search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமணங்களை தடுக்கநாமக்கல்லில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    குழந்தை திருமணங்களை தடுக்கநாமக்கல்லில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

    • குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.
    • அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

    நாமக்கல்:

    குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாமக்கல் கொடை பவுண்டேசன் சார்பாக வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் வளையப்பட்டி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி தமிழ்செல்வன், புதுப்பட்டி தலைமை ஆசிரியர்ஆண்ட்ரூஸ் மற்றும் கொடை பவுண்டேசன் நிர்வாகி பூங்கோதை ஜெயக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    Next Story
    ×