஊருக்குள் கடல் புகுந்தது. கடல் அலையால் மூழ்கி அந்த பகுதியே முழுவதுமாக அழிந்தது.
இதையடுத்து தனுஷ்கோடியை மனிதர்கள் வாழவும், வசிக்கவும் தகுதியற்றதாக அரசு அறிவித்தது. இங்கு வசித்த மக்கள் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறியவர்கள் நடராஜபுரம், சேராங்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் குடியேறினர்.
அவர்கள்தான் தற்போது தனுஷ்கோடிக்கு சென்று தொழில் செய்து வருகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கிருக்கும் அவர்கள் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளனர். மீன்கள் வியாபாரம், சமைத்து கொடுப்பது, முத்து, சிப்பிகளால் கலைநயமிக்க பொருட்கள் விற்பனை என்று காலத்தை நகர்த்தி வருகிறார்கள்.
இருப்பினும், பாரம்பரியமாக வாழ்ந்த இடத்தை மறக்க முடியாமல், புலம் பெயர்ந்து செல்ல முடியாமல், சாலை, குடிநீர், மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஏதுமின்றி இங்கு குடிசைகளில் தவிக்கும் மீனவர்கள் தங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தபோதிலும் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் இரவு பொழுதை கழிக்கிறார்கள்.
அந்த பகுதியை சேர்ந்த நாட்டுப்படகுகளை பயன்படுத்தும் தனுஷ்கோடி கிராம மீனவர்கள் மின்சாரம் இல்லாததால், இருளில் வலையில் இருந்து மீன்களை எடுக்க முடியாமல், குளிர் சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சில தொண்டு நிறுவனங்கள் சில வீடுகளுக்கு சோலார் மின்சாரம் வழங்கியுள்ளன. ஆனால் காற்றில் மின்கம்பிகள் சேதமடைந்து பயனற்றுப் போய்விட்டது.
பல்வேறு பேரூராட்சி தலைவர்களிடமும், முதல்வரிடம் மனு அளித்தும் இன்று வரை தனுஷ்கோடிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் பலமுறை ஆராயப்பட்டன. அதாவது ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் இருந்துதான் தனுஷ்கோடிக்கு மின்சாரம் கொண்டு செல்லவேண்டும் இதற்கு இடைப்பட்ட தூரம் சுமார் 25 கி.மீ. ஆகும்.
ஆனால் தனுஷ்கோடி பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பு, சூறாவளிக்காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மின்சாரம் கொண்டு செல்வது சாத்தியமற்றதாக உள்ளது. 1964 புயலால் ரெயில் தண்டவாளம் சேதமடைந்து தனுஷ்கோடி அழிந்தபோது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது அங்கு சிதிலமடைந்த கிறிஸ்தவ தேவாலயமும், ஒரு சில கட்டிடங்களுமே மிஞ்சியிருக்கிறது.
கடலின் நிலையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடல் அலைகள் ஊருக்குள்புகுவது, சாலைகள் மணலால் மூடப்படுவது போன்ற காரணங்களால் 76 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாடும் தங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கவும், ஆண்டுக்கு 3 கோடி பேர் வரை வருகை தரும் தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் தனுஷ்கோடி பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே இலங்கை-தனுஷ்கோடி இடையேயான கடல் பகுதியை கண்காணிப்பதற்காக சமீபத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர்.
- உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற போது 10 விசைப்படகுகள் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 64 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ரெயில் மறியல் போராட்டம் அறிவித்த நிலையில் கலெக்டர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி வேலை நிறுத்தம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த 4-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்ககோரி இன்று தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தங்கச்சிமடம் வலசைதெரு பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மீனவர் சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். தலைவர்கள் சகாயம், எமரிட், ஆல்வின் சைமன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மோட்சம், மெல்டன், பீட்டர், சாம்சன், தங்கச்சிமடம் வர்த்தக சங்க நிர்வாகிகள் சம்சுதீன், வல்லப கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விசைப்படகு மீனவர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். அப்போது அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இன்று தொடங்கியுள்ள உண்ணாவிரத போராட்டம் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் ஜேசுராஜா போலீசாரை வெட்ட முயன்றார்.
- அரிவாள் வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 45), பனைத்தொழிலாளி. இவர் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். பினனர் ஜாமினில் வெளியே வந்தவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
அதன்பேரில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் தலைமையில் ஏட்டு காளிமுத்து (35) மற்றும் போலீசார் ஜேசுராஜாவை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றனர். அவரிடம் கோர்ட்டு உத்தரவை கூறி போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
அப்போது கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்குள் சென்று சட்டை அணிந்து வருவதாக கூறி சென்றவர் அரிவாளுடன் வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் அரிவாளால் ஜேசுராஜா போலீசாரை வெட்ட முயன்றார்.
இதை தடுக்க முயன்ற ஏட்டு காளிமுத்துவுக்கு கை, கால்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. அதிர்ச்சியடைந்த மற்ற போலீசார் உடனே சுதாரித்துக் கொண்டு ஜேசுராஜாவை வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரை தள்ளி விட்டு ஜேசுராஜா தப்பியோடி உள்ளார். போலீசார் அவரை விரட்டி சென்றனர்.
ஒரு பனை மரத்தில் ஏறிய போது ஜேசுராஜா தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. அவரை கைது செய்த போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.






