search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பாட்டில்கள் கடத்தல்"

    • சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், நேற்று நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த காரில் இருந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர், தியாகதுருகத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி விஜயா (43) என்பதும், புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவன் வைத்திருந்த பையில் புதுச்சேரி மது பாட்டில்கள் 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ரோசனை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏட்டு வெற்றிவேல், போலீஸ்காரர் தர்மா ஆகியோர் திண்டிவனம் காலேஜ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை சோதனை செய்ய முயற்சித்தனர். அப்பொழுது அந்த நபர் தப்பிக்க முயன்றார் உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் அவனை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசா ரணையில் புதுச்சேரியை சேர்ந்த ஜானகிராமன் (வயது31) தெரிய வந்தது . மேலும் அவன் வைத்திருந்த பையில் புதுச்சேரி மது பாட்டில்கள் 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . மேலும் அவனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து அவன் வைத்திருந்த மது பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×