என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.
    • சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

    ஊட்டி

    தமிழகத்தில் பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்வேறு தரப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் உள்ள கேரள எல்லைகளான நாடுகாணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

    ஒரு பஸ்சில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் 3 தாசில்தார்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் வருகிற 30-ந் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதிக்கு வருகை தரும் ராகுல் காந்தியை முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தி.மு.க.வினர் பங்கேற்று அவரை வரவேற்போம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் மாவட்ட அவைத் தலைவா் பில்லன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளா் பா.மு.முபாரக் வரவேற்றாா். அப்போது அவா் கூறியதாவது: -

    தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நாளை (28-ந் தேதி) ஊட்டி மற்றும் குன்னூரில் தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

    அதேபோல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கி உள்ள இந்திய ஒற்றுமைக்கான நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். கேரள மாநிலம் வழியாக தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் 29-ந் தேதி கூடலூா் வழியாக கா்நாடக மாநிலம் செல்ல உள்ளாா். இதில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் பகுதிக்கு வருகை தரும் ராகுல் காந்தியை முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி தி.மு.க.வினர் பங்கேற்று அவரை வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளா்கள் ரவிகுமாா், தமிழ்செல்வன், விஜயாமணிகண்டன், நகர செயலாளா்கள் ஜாா்ஜ், ராமசாமி, ஒன்றிய செயலாளா்கள் லியாகத் அலி, லாரன்ஸ், காமராஜ், கண்டோன்மென்ட் நகரிய செயலாளா் மாா்டின், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், துணைத் தலைவா் உமா ராஜன், நகராட்சி தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின், பரிமளா, சிவகாமி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் ராம்குமாா், மாயன், பேரூராட்சி தலைவா்கள் கலியமூா்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, சித்ராதேவி, வள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
    • மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது

    ஊட்டி,

    குன்னூரில் அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது

    மாவட்ட செயலாளர் முருகன் மூன்னிலை வகித்தார் பொருளாளர் பிராகரன், துணை தலைவர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் ராயப்பன் கலந்து கொண்டார். குன்னூர் நகர தலைவர் சிவகுமார் வரவேற்றார். செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    அனைத்து தொழிலா ளர்களுக்கும் தாமதம் இன்றி சங்கத்தில் பதிவு செய்யவும் அனைத்து தகுதியான உண்மையான தொழிலாளர்கள் மட்டும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், அவர்கள் பாதிக்க ப்படும் போது உடனடியாக நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை வேண்டும் என தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டது.

    மாவட்ட தலைவர் கார்த்திக், கட்டுமான தொழிலா ளர்கள் பணியின் போது பாதுகாப்பாகவும் , கவனமாகவும் விழிப்புணர்வுடனும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    • கைரேகை நிபுணர்கள் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
    • ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ஊட்டி

    ஊட்டி நகராட்சி மாா்க்கெ ட்டில் உள்ள 19 கடை களின் பூட்டை உடைத்து ரூ.31 ஆயிரம் திருடப்ப ட்டிருந்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமை யிலான போலீசார் மார்க்கெட் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அதில் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் புகுந்த வாலிபர் கடையை உடைத்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    விசார ணையில் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது ஊட்டி பாம்பேகேசில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 22) என்பது தெரயிவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மனோஜை கைது செய்தனர்.

    பின்னர் அவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார்.
    • கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகிறார்.

    ஊட்டி:

    பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    பாத யாத்திரையை அவர் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ந் தேதி கேரளாவிற்கு சென்றார்.

    11-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி.மீ தூரத்தை கடந்து உள்ளது. இன்று அவர் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகிறார்.

    அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் ராகுல்காந்தி கோழிப்பாலத்தில் இருந்து 6 கி.மீ தூரம் பாத யாத்திரையாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வருகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் பாதயாத்திரையாக வருகிறார்கள்.

    கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதிக்கு வரும் ராகுல்காந்தி, மாலை 4 மணிக்கு அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    தொடர்ந்து அன்று இரவு அவர் கூடலூரில் உள்ள பள்ளி மைதானத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 30-ந்தேதி கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் ராகுல்காந்தி அங்கு தனது பாதயாத்திரையை தொடங்க உள்ளார்.

    கூடலூர் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி வன கிராமங்களுக்குள் அவர்கள் புகுந்து வருகின்றனர்.

    தற்போது ராகுல்காந்தி கூடலூர் வருவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதையொட்டி கூடலூரில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கூடலூர் வந்தார்.

    பின்னர் கூடலூரில் ராகுல்காந்தியின் வருகையை முன்னிட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இருந்து தொண்டர்களை அழைத்து வந்து சிறப்பான வரவேற்பு கொடுப்பது, பாத யாத்திரையில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து அவர் பொதுக்கூட்டம் நடக்க உள்ள புதிய பஸ்நிலைய பகுதிக்கு சென்றார். அங்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி மற்றும் இதர பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
    • சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கோடநாடு காட்சி முனையும் கண்டு களிக்கின்றனர்.

