என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில், செட்டிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவிலின் பூசாரி கணேசன் தினமும் அதிகாலை 5.30 மணி அளவில் நடையை திறப்பதும், இரவில் 9.30 மணி அளவில் பூட்டி விட்டு செல்வதும் வழக்கம்.
உண்டியலில் சில்லரை நாணயங்கள் மட்டும் திருட்டு போகாமல் அப்படியே இருந்தன. இந்த திருட்டு சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், டவுன் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் (வெள்ளனூர்), சந்திரகாந்த் (கீரனூர்) மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் புதுக்கோட்டை-திருச்சி ரோட்டில் திருக்கோகர்ணம் அருகே தாவூத்மில் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் பண்டல், பண்டல்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை காரில் கடத்தி வந்த அரிமளம் அருகே சீராடும்செல்வி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்கிற தாஸ் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனையின்போது காரில் வந்த அவரது கூட்டாளியான கானாடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து 88 பண்டல்களில் இருந்த 180 கிலோ கஞ்சாவுடன், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேசை தேடி வருகின்றனர்.
கைதான ஆரோக்கியதாசிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும், அரிமளம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மீது கோவை ஆர்.எஸ்.புரம், புதுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு, காரைக்குடி வடக்கு, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும், கேரள, ஆந்திர மாநிலங்களிலும் மது, கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டையில் கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பண்டல், பண்டலாக கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). டிரைவரான இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 2 சரக்கு ஆட்டோக்கள் வாங்கி ஓட்டி வந்தார்.
போதிய வருமானம் கிடைக்காததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் அந்த இரு வாகனங்களையும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் வினோத் குமாரிடம் பறிமுதல் செய்த இரு வாகனங்களையும் தனியார் நிதி நிறுவன நிர்வாகம் வேறு நபர்களிடம் விற்பனை செய்து விட்டனர். ஆனால் அதன் பிறகு கடன் தொகையை விட குறைந்த தொகைக்கே வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாக கூறி மீதி தொகையை செலுத்தக்கோரி கடந்த ஒரு வாரமாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வினோத் குமார் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் இருந்ததால் தன்னால், தற்போது கடன் நிலுவை தொகையை கட்ட முடியாது. நிலைமை சீரான பிறகு கட்டுவதாக கூறியுள்ளார். ஆனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று மிரட்டினர்.
இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்து காணப்பட்ட வினோத் குமார் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருபவர்களை நுரையீரல் பாதிப்பின்றி குணப்படுத்தவது எளிதாகும்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கிராமப்புற மருத்துவ மனைகளிலும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் துவங்கப்பட உள்ளன.
இதில் பணிபுரிய கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் போன்றவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதுடன் விரைவில் மினி கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதுடன் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிராமப்புறங்களில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 40,000 படுக்கைகள் எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை ஒரு நாளுக்கு 90,000 எண்ணிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக கோவிட் பரிசோதனையில் பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றுமாறு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சேங்கை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணேசனுக்கு, புதுக்கோட்டை டவுன் பகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 11 வயதில் ஒரு மகள் இருந்தாள்.
கணேசனுக்கும், அந்த பெண்ணிற்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளான 11 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கணேசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதில் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், கணேசன், 11 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தூங்கி எழுந்த பின் அந்த சிறுமி அதனை உணர்ந்ததால் தற்கொலையில் ஈடுபட்டிருக்கிறார். இதனை அந்த சிறுமியின் தாய் மறைக்க முயன்றிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்றனர். சிறுமியின் தாத்தா கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.






