search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    பெண்ணிடம் நகை பறிப்பு

    • பெண்ணிடம் நகை பறித்த மதுரை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே குயவன்குடி கீர்த்தி நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது48).

    இவர் ராமநாதபுரம் வாரசந்தை யில் காய்கறிகள் வாங்கி விட்டு பஸ்சில் குயவன்குடி யில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது 2 மர்ம நபர்கள் வழிமறித்து சரஸ்வதி கழுத்தில் அணிந்தி ருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதில் காயமடைந்த சரஸ்வதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் நகை பறித்தவர்கள் மதுரை கூடல் புதூர் பகுதியை சேர்ந்த சாந்தக்குமார் (30), செக்கானூரணியை சேர்ந்த சிவக்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது திண்டுக்கல், புதுக் கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் நிலுவை யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×