என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அருகே விபத்தில் 3 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியை சேர்ந்த செந்தில் நாதன் (வயது 25), இவர் நேற்று இரவு ஆயக்காரன்புலத்தில் இருந்து வாய்மேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் வாய்மேட்டில் இருந்து ஆயக்காரன்புலம் நோக்கி கோகுல் (18), சோமசுந்தரம் (35) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வாய்மேடு அருகே தகட்டூர் என்ற இடத்தில் இந்த இரு மோட்டார் சைக்களில் வந்தவர்களும் நோருக்கு நேராக மோதிக்கொண்டனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அண்ணன் இறந்த செய்தி கேட்டதும் தம்பி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு குருக்கள் பண்டாரத் தெரு, பெரியகுளக்கரையை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 56), ஆட்டோ டிரைவர். இவருடைய தம்பி பன்னீர்செல்வம் (50). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை மோசமானதால் பன்னீர் செல்வம் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதைகேட்ட அவரது அண்ணன் மதிவாணன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். அண்ணன் இறந்த செய்தி கேட்டதும் சிறிது நேரத்தில் தம்பி பன்னீர்செல்வமும் இறந்தார்.
அண்ணன், தம்பி இருவரும் சாவிலும் இணை பிரியாதது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு குருக்கள் பண்டாரத் தெரு, பெரியகுளக்கரையை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 56), ஆட்டோ டிரைவர். இவருடைய தம்பி பன்னீர்செல்வம் (50). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை மோசமானதால் பன்னீர் செல்வம் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதைகேட்ட அவரது அண்ணன் மதிவாணன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். அண்ணன் இறந்த செய்தி கேட்டதும் சிறிது நேரத்தில் தம்பி பன்னீர்செல்வமும் இறந்தார்.
அண்ணன், தம்பி இருவரும் சாவிலும் இணை பிரியாதது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீசில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் அந்தபுகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அய்யாசாமி என்பவர் புத்தகரம் கிராமத்தில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிற்கு விசாரணைக்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் செந்தில்குமாரின் மகள் மற்றும் மகன் மட்டுமே இருந்துள்ளனர்.
அப்போது அய்யாச்சாமி சிறுவனுக்கு பணம் கொடுத்து கடைக்கு அனுப்பிவிட்டு சிறுமியிடம் விசாரணை நடத்துவதுபோல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து செந்தில்குமார் இது சம்பந்தமாக நன்னிலம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறையிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து காவல் அய்யாச்சாமியை திருவாரூர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனால் திருவாரூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவலர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் எனவே பாலியல் தொல்லை கொடுத்த காவலர் அய்யாசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை நாகை மாவட்ட அனைத்து மகளிர் போலீசில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களிடம் நாகை அனைத்து மகளிர் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினர். அதில் அய்யாச்சாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் காவலர் அய்யாசாமியை போலீசார் கைது செய்தனர். 15 வயது சிறுமிக்கு காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீசில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் அந்தபுகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அய்யாசாமி என்பவர் புத்தகரம் கிராமத்தில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிற்கு விசாரணைக்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் செந்தில்குமாரின் மகள் மற்றும் மகன் மட்டுமே இருந்துள்ளனர்.
