search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    19 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
    X

    19 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

    • கைரேகை நிபுணர்கள் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
    • ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ஊட்டி

    ஊட்டி நகராட்சி மாா்க்கெ ட்டில் உள்ள 19 கடை களின் பூட்டை உடைத்து ரூ.31 ஆயிரம் திருடப்ப ட்டிருந்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமை யிலான போலீசார் மார்க்கெட் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அதில் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் புகுந்த வாலிபர் கடையை உடைத்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    விசார ணையில் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது ஊட்டி பாம்பேகேசில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 22) என்பது தெரயிவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மனோஜை கைது செய்தனர்.

    பின்னர் அவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×