என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் பொன்ராஜா முன்னிலை வகித்தார்.

    ஊட்டி,

    அ.தி.மு.க. ஊட்டி நகர பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடந்தது. ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் பொன்ராஜா முன்னிலை வகித்தார்.

    ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாந்திராமு, துணை செயலாளர் கோபால் கிருஷ்ணன், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான அக்கீம் பாபு, ஒன்றிய செயலாளர்கள் பெள்ளி, சக்சஸ் சந்திரன், பா.குமார், குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் விஷாந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் சிக்கியவரை மீட்டனர்.
    • ஜெயச்சந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி விட்டார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது64). இவர் நேற்றிரவு ஊட்டியில் இருந்து கோவைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த சமயம் மழை பெய்து கொண்டிருந்தது. இவரது கார் குன்னூர் அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் வந்த போது, மலையில் இருந்து திடீரென பாறை ஒன்று உருண்டு வந்து, காரின் முன் பகுதி மீது விழுந்தது.

    இதில் கார் இடிபாடுகளில் சிக்கி கொண்டது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் சிக்கியவரை மீட்டனர். அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி விட்டார்.

    • கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.

    அரவேணு,

    கோத்தகிரி தெங்கரை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்.

    இவர் சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் கோத்தகிரிக்கு வந்தார்.

    அப்போது அவரின் செல்போன் மாயமானது.

    இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் டிராக்கர் டிவைஸ் நவீன கருவி உதவியுடன் கண்காணித்தனர்.

    இதில் அந்த செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.

    போலீசார் உடனடியாக அங்கு சென்று பாஸ்கரின் செல்போனை மீடடு ஒப்படைத்தனர். 

    • நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி, குன்னூர் டி.எஸ்.பி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளை யம் தேசிய நெடுஞ்சாலை யில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஊட்டிக்கு 61 பேர் பஸ்சில் சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது, குன்னூர் மரப்பாலம் பகுதியில் வந்த போது சுற்றுலா பஸ் திடீரென பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பஸ் விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குன்னூரை சேர்ந்த இந்து முஸ்லிம், கிறிஸ்டியன் அமைப்பினர் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத போதகர்கள் அவர்களது முறைப்படி பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. சவுந்தர்ராஜன், குன்னூர் டிஎஸ்பி குமார், குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முத்துசாமி மற்றும் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாஷிம் ராஜா, சமுக ஆர்வலர் உஷாபிரங்களின், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர், மணிகண்டன், குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விபத்து நடந்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கினார்.

    • காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓடியதால் டிரைவர் உயிர் தப்பினார்
    • உயிர் சேதம் ஏற்படும் முன்பே யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இதில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலைக்கு வந்து, வாகன ஓட்டிகளை துரத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை அந்த சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    யானை நிற்பதை பார்த்ததும் காரை ஓட்டி வந்தவர், காரை சிறிது தொலைவிலேயே நிறுத்தி விட்டார்.சாலையில் சுற்றி திரிந்த யானை மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.

    திடீரென அந்த யானை, காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காரின் டிரைவர், காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    காரின் அருகே வந்த யானை ஆக்ரோஷமாக, காரை அடித்து நொறுக்கியது. மேலும் காரை அப்படியே அலேக்காக தூக்கி நடுரோட்டில் வீசியது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சத்தில் உறைந்து போயினர்.

    20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் யானை அங்கேயே நின்றபடி காரை சேதப்படுத்தியது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த ஆண்டு சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அதிக அளவில் இடம்பெயர்ந்து உணவு தேடி மலை பாதைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ஊட்டி,

    குன்னூரில் நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சரவணகுமார் செய்திருந்தார்.

    நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்னுராஜ், மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன், இளைஞரணி மாநில துணை செயலாளர் பாலாநந்தகுமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

    • பந்தலூர் பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.
    • சிறுத்ைத வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது.

    எனவே இங்கு காட்டு யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி ஆகிய வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் பந்தலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், நத்தம், ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.

