search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா
    X

    கலைதிருவிழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா

    • வட்டார அளவிலான சங்கமிப்போம், சமத்துவம், படைப்போம் என்ற தலைப்பில் கலை திருவிழா நிகழ்ச்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்புகுழு ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நாமக்கல் மாவட்டம் நடத்தும் வட்டார அளவிலான சங்கமிப்போம், சமத்துவம், படைப்போம் என்ற தலைப்பில் கலை திருவிழா நிகழ்ச்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் முன்னாள் நகர் மன்ற தலைவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்புகுழு ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள இறையமங்கலம், மாணிக்கம் பாளையம், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா தொடங்கி 6 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, களி மண்ணால் பொருள்களை செய்யும் போட்டி, தலைப்பை ஒட்டி ஓவியம் வரைதல், நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கலைத் திருவிழா வருகிற 21-ந் தேதி வட்டார அளவில் நிறைவு பெறுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×