search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Products Auction"

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில்18.07 குவிண்டால் எடை கொண்ட 5ஆயிரத்து 715தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.19-க்கும், சராசரி விலையாக ரூ.24.96-க்கும் என மொத்தம் ரூ.ஒரு 43ஆயிரத்து 603-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 340.47 1/2 குவிண்டால் எடை கொண்ட698-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.79.09-க்கும், சராசரி விலையாக ரூ.82.89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.35-க்கும், சராசரி விலையாக ரூ.76.99-க்கும் என மொத்தம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரத்து 811 -க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 27லட்சத்து06 ஆயிரத்து 414-க்கு விற்பனையானது.

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 40.46 குவிண்டால் எடை கொண்ட 11 ஆயிரத்து 47தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.88-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.61-க்கும், சராசரி விலையாக ரூ.22.89-க்கும் என மொத்தம் ரூ. 88ஆயிரத்து 757-க்கும் விற்பனையானது. அதேபோல்375.02 குவிண்டால் எடை கொண்ட759மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.60-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.76.36-க்கும், சராசரி விலையாக ரூ.78.05-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.70-க்கும், சராசரி விலையாக ரூ.74.56-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து 2 ஆயிரத்து 746-க்கு விற்பனையானது.

    • வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • ஒரே நாளில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.39 லட்சத்து 49 ஆயிரத்து 161-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 38.61குவிண்டால் எடை கொண்ட 9 ஆயிரத்து 685 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.69-க்கும், சராசரி விலையாக ரூ.23.19-க்கும் என மொத்தம் ரூ.85 ஆயிரத்து 835-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 362.41½ குவிண்டால் எடை கொண்ட 754 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது.

    இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.99-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.56.79-க்கும், சராசரி விலையாக ரூ.70.55-க்கும் என மொத்தம் ரூ.25 லட்சத்து 63 ஆயிரத்து 461-க்கு விற்பனையானது.

    அதேபோல் 194.02½ குவிண்டால் எடை கொண்ட 610 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் ஒரு கிலோ நிலக்கடலை காய் அதிகபட்ச விலையாக ரூ.71.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.20-க்கும், சராசரி விலையாக ரூ.68.30-க்கும் என மொத்தம் ரூ.12லட்சத்து 99 ஆயிரத்து 865-க்கு விற்பனையானது.

    ஒரே நாளில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.39 லட்சத்து 49 ஆயிரத்து 161-க்கு விற்பனையானது.

    ×