என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலை பாம்பு பிடிபட்டது"

    • சோளக்காட்டில் பழங்குடியின மக்களின் உழவர் சந்தை அமைந்துள்ளது.
    • உழவர் சந்தையின் அருகே மலைபாம்பு ஒன்று இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சோளக்காட்டில் பழங்குடியின மக்களின் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த உழவர் சந்தையின் அருகே மலைபாம்பு ஒன்று இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உத்தரவின்பேரில் கொல்லிமலை வன சரகர் சிவானந்தம் தலைமையில் செங்கரை வனகாப்பாளர் கருணாநிதி, வாளவந்திநாடு வனகாவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி நீளமுள்ள அந்த மலைபாம்பை மீட்டு நாச்சியம்மன் கோவில் அருகே உள்ள வன காப்பு காட்டில் விட்டனர்.

    ×