search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்
    X

    விசைத்தறி தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். 

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்

    • சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். போனஸ் பேச்சு வார்த்தையில் அரசு தலையிட வேண்டும் என வலிறுத்தி காவிரி, வசந்தநகர், ஆயக்காட்டூர், ஆக்ரஹாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×