அப்போது அய்யாச்சாமி சிறுவனுக்கு பணம் கொடுத்து கடைக்கு அனுப்பிவிட்டு சிறுமியிடம் விசாரணை நடத்துவதுபோல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து செந்தில்குமார் இது சம்பந்தமாக நன்னிலம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறையிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து காவல் அய்யாச்சாமியை திருவாரூர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனால் திருவாரூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவலர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் எனவே பாலியல் தொல்லை கொடுத்த காவலர் அய்யாசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை நாகை மாவட்ட அனைத்து மகளிர் போலீசில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களிடம் நாகை அனைத்து மகளிர் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினர். அதில் அய்யாச்சாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் காவலர் அய்யாசாமியை போலீசார் கைது செய்தனர். 15 வயது சிறுமிக்கு காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே இன்று காலை ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் 12 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சென்னை மணலியில் இருந்து ஒரு சுற்றுலா வேன் சீர்காழி நோக்கி புறப்பட்டது. இதில் முருக பக்தர்கள் இருந்தனர். அந்த வேன் இன்று காலை சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு பிரிவு புறவழிச்சாலையில் வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோர கழுமலை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முருக பக்தர்கள் 12 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் . அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் வேனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மணலியில் இருந்து ஒரு சுற்றுலா வேன் சீர்காழி நோக்கி புறப்பட்டது. இதில் முருக பக்தர்கள் இருந்தனர். அந்த வேன் இன்று காலை சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு பிரிவு புறவழிச்சாலையில் வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோர கழுமலை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முருக பக்தர்கள் 12 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் . அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் வேனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சீர்காழி அருகே அனுமதியின்றி லாரியில் ஏற்றி வரப்பட்ட 21 டன் வெங்காயத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:
வெங்காயம் விலை திடீரென உயர்ந்து இருப்பதால் மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்றாக வெங்காயம் மாறி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதைபோல வெங்காயத்தையும் கொடுப்பதற்கு முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
வருகிற 27 மற்றும் 30-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுப்பதற்காக நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படையில் உள்ள அதிகாரிகள் நாகை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் லாரியில் 21 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் லாரி டிரைவரிடம் இல்லை. இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் கேட்டபோது மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இருந்து 21 டன் வெங்காயத்தை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சீர்காழி போலீசார் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட வெங்காயம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக வெங்காயம் கொண்டு வரப்பட்டதா? அல்லது விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெங்காயம் விலை திடீரென உயர்ந்து இருப்பதால் மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்றாக வெங்காயம் மாறி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதைபோல வெங்காயத்தையும் கொடுப்பதற்கு முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
வருகிற 27 மற்றும் 30-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுப்பதற்காக நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படையில் உள்ள அதிகாரிகள் நாகை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் லாரியில் 21 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் லாரி டிரைவரிடம் இல்லை. இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் கேட்டபோது மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இருந்து 21 டன் வெங்காயத்தை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சீர்காழி போலீசார் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட வெங்காயம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக வெங்காயம் கொண்டு வரப்பட்டதா? அல்லது விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் மயிலாடு துறையில் செல்போன் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை பகுதியில் குறிப்பாக இரவு நேரங்களில் செல்போன் பேசிகொண்டு செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு சம்பவம் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் மர்ம கும்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து நாகை மாவட்ட எஸ்பி.செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி.அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மேற்பார்வையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் ஏட்டுகள் நரசிம்ம பாரதி, அசோக், செந்தில், பாலா, தெய்வ சிகாமணி உள்பட போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு 11 மணியளவில் சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் வழியாக சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தில் செல்போன் பறிப்பு கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேர் சிக்கினர்.
அவர்கள் கீழமணக்கு வடக்கு தெரு வீரமணி மகன் ராம்குமார் (வயது 22), அகரமணக்குடி துரை மகன் வசந்த் (18), கார்த்தி (20), விவேக் (22), என தெரிய வந்தது.
மேலும் பெண்களிடம் வழிபறி செய்த கீர்த்தி வாசன்(19), கார்த்தி(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்
மயிலாடுதுறை பகுதியில் குறிப்பாக இரவு நேரங்களில் செல்போன் பேசிகொண்டு செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு சம்பவம் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் மர்ம கும்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து நாகை மாவட்ட எஸ்பி.செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி.அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மேற்பார்வையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் ஏட்டுகள் நரசிம்ம பாரதி, அசோக், செந்தில், பாலா, தெய்வ சிகாமணி உள்பட போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு 11 மணியளவில் சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் வழியாக சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தில் செல்போன் பறிப்பு கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேர் சிக்கினர்.
அவர்கள் கீழமணக்கு வடக்கு தெரு வீரமணி மகன் ராம்குமார் (வயது 22), அகரமணக்குடி துரை மகன் வசந்த் (18), கார்த்தி (20), விவேக் (22), என தெரிய வந்தது.
மேலும் பெண்களிடம் வழிபறி செய்த கீர்த்தி வாசன்(19), கார்த்தி(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்
நாகை பஸ் நிலையத்தில் ரூ.1¼ லட்சம் பணத்துடன் மாயமான 3 சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம்:
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் சத்யா (வயது 11) .
இவர் தனது தோழிகள் அட்சயா(11), சபினா(11) ஆகியோருடன் வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் நேற்று மாலை காணாமல் போனார்.
பின்னர் இது குறித்து செல்லூர் போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் மதுரை போலீசார், பணத்துடன் மாயமான 3 சிறுமிகளையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு நாகை புதிய பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த 3 சிறுமிகளை அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது மதுரையில் இருந்து தாங்கள் வந்ததாகவும், வேளாங்கண்ணியில் வசித்து வரும் தனது தாய் சூர்யாவை பார்க்க வந்ததாகவும், சிறுமி சத்யா கூறியுள்ளார்.
