என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொத்தனூர் பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
பொத்தனூர் பேரூராட்சியில்ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்
- பொத்தனூர் பேரூராட்சியில் 6-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
- மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 6-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர், செயல் அலுவலர் திலகராஜ், வார்டு உறுப்பினர்கள் இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 2-வது வார்டு பகுதிகளில் உள்ள செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.