    அங்கு உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது.

    இதற்கிடையே நத்தம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தைப்புலி புகுந்தது.

    தொடர்ந்து அங்கு உள்ள ஒரு வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடியது. பின்னர் இறைச்சியை வாயில் கவ்வி கொண்டு சென்றது.

    இந்த காட்சிகள் குடியிருப்பில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்தது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

    • சுற்றுலா பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைக்க நடவடிக்கை
    • மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும்போது அதிவேகமாக செல்வதுடன் பிரேக் மற்றும் கிளட்ச் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

    அருவங்காடு,

    மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலைப்பாதையில் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குன்னூர் மலைப்பாதையில் கடந்த 54 நாட்களில் நடந்த சாலை விபத்துக்களில் 9 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கடந்த மாதம் 30-ந்தேதி மரப்பாலம் அருகே தென்காசி மா வட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது. இதில் 9 பேர் பலியாயினர். 30 பேர் காயம் அடைந்தனர். இந்த மாதம் 8-ந்தேதி மலைப்பா தையில் சென்ற ஒரு சுற்றுலா பஸ் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் அந்த பஸ்சில் பயணித்த மாணவ மாணவிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    மேலும் கடந்த 10-ந் தேதி நடந்த கார் விபத்தில் கூடலூரை சேர்ந்த சிறுமி உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். பர்லியாறு பகுதியில் ஒரு சுற்றுலா பஸ் விபத்துக்கு உள்ளாகியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மாவட்டத்துக்கு வரும் ஒருசில சுற்றுலா பஸ்கள் மலைப்பாதையில் செல்லும்போது விபத்துக்கு உள்ளாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதும க்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து எண்ணற்ற சுற்றுலா பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் வெளிமாநிலம், வெளி நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கார்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

    நீலகிரிக்கு சுற்றுலா வரும் டிரைவர்கள் பெரும்பாலும் போக்கு வரத்து விதிகளை பின்பற்றுவது இல்லை.

    அவர்கள் சம வெளி பகுதியில் செல்வது போல வாகனங்களை வேகமா கவும், கவனகுறை வாகவும் இயக்குகின்றனர். இதனால் மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

    குறிப்பாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்படும் வாக னங்கள் மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும்போது அதிவேகமாக செல்வதுடன் பிரேக் மற்றும் கிளட்ச் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதனால் டயர்களில் உள்ள டிரம் சூடாகி பிரேக் நிற்பதில்லை. இதனால் வாகனங்கள் கட்டுப்பா ட்டை இழந்து விபத்து ஏற்படும் சூழல் தொடர்க தையாக உள்ளது.

    குறிப்பாக மலைப்பா தையில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தை தவிர்த்து மிகுந்த கவனத்து டன் 20 முதல் 30 கி.மீ வேகத்தில் சென்றால் பாதிப்புகள் நிகழாது. இதற்காக அங்கு பிரத்யேக சாலை விதிகள் உள்ளன.

    இருந்தபோதிலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றுவது இல்லை. பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் விபத்துகள் மேலும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே சுற்றுலா பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கல்லாறு மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதன் ஒரு பகுதியாக மலைப்பாதையில் உள்ள சாலை விதிகள் மற்றும் வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புத்தக திருவிழாவில் பேராசிரியை பர்வீன்சுல்தானா அறிவுரை
    • வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கோலாட்டம் உள்பட பல்ேவறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    நீலகிரி புத்தக திருவிழாவின் 3-வது நாளில் 278 மாணவர்கள் உள்பட 1403 பேர் கலந்து கொண்டு ரூ.79,585 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி புத்தக திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சி.எஸ்.ஐ ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கோலாட்டம், சமூகவிழிப்புணர்வு நாடகம் மற்றும் பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து பிரபல பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றால் புத்தக ங்களை படிக்க வேண்டும். பிள்ளைகளிடம் பெற்றோர் அன்புகாட்ட வேண்டும். ஆசிரியர்கள் படிப்பு மட்டுமின்றி நற்பண்புகள் குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    குழந்தைகள் எண்ணிய இலக்கை எட்டும்வரை தன்னம்பிக்கையுடன் பாடுபட வேண்டும். வெற்றி, தோல்வி என கருதாமல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதுவே உங்களின் முதல் வெற்றி என நினைக்க வேண்டும். மனஉறுதியுடன் இலக்கை எட்டும்வரை விடாமுயற்சியுடன் போராட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும்.