அப்போது போலீசார் சிறுமிகளிடம் துருவி துருவி விசாரித்தபோது, 3 பேரும் மதுரையில் இருந்து பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வந்ததை தெரிவித்தனர். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சிறுமிகளை மீட்ட நாகை போலீசார் எஸ்.பி அலுவலகம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நாகை எஸ்.பி செல்வநாகரத்தினம் முன்னிலையில் சிறுமிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் சத்யா (வயது 11) .
இவர் தனது தோழிகள் அட்சயா(11), சபினா(11) ஆகியோருடன் வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் நேற்று மாலை காணாமல் போனார்.
பின்னர் இது குறித்து செல்லூர் போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் மதுரை போலீசார், பணத்துடன் மாயமான 3 சிறுமிகளையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு நாகை புதிய பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த 3 சிறுமிகளை அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது மதுரையில் இருந்து தாங்கள் வந்ததாகவும், வேளாங்கண்ணியில் வசித்து வரும் தனது தாய் சூர்யாவை பார்க்க வந்ததாகவும், சிறுமி சத்யா கூறியுள்ளார்.
அப்போது போலீசார் சிறுமிகளிடம் துருவி துருவி விசாரித்தபோது, 3 பேரும் மதுரையில் இருந்து பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வந்ததை தெரிவித்தனர். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் சிறுமிகளை மீட்ட நாகை போலீசார் எஸ்.பி அலுவலகம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நாகை எஸ்.பி செல்வநாகரத்தினம் முன்னிலையில் சிறுமிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வேதாரண்யத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம். கொளப்பாடு, அரண்மனைக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் பார்த்தீபன் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது சிறிது நாட்கள் கழித்து திருமணத்தை பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் மனவேதனையில் இருந்த பார்த்தீபன் வீட்டை விட்டு வெளியேறி வேதாரண்யத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு பார்த்தீபன் தன் கைலியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பார்த்தீபனின் தாயார் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்து போன பார்த்தீபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
நாகை மாவட்டம். கொளப்பாடு, அரண்மனைக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் பார்த்தீபன் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது சிறிது நாட்கள் கழித்து திருமணத்தை பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் மனவேதனையில் இருந்த பார்த்தீபன் வீட்டை விட்டு வெளியேறி வேதாரண்யத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு பார்த்தீபன் தன் கைலியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பார்த்தீபனின் தாயார் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்து போன பார்த்தீபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தரங்கம்பாடி அருகே கடல்நீர் புகுந்து கிராமம் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ளது சின்னமேடு மீனவகிராமம். இங்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இங்குள்ள கடலில் அரிப்பு ஏற்பட்டு 1 கி.மீ. தூரத்துக்கு சின்னமேடு கிராமம் கடலில் மூழ்கிவிட்டது.
இந்த நிலையில் சில நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 50 மீட்டர் தூரம் கடல்நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் 2 வாரமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் உள்ளனர்.
கடல் அரிப்பு ஏற்பட்டால் ஊருக்குள் கடல்நீர் புகாமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சின்னமேடு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலில் நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த பொறையார் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருப்பினும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ளது சின்னமேடு மீனவகிராமம். இங்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இங்குள்ள கடலில் அரிப்பு ஏற்பட்டு 1 கி.மீ. தூரத்துக்கு சின்னமேடு கிராமம் கடலில் மூழ்கிவிட்டது.
இந்த நிலையில் சில நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 50 மீட்டர் தூரம் கடல்நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் 2 வாரமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் உள்ளனர்.
