என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆக்ஸிஜன் வசதி வழங்குவதில் தமிழகம் மிகை மாநிலமாக திகழ்கிறது- விஜயபாஸ்கர் தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருபவர்களை நுரையீரல் பாதிப்பின்றி குணப்படுத்தவது எளிதாகும்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கிராமப்புற மருத்துவ மனைகளிலும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் துவங்கப்பட உள்ளன.
இதில் பணிபுரிய கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் போன்றவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதுடன் விரைவில் மினி கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதுடன் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிராமப்புறங்களில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 40,000 படுக்கைகள் எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை ஒரு நாளுக்கு 90,000 எண்ணிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக கோவிட் பரிசோதனையில் பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றுமாறு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்