search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் பஸ் விபத்தில் இறந்தவர்களுக்காக கூட்டு பிரார்த்தனை
    X

    குன்னூர் பஸ் விபத்தில் இறந்தவர்களுக்காக கூட்டு பிரார்த்தனை

    • நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி, குன்னூர் டி.எஸ்.பி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளை யம் தேசிய நெடுஞ்சாலை யில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஊட்டிக்கு 61 பேர் பஸ்சில் சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது, குன்னூர் மரப்பாலம் பகுதியில் வந்த போது சுற்றுலா பஸ் திடீரென பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பஸ் விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குன்னூரை சேர்ந்த இந்து முஸ்லிம், கிறிஸ்டியன் அமைப்பினர் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத போதகர்கள் அவர்களது முறைப்படி பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. சவுந்தர்ராஜன், குன்னூர் டிஎஸ்பி குமார், குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முத்துசாமி மற்றும் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாஷிம் ராஜா, சமுக ஆர்வலர் உஷாபிரங்களின், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர், மணிகண்டன், குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விபத்து நடந்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கினார்.

    Next Story
    ×