கடல் அரிப்பு ஏற்பட்டால் ஊருக்குள் கடல்நீர் புகாமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சின்னமேடு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலில் நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த பொறையார் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருப்பினும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் துணை தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் இளமதி. இவரது கணவர் அரிராமன். இவர் நாகையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். நாகை வெளிப்பாளையம் பெருமாள் கீழ வீதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருக்கும் இவர்கள் இருவரும் பணி நிமித்தம் காரணமாக தினமும் காலையில் வீட்டை பூட்டி விட்டு, மாலை வீடு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் தொடர்ந்து பகல் நேரங்களில் அவர்களது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் உள்ள இளமதியின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
நீண்ட நேரமாக வீடு திறந்து கிடப்பதைப் பார்த்து அருகில் உள்ளவர்கள் இளமதிக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து துணை தாசில்தார் இளமதி, நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து களமிறங்கியுள்ள வெளி மாநில கொள்ளையர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து இறங்கி உள்ளதாகவும், இவர்கள் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் சில வீடுகளை நோட்டமிட்டு பின்னர் ஆள் இல்லாத அந்த வீடுகளில் ரகசிய அடையாள குறியீடும், ஆள் இருக்கும் வீடுகளில் மற்றொரு ரகசிய அடையாள குறியீட்டையும் பென்சிலால் வரைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதே பாணியில் துணை தாசில்தார் இளமதி வீட்டிலும் ரகசிய குறியீட்டை வரைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கடந்த ஓரிரு மாதங்களில் நாகையில் உள்ள ஒரு அரசு பள்ளி தலைமையாசிரியர் இளமாறன் என்பவர் வீடு உள்பட பல்வேறு வீடுகளிலும் வீட்டில் உள்ளவர்கள் வழக்கமாக வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்லும் பகல்நேரத்தில் இதேபோன்ற பாணியில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் இளமதி. இவரது கணவர் அரிராமன். இவர் நாகையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். நாகை வெளிப்பாளையம் பெருமாள் கீழ வீதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருக்கும் இவர்கள் இருவரும் பணி நிமித்தம் காரணமாக தினமும் காலையில் வீட்டை பூட்டி விட்டு, மாலை வீடு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் தொடர்ந்து பகல் நேரங்களில் அவர்களது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் உள்ள இளமதியின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
நீண்ட நேரமாக வீடு திறந்து கிடப்பதைப் பார்த்து அருகில் உள்ளவர்கள் இளமதிக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து துணை தாசில்தார் இளமதி, நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து களமிறங்கியுள்ள வெளி மாநில கொள்ளையர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து இறங்கி உள்ளதாகவும், இவர்கள் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் சில வீடுகளை நோட்டமிட்டு பின்னர் ஆள் இல்லாத அந்த வீடுகளில் ரகசிய அடையாள குறியீடும், ஆள் இருக்கும் வீடுகளில் மற்றொரு ரகசிய அடையாள குறியீட்டையும் பென்சிலால் வரைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதே பாணியில் துணை தாசில்தார் இளமதி வீட்டிலும் ரகசிய குறியீட்டை வரைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கடந்த ஓரிரு மாதங்களில் நாகையில் உள்ள ஒரு அரசு பள்ளி தலைமையாசிரியர் இளமாறன் என்பவர் வீடு உள்பட பல்வேறு வீடுகளிலும் வீட்டில் உள்ளவர்கள் வழக்கமாக வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்லும் பகல்நேரத்தில் இதேபோன்ற பாணியில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் குளப்பாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ரெங்கநாதன் மகன் பார்த்திபன் (வயது 23). இவர் குளப்பாடு அரண்மனை காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று காலை ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக குளப்பாடு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஜீவானந்தம் வேலைக்கு சென்று விட்டதால் அங்கேயே பார்த்திபன் இருந்துள்ளார்.
இந்நிலையில் இரவு ஜீவானந்தம் வீட்டிற்கு வந்தபோது அங்கு பார்த்திபன் தூக்கு மாட்டி இறந்து கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் இதுபற்றி வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் குளப்பாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ரெங்கநாதன் மகன் பார்த்திபன் (வயது 23). இவர் குளப்பாடு அரண்மனை காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று காலை ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக குளப்பாடு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஜீவானந்தம் வேலைக்கு சென்று விட்டதால் அங்கேயே பார்த்திபன் இருந்துள்ளார்.
இந்நிலையில் இரவு ஜீவானந்தம் வீட்டிற்கு வந்தபோது அங்கு பார்த்திபன் தூக்கு மாட்டி இறந்து கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் இதுபற்றி வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலத்தில் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை போலீசார் நிறுத்த முயற்சித்தனர்.
ஆனால் அந்த வேன் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. உடனே குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தங்களது வாகனங்களில், அந்த சரக்கு வேனை துரத்தி சென்றனர்.
போலீசார் துரத்தி வருவதை பார்த்ததும் சரக்கு வேனில் இருந்த 2 பேர், திருவாலங்காடு கடைவீதி சாலையில் அந்த வேனை நிறுத்தி விட்டு வேனில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து அந்த வேனில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது வேனுக்குள் 100 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்களும், ஒரு கேனில் சாராயமும் இருந்தது தெரிய வந்தது. இவைகளை அந்த இருவரும் கடத்தி சென்றது தெரிய வந்தது.
பின்னர் போலீசார், 4 ஆயிரத்து 800 மது பாட்டில்கள், 250 லிட்டர் சாராயம் மற்றும்சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.






