என் மலர்
நாமக்கல்
- பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.
- ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.
தீவிர தாக்குதலுக்கு உண்டான செடிகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படும். ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.
டிரைகோகிரமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 நாட்கள் இடை வெளியில் இரு முறை வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். இமிடாகுளோப்பிரைட் அல்லது குளோரிபைரிபாஸ் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி
- நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (45).
நேற்று சுப்பிரமணி பரமத்தி அருகே உள்ள கோனூருக்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கந்தம்பாளையத்திற்கு மொபட்டில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.
இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் சங்கர் நகரை சேர்ந்த மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது.
- 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை.
நாமக்கல்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களை நம்பி தான் நான் இருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி பெறுவோம். கல்வி, மருத்துவம், தண்ணீர் என எல்லாற்றையும் விற்றுவிட்ட நிலையில், தற்போது குழந்தைகளை விற்று வருகின்றனர். மூளைச்சாவு என்ற நோயை உருவாக்கி, மனிதனின் உடல் உறுப்புகளை விற்கின்றனர்.
ஒழுகும் பள்ளிகளை சீரமைக்க முடியாத அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து சமாதி கட்டுகிறது. தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் எனக் கூறி வருகிறார். ஆனால் ஆசிரியர்கள், செவிலியர்கள் எதற்காக போராட்டம் நடத்துகின்றனர்?. மகளிர் உரிமை தொகைக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி தமிழக அரசு செலவு செய்கிறது. யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள்?. 60 ஆண்டுகளாக, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.
'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை. நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்திற்கு, இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்சனைதான். காரணம், நடிகர் விஜய் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வருவார் என்பதால் தான் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர் நடிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்ய முடியும். தேவையில்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
- கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்கள் வரப்பெற்றன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு 7,800 ரூபாய் மதிப்பில் நடைபயிற்சி சாதனம், ஒருவருக்கு 2,500 ரூபாய் மதிப்பில் ஊன்று கோல் என மொத்தம் 5 பேருக்கு 10 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அவற்றை, கலெக்டர் உமா, பள்ளி மாணவ, மாணவியர் பார்வை யிட்டனர். தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில் தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை மூதாட்டியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
- பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி இரட்டை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் (65).
சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அதிகாலையில் சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். சண்முகம் மீதும் மிளகாய் பொடியை தூவி விட்டு இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். இதில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
மறுநாள் காலை சண்முகத்தின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் பேலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை மூதாட்டியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் தனிப்படை டி.எஸ்.பி வின்சென்ட், இன்ஸ்பெக்டர் இந்திராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மர்மநபர்களை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகத்தை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி இரட்டை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மர்ம நபர்கள் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கணவரும் இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.
- அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
நாமக்கல்:
குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாமக்கல் கொடை பவுண்டேசன் சார்பாக வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வளையப்பட்டி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி தமிழ்செல்வன், புதுப்பட்டி தலைமை ஆசிரியர்ஆண்ட்ரூஸ் மற்றும் கொடை பவுண்டேசன் நிர்வாகி பூங்கோதை ஜெயக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
- சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டை மேடு பகுதி சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார்.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி நகரில் வசிப்பவர் வெங்கடேசன் (62). இவர் சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டை மேடு பகுதி சர்வீஸ் சாலை யில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றும் இடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே வெங்கடே சனின் மகன் பாலாஜி (43) நேற்று காலை தந்தையை காண அவர் பணியாற்றும் இடத்திற்கு வந்தபோது தான் விபத்து நடந்தது குறித்து அருகில் உள்ளவர்கள் மூலம் தெரிந்து கொண்டார்.
பின்னர் இது குறித்து குமாரபாளையம் போலீசில் பாலாஜி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.
- பொத்தனூர் பேரூராட்சியில் 6-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
- மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 6-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர், செயல் அலுவலர் திலகராஜ், வார்டு உறுப்பினர்கள் இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 2-வது வார்டு பகுதிகளில் உள்ள செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.
- புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
- குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவரது மனைவி நாகதேவி (26). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 7-ந் தேதி சூரியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகதேவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் 3-வது பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்று தருவதாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் டாக்டர் அனுராதா என்பவரும், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த புரோக்கர் லோகாம்பாள் என்பவரும் பேரம் பேசியுள்ளனர்.
இதுகுறித்து தினேஷ் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகாம்பாளிடம் விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். மேலும் டாக்டர் அனுராதா பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் நடத்தி வந்த 2 கிளீனிக்குகளும் மாவட்டம் நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
- நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள சின்னஅய்யம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (50). இவரது மகள் கீர்த்தனா அனுஸ்ரீ(10). இருவரும் நேற்று நாமக்கல்-திருச்செங்கோடு ரோடு பெரசபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி கீர்த்தனா அனுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில், நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
- சோழசிராமணியில் 150 நெசவாளர் குடும்பங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி கடந்த 3 தலைமுறையாக 700 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் 150 நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி கடந்த 3 தலைமுறையாக 700 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு உற்பத்தி ஆகும் வேஷ்டி, துண்டு, சேலைகள் கோ ஆப்டெஸ்க்கு அனுப்பட்டு வருகின்றன.
இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பாவடி முத்துகுமாரசாமி கோவில் இடத்தில் நூலை காய வைத்து பதனிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தில் நிரந்தரமாக நெசவு தொழில் செய்ய அரசு உரிய பட்டா வழங்கக் கோரி நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
- சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். போனஸ் பேச்சு வார்த்தையில் அரசு தலையிட வேண்டும் என வலிறுத்தி காவிரி, வசந்தநகர், ஆயக்காட்டூர், ஆக்ரஹாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.






