search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    ராசிபுரம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.
    • விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    ராசிபுரம்:

    நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் - தமிழரசி தம்பதியின் மகள் தீபலட்சுமி (28). விஜய், தீபலட்சுமி இருவரும் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது இருவரும் காதலித்து 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சர்வேஸ்வரன் (5), நிதிலேஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    தற்கொலை

    நேற்று முன்தினம் விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து விஜய் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து பார்க்கச் சொல்லி உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது தீபலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், விஜய் மற்றும் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபலட்சுமியின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தீபலட்சுமியின் தாயார் தமிழரசி நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீபலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆன 6 வருடங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    Next Story
    ×