search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marawar Welfare Society"

    • மறவர் பொதுநல சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • முன்னாள் துணைவேந்தர் கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபி ராமம் கிராமத்தில் அனைத்து மறவர் பொது நல சங்கத்தின் 11-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழு வதும் உள்ள மாணவர்க ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மறவர் அறக் கட்டளை தலைவர் ஜெய ராம் தலைமை வகித்தார், செயலாளர் டாக்டர் அன்பழகன் வரவேற்றார்.அனைத்து மறவர் பொது நல சங்கத்தின் நிறுவன தலைவர் செல்லச்சாமி தேவர், அபிராமம் சேவல் முருகன், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கவுரி நூற்றுக்கணக்கான மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசி னார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக முத்துச்சாமித்தேவர், கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், மதுரை போஸ், மருத்துவர் கபிலன், பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், முகவை ஜெயராமன், பழனி முருகன், அபிராமம் பேரூ ராட்சி முன்னாள் தலைவர் குமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏற்பாடுகளை சத்திய மூர்த்தி, சண்முகவேல், ராஜசேகரபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். சங்கத்தின் பொருளாளர் காந்தி நன்றி கூறினார்.

    ×