search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில்  300 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
    X

    பெண் பயனாளி ஒருவருக்கு அமைச்சர் மதிவேந்தன் பரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில் கலெக்டர் உமா உள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் 300 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்

    • ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை பராமரிப்புக்கான பரிசுகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன புல் கரணைகள், தாது உப்பு கலவைகள் ஆகியவற்றை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத தொலைதூர உட்கிராமங்களில் பொதுமக்களுக்கு கால்நடை வசதி கிடைக்கும் வகையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், சிறு கண்காட்சி, சிறந்த கால்நடை வளர்ப்பு முறை பின்பற்றும் விவசாயிகளுக்கு விருது மற்றும் கன்றுகளுக்கு பரிசு வழங்குதல், சுகாதார நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.

    மாவட்டத்தில் 300 முகாம்கள்

    2023-2024-ம் நிதியாண்டில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் நாமக்கல் மாவட்டத்தில் 300 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே கால்நடை முகாம் நடைபெறும்போது கிராம மக்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    முகாமில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஏ.கே.பாலச்சந்திரன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் அருண் பாலாஜி, உதவி இயக்குனர்கள் மருதுபாண்டி, முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×