என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.
    • மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்றிரவு மனைவி பிரேமா மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டின் உரிமையாளரும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

    நகை திருட்டு

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு திரும்பிய சுப்ரமணியம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.
    • விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    ராசிபுரம்:

    நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் - தமிழரசி தம்பதியின் மகள் தீபலட்சுமி (28). விஜய், தீபலட்சுமி இருவரும் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது இருவரும் காதலித்து 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சர்வேஸ்வரன் (5), நிதிலேஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    தற்கொலை

    நேற்று முன்தினம் விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து விஜய் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து பார்க்கச் சொல்லி உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது தீபலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், விஜய் மற்றும் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபலட்சுமியின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தீபலட்சுமியின் தாயார் தமிழரசி நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீபலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆன 6 வருடங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    • வட்டார அளவிலான சங்கமிப்போம், சமத்துவம், படைப்போம் என்ற தலைப்பில் கலை திருவிழா நிகழ்ச்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்புகுழு ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நாமக்கல் மாவட்டம் நடத்தும் வட்டார அளவிலான சங்கமிப்போம், சமத்துவம், படைப்போம் என்ற தலைப்பில் கலை திருவிழா நிகழ்ச்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் முன்னாள் நகர் மன்ற தலைவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்புகுழு ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள இறையமங்கலம், மாணிக்கம் பாளையம், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா தொடங்கி 6 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, களி மண்ணால் பொருள்களை செய்யும் போட்டி, தலைப்பை ஒட்டி ஓவியம் வரைதல், நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கலைத் திருவிழா வருகிற 21-ந் தேதி வட்டார அளவில் நிறைவு பெறுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை பராமரிப்புக்கான பரிசுகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன புல் கரணைகள், தாது உப்பு கலவைகள் ஆகியவற்றை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத தொலைதூர உட்கிராமங்களில் பொதுமக்களுக்கு கால்நடை வசதி கிடைக்கும் வகையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், சிறு கண்காட்சி, சிறந்த கால்நடை வளர்ப்பு முறை பின்பற்றும் விவசாயிகளுக்கு விருது மற்றும் கன்றுகளுக்கு பரிசு வழங்குதல், சுகாதார நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.

    மாவட்டத்தில் 300 முகாம்கள்

    2023-2024-ம் நிதியாண்டில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் நாமக்கல் மாவட்டத்தில் 300 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே கால்நடை முகாம் நடைபெறும்போது கிராம மக்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    முகாமில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஏ.கே.பாலச்சந்திரன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் அருண் பாலாஜி, உதவி இயக்குனர்கள் மருதுபாண்டி, முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்தது.
    • கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. தற்போது மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விட்டு தழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர், பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குறும்பல மகாதேவி, சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், ஆனங்கூர், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவும் சுமார் 8 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்தது.

    இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக் கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள், கம்மங்கூழ் விற்பனை கடைகள், கரும்பு ஜூஸ் விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் மாறி குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. தற்போது மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விட்டு தழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • குமாரபாளையம் , சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது.
    • இரவில் மழை கொட்டியது. குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால் கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. பின்னர் இரவு தொடங்கிய கனமழை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையோர வியாபாரிகள், இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் பெரிதும் பாதிப்படைந்தனர். சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் இரவில் மழை கொட்டியது. குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால் கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இந்த நிலையில் குமாரபாளையம் பகுதியில் மழை நீடிப்பதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள‌ நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.
    • ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.

    தீவிர தாக்குதலுக்கு உண்டான செடிகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படும். ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.

    டிரைகோகிரமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 நாட்கள் இடை வெளியில் இரு முறை வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். இமிடாகுளோப்பிரைட் அல்லது குளோரிபைரிபாஸ் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    மேலும் உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி
    • நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (45).

    நேற்று சுப்பிரமணி பரமத்தி அருகே உள்ள கோனூருக்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கந்தம்பாளையத்திற்கு மொபட்டில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.

    இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் சங்கர் நகரை சேர்ந்த மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது.
    • 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை.

    நாமக்கல்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களை நம்பி தான் நான் இருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி பெறுவோம். கல்வி, மருத்துவம், தண்ணீர் என எல்லாற்றையும் விற்றுவிட்ட நிலையில், தற்போது குழந்தைகளை விற்று வருகின்றனர். மூளைச்சாவு என்ற நோயை உருவாக்கி, மனிதனின் உடல் உறுப்புகளை விற்கின்றனர்.

    ஒழுகும் பள்ளிகளை சீரமைக்க முடியாத அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து சமாதி கட்டுகிறது. தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் எனக் கூறி வருகிறார். ஆனால் ஆசிரியர்கள், செவிலியர்கள் எதற்காக போராட்டம் நடத்துகின்றனர்?. மகளிர் உரிமை தொகைக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி தமிழக அரசு செலவு செய்கிறது. யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள்?. 60 ஆண்டுகளாக, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன.

    'ஜெயிலர்' திரைப்படத்திற்கு எந்தவித இடையூறும் வரவில்லை. நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்திற்கு, இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்சனைதான். காரணம், நடிகர் விஜய் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வருவார் என்பதால் தான் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர் நடிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்ய முடியும். தேவையில்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்கள் வரப்பெற்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு 7,800 ரூபாய் மதிப்பில் நடைபயிற்சி சாதனம், ஒருவருக்கு 2,500 ரூபாய் மதிப்பில் ஊன்று கோல் என மொத்தம் 5 பேருக்கு 10 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அவற்றை, கலெக்டர் உமா, பள்ளி மாணவ, மாணவியர் பார்வை யிட்டனர். தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இதில் தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை மூதாட்டியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    • பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி இரட்டை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூர் சர்க்கரை ஆலையில் காவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் (65).

    சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அதிகாலையில் சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். சண்முகம் மீதும் மிளகாய் பொடியை தூவி விட்டு இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். இதில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    மறுநாள் காலை சண்முகத்தின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் பேலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி வேலூர் போலீஸ் நிலையத்தை மூதாட்டியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    அவர்களிடம் தனிப்படை டி.எஸ்.பி வின்சென்ட், இன்ஸ்பெக்டர் இந்திராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மர்மநபர்களை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகத்தை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி இரட்டை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    மர்ம நபர்கள் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கணவரும் இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.
    • அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

    நாமக்கல்:

    குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாமக்கல் கொடை பவுண்டேசன் சார்பாக வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் வளையப்பட்டி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி தமிழ்செல்வன், புதுப்பட்டி தலைமை ஆசிரியர்ஆண்ட்ரூஸ் மற்றும் கொடை பவுண்டேசன் நிர்வாகி பூங்கோதை ஜெயக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    ×