search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    புதுக்கோட்டை அருகே லாரி மோதி வாலிபர் பலி

    புதுக்கோட்டை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை டிரைவர் நிறுத்தவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர் மன்னார்குடியை சேர்ந்த விவேக் (வயது26) என தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய லாரியை சற்று தள்ளி நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×