    அரவேணு

    கோத்தகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

    தற்போது விடுமுறை நாள் என்பதால் இயற்கை எழில் சூழ மிதமான காலம் வெப்பநிலை கொண்டு இருப்பதாலும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் தற்போது இப்பகுதியில் வெகுவாக சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களித்து ரசித்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா ்தலங்களையும் இயற்கைகளையும் கண்டு ரசிக்கும் காட்சியை காண முடிகிறது. சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கோடநாடு காட்சி முனையும் கண்டு களிக்கின்றனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் விளக்கமாக பேசப்பட்டது.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குஞ்சப்பனை ஊராட்சி சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ரம்யா மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 மையங்களில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

    கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் காலை துவங்கிய தடுப்பூசி முகாமை நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பலர் உடன் இருந்தனர். பேரூராட்சி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக் கொண்டு பயனடையலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

    • ஷாஸ்வத் 42 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
    • தங்கப்பதக்க வென்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

    ஊட்டி,

    ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகர் ஸ்டேடியத்தில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. போட்டியில் நீலகிரி மாவட்டம் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மாணவன் ஷாஸ்வத் 42 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

    தங்கப்பதக்க வென்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை அஸ்மா காணும் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்குமார், ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர்.

    பாராட்டு விழாவில் மாணவர் ஷாஸ்வத் மற்றும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் அப்பாஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மாணவன் மாநில அளவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் 2-வது இடமும், மாவட்ட அளவிலான 200 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ்சில் உள்ள அனைத்து முதலுதவி சிகிச்சை பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது
    • பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குன்னூரில் இருந்து சிம்ஸ் பார்க் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் துரித ரோந்து பணிக்கு பயன்படுத்த ஹில் காப் என்ற இருசக்கர வாகனத்தை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊட்டி நகர் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    ஹில் காப் இரு சக்கர வாகனம் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 9 வாகனங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக குன்னூர் பகுதியில் காவல்துறையினர் துரித ரோந்து பணிக்கு பயன்படுத்தும் ஹில் காப் என்று கூறப்படும் இருசக்கர வாகனத்தை ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குன்னூரில் இருந்து சிம்ஸ் பார்க் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

    இதுகுறித்து ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் கூறியதாவது:-

    மலை மாவட்டங்களில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியதால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சாலை போக்குவரத்து இடையூறு குறைந்துள்ளது.

    இந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ்சில் உள்ள அனைத்து முதலுதவி சிகிச்சை பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது இதை பெண் காவலர்களும் சிறப்பாக இயக்கி வருகிறார்கள். இதில் போலீசாரிடம் உள்ள காமிரா அவர்களை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் படம் பிடித்து காட்டக் கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 நாள் விடுமுறையால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த நாட்களில் 16,000 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனா்.

    ஊட்டி,

    ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிவடைந்திருந்தாலும், அப்போது தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, ஊட்டிக்கு வரமுடியாத சுற்றுலா பயணிகள் தற்போது ஊட்டிக்கு தொடா்ந்து வருகின்றனா். இதில், ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த நாட்களில் 16,000 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனா்.

    அதேபோல, ஊட்டி அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2 நாள்களில் சுமாா் 10,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். ஊட்டி படகு இல்லத்திற்கு சுமாா் 9000 பேரும், பைக்காரா படகு இல்லத்திற்கு 6000 பேரும் வந்துள்ளனா். இதுதவிர, வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள அவலாஞ்சி, பைக்காரா நீா்வீழ்ச்சி, பைன் பாரஸ்டு, சூட்டிங் மேடு மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் உள்ளது. தற்போது தசரா பண்டிகை காலமென்பதால், கா்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களில் அக்டோபா் முதல் வாரத்தில்தான் விடுமுறை அளிக்கப்படும். இதனால், அக்டோபா் மாதத்திலும் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    • அதிர்ஷ்டவசமாக குழந்தையும், தாயும் உயிர் தப்பினர்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் நேற்று காமராஜர் சதுக்கத்தில் இருந்து டானிங்டன் நோக்கி அதிவேகமாக கார் ஒன்று சென்றது. அந்த கார் ஓட்டுனர் அவ்வழியாக கைக்குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது லேசாக மோதி விட்டு நிறுத்தாமல் சென்றார். இதில் அதிர்ஷ்டவசமாக குழந்தையும், தாயும் உயிர் தப்பினர். இதையடுத்து அவ்வழியாக வந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இளைஞர்கள் சிலர் டானிங்டன் விநாயகர் கோவில் அருகே காரை மறித்து நிறுத்தினர். காரை ஓட்டிச் சென்றவர் குடி போதையில் இருந்ததால், அவரைப் பிடித்து வைத்த பொதுமக்கள் இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாபுவிடம், குடி போதையில் காரை ஓட்டியவரை ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோத்தகிரி அருகே உள்ள பாமுடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 44) என்பது தெரிய வந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    ×