    புத்தகங்களை வாசிக்க தினமும் ஒருசில மணி நேரங்கள் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும் பல நல்ல விஷயங்கள் உண்டு.அதனை நீங்கள் படித்து மனதில் நிறு த்தி வாழ்க்கையில் பி ன்பற்ற வேண்டும். சிகரம் அடையும்வரை நீங்கள் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் எனில் நீங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடந்து கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில் நடந்தது.
    • செயலாளர், அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

    நிகழ்ச்சியில் நெடுகுளா கிளைக்கழக செயலாளர் மோகன், ஒன்றிய பிரதிநிதி மணி, மாவட்ட விவசாய அணி சுண்டட்டி முருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருண்குமார், குன்னூர் நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கண்ணாடி மாளிகையில் வித, விதமான பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டு உள்ளன.
    • கமர்சியல், சேரிங்கிராஸ் சாலைகளில் சுற்றுலா வாகனங்களின் வரத்து அதிகரிப்பு

    ஊட்டி,

    தமிழகத்தில் 4 நாட்கள் தொடர்விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் நிலவும் 2-வது சீசன் மற்றும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக நீலகிரி மாவட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் எண்ணற்றோர் வாகனங்களில் ஊட்டிக்கு படையெடுத்தனர்.

    இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு உள்ள விடுதிகளில் தங்குவதற்கு போதிய அறைகள் கிடைக்கவில்லை. மேலும் அதிக கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நீலகிரியில் தங்கியிருந்து ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடும்ப த்துடன் சென்று அங்கு உள்ள இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பச்சைப்பசேல் மலைத்தொ டர்களை கண்டுகளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனை முன்னிட்டு அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு இருந்தன. மேலும் கண்ணாடி மாளிகையில் வித, விதமான பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டு உள்ளன.

    அலங்கார மாடத்திலும் பல்வேறு தினுசுகளில் வித, விதமான தொட்டிகளில் பூச்செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தாவரவியல் பூங்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள் ளன. அவை தற்போது பூத்து குலுங்கி வருகின்றன.

    எனவே ஊட்டி தாவர வியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் பெரிய புல்வெளி மைதானங்களில் இருந்து ஊட்டி பூங்காவின் பேரழகை கண்டு மகிழ்ந்து பொழுது போக்கி வருகின்றனர்.

    ஊட்டியில் தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சி கரம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அதிகளவு பார்க்க முடிந்தது. மேலும் ஊட்டியில் உள்ள முக்கிய கடைவீதிகள் மற்றும் போக்குவரத்து சாலைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியது.

    இதுதவிர ஊட்டியில் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா வாகனங்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்கார ணமாக கமர்சியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் அனைத்து சாலைளும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டன.

    நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தை சீர்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்தை சரிப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வரத்து குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்விடுமுறை காலம் என்பதால் கடந்த 21-ந்தேதி முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    அன்றைய நாளில் மட்டும் 10,539 பேர் தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்தனர். இதற்கு அடுத்த நாள் 16,982 பேரும், 23-ந்தேதி ஆயுதபூஜை அன்று 20,957 பேரும் வந்திருந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 4 நாட்களில் மட்டும் சுமார் 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    • மாரிமுத்து, கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் போலீசார் மாரிமுத்துவின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 44). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்து கோத்தகிரி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் மாலை மாரிமுத்து வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூஜை நடத்துவதற்காக செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார்சைக்கிளில் சென்றார். அதன்பிறகு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாரிமுத்துவின் மனைவியும், குடும்பத்தினரும் அவரை தேடத் தொடங்கினர்.

