என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தர்வகோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை- வாழை மரங்கள் முறிந்து விழுந்தன
Byமாலை மலர்2 Oct 2020 11:33 AM GMT (Updated: 2 Oct 2020 11:33 AM GMT)
கந்தர்வகோட்டை பகுதியில் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரஸ்தாளி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த வாழை மரங்களில் தார் விட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. ஆனால், கந்தர்வகோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால், பெரும்பாலான வாழை மரங்கள் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்தன.
இதில், பகட்டுவான் பட்டியை சேர்ந்த விவசாயி ராஜ் கமலக்கண்ணன் என்பவரின் தோட்டத்தில் உள்ள சுமார் 1,000 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல வீரடிபட்டி, சோத்துப்பாறை, சோழகம்பட்டி, துருசுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் முறிந்து விழுந்தன.
அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முறிந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X