search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermen Struggle"

    • போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவக்கரை எனும் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமத்தில் ரேஷன் கடை, சமுதாய கூடம், மீன் ஏலக்கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வில்லை எனவும், கடலில் தூண்டில் வளைவு அமைத்து தர வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும், தேர்தலின் போது பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டும் வருவதாகவும், வெற்றிக்கு பின் கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திடீரென கையில் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கடலில் இறங்கி கோஷங்கள் எழுப்பினர். கடலில் எழுந்துள்ள ராட்சத அலைகளையும் பொருட்படுத்தாது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் இளங்கோவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    கடலில் இறங்கிய போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி மீண்டும் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    16 மீனவ கிராம மக்கள் கடல் வழியாக படகில் சென்று துறைமுகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம், கப்பல் கட்டும் தளம் உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இதனால் வாழ்வாதாரம் பாதித்த மீனவ கிராம மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1,750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டு அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    மீதமுள்ள அறிவிக்கப்பட்ட 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுப்பள்ளி துறைமுக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மீண்டும் 16 மீனவ கிராம மக்கள் கடல் வழியாக படகில் சென்று துறைமுகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மீனவர்கள் சிலர் துறைமுக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறைமுக நிர்வாகத்தினர் காட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் சுமார் 400 பேர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மீனவர்களை தொடர்புகொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இதனை ஏற்காத மீனவர்கள் 16 மீனவ கிராமத்தினரிடையே பேசி இன்று தெரிவிப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    பழவேற்காடு கடற்கரை பகுதியில் உள்ள 16 கிராம மக்கள் நேற்று துறைமுக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம், கப்பல் கட்டும் தளம் இயங்கிவருகிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வாழ்வாதாரம் பாதித்த கடலோரகிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1750 மீனவர்களுக்கு துறைமுகம், கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    மீதமுள்ள 1500 பேருக்கு அனைவருக்கும் வேலைவாய்ப்பு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு கடற்கரை பகுதியில் உள்ள 16 கிராம மக்கள் நேற்று துறைமுக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட படகில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காட்டுப்பள்ளி துறைமுகத்தை முற்றுகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    பழவேற்காட்டில் முகத்துவாரம் தூர்வாராததால் வரும் 17-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டு படகுகள் மூலம் மீன் பிடிக்கிறார்கள்.

    இவர்கள் பழவேற்காடு ஏரியிலிருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். தற்போது முகத்துவாரத்தை மணல்மேடு அடைத்து விட்டது.

    எனவே, படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க செல்லவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

    பழவேற்காடு பகுதியில் உள்ள முகத்துவாரத்தை தூர்வாரி, தூண்டில் வளைவு அமைத்து தர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.

    முகத்து வாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைத்து தரும் வரை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் ஆரம்பாக்கம் மீனவர்கள் முதல் பழவேற்காடு பகுதி என 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முகத்துவாரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறோம். வருகிற 17-ந் தேதி இந்த போராட்டம் நடக்கும். அனைத்து மீனவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம்.

    முகத்துவாரத்தில் போராட அனுமதி மறுக்கப்பட்டாலும்,, குடும்பங்களாக படகில் சென்று, முகத்துவாரத்தில் திட்டமிட்டபடி வரும் 17-ந் தேதி போராட்டம் நடக்கும். இந்த போராட்டத்தின் போது மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க போகமாட்டோம். தூர்வாரி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.

    சீன என்ஜின் பயன்படுத்துவதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். #Fishermenstruggle

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓலைக் கொட்டகைமேடு என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் பழையாறு பகுதி மீனவர்கள் சீன என்ஜின் பொருத்திய படகுகளை பயன்படுத்தி இப்பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீன் வளம் வெகுவாக அப்பகுதியில் குறைந்து விட்டதாக ஓலைக்கொட்டகைமேடு மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    மேலும் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிவேக சீன என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிப்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தி தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. #Fishermenstruggle

    ×