    இந்தநிலையில் மாரிமுத்து, கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் போலீசார் மாரிமுத்துவின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மாரிமுத்துவுக்கும், கோவில்மேடு பகுதியில் வசித்த தனலட்சுமி (25) என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. தனலட்சுமியை தேடியபோது அவர் தலைமறைவாகி இருந்தார். தனிப்படை போலீசார் விசாரித்தபோது தனலட்சுமி, உதயகுமார் (37) என்பவருடன் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரித்தபோது அவர்கள் 2 பேரும் சேர்ந்து தான் மாரிமுத்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

    கைதான தனலட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் வேலைக்கு சென்று வந்தேன். நான் கடந்த 2013-ம் ஆண்டு சோலூர்மட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி எம்.கைகாட்டி, பாண்டியன் நகரைச் சேர்ந்த உதயகுமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நெருங்கி பழகியதில் நான் கர்ப்பம் ஆனேன். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர் உதயகுமார் என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் எனக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்களை பிரியாமல் அவர் என்னுடன் தொடர்பில் இருந்தார். உதயகுமார் வீட்டுக்கு வரும் சமயத்தில் எனது குழந்தைகளை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விடுவேன். பின்னர் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

    இந்தநிலையில் கோத்தகிரி கோவிலில் பூசாரியாக பணியாற்றும் மாரிமுத்துவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உதயகுமாருக்கு தெரியாமல் அவருடன் ஜாலியாக இருந்தேன்.

    கடந்த 23-ந்தேதி உதயகுமார் என் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். இதனால் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு உதயகுமாருக்காக தயாராக இருந்தேன். இரவு 8.30 மணி அளவில் நான் எதிர்பாராத வகையில் மாரிமுத்து எனக்கு போன் செய்து உன்னை சந்திக்க வருவதாக தெரிவித்தார். உதயகுமார் வருவதாக கூறி இருப்பதால் நீ வராதே என அவரிடம் கூறினேன். ஆனால் எனது பேச்சை பொருட்படுத்தாமல் மாரிமுத்து என் வீட்டுக்கு வந்து விட்டார்.

    உதயகுமார் வந்தால் பிரச்சனை ஆகி விடும் என்பதால் உடனே இங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கூறினேன். குடிபோதையில் இருந்த மாரிமுத்து நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் என்னுடன் உல்லாசமாக இருக்க என்னை கட்டாயப்படுத்தினார். எப்படியும் அவரை வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதால் மாரிமுத்துவின் ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருந்தேன். அதன்பிறகும் மாரிமுத்து அங்கிருந்து போக மறுத்து என்னுடன் தகராறு செய்தார். அவர் என் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார். சோபாவின் மீது விழுந்ததில் எனக்கு தலையிலும், முகத்திலும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அதற்குள் இரவு 9.30 மணி ஆகி விட்டது. உதயகுமார் சொன்னபடி வீட்டுக்கு வந்து விட்டார்.

    எனக்கு தலையில் ரத்தம் வருவதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், மாரிமுத்துவை தாக்கினார். நானும் அவருடன் சேர்ந்து தாக்கினேன். இதில் மாரிமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவர் அணிந்திருந்த வெள்ளி செயின், காப்பு மற்றும் செல்போனை திருடினோம். பின்னர் வீட்டு அருகே மாரிமுத்துவின் பிணத்தை வீசினோம்.

    இரவு நேரம் ஆகி விட்டதால் நானும், உதயகுமாரும் வீட்டிலேயே தங்கியிருந்தோம். காலையில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றோம். போலீசில் பிடிபட மாட்டோம் என கருதி இருந்தோம். ஆனால் போலீசார் விசாரித்து எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    மாரிமுத்துவை கொலை செய்தபோது தனலட்சுமி நைட்டி அணிந்திருந்துள்ளார். மாரிமுத்துவை கொலை செய்ததால் நைட்டியில் ரத்தக்கறை பட்டுள்ளது. அந்த நைட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனலட்சுமியையும், உதயகுமாரